Skip to main content

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியை பச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிசியைச் சாப்பிட்டதால் உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அரிசியை சாப்பிடவே பயமாக இருக்கிறது. ஆனால், அதைச் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

அரிசியைப் பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். அதன் ஆபத்து தெரியாமல் தொடர்ந்து அதைச் சாப்பிடுகிறார்கள். ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவமாகத்தான் சிறுமியின் மரணச் செய்தியைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பழக்கம் பிகா (PICA ) எனப்படும். PICA என்பது கல், செங்கல், சாக்பீஸ், மண், பேப்பர் என உண்ணத்தகாத பொருள்களை உண்ணும் ஒரு பழக்கம். உங்களுக்கு இருக்கும் அரிசி சாப்பிடும் பழக்கமும் இந்த வகைதான்.

அரிசி சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி வரும். ஆனாலும், அதைச் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலில் சாப்பிடுவார்கள். அரிசி,  உணவுப்பொருள்தானே... அதைச் சாப்பிட்டால் என்ன பிரச்னை என்ற கேள்வி எழலாம்.  ஆனால், சமைக்காத அரிசியைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கும். முக்கியமாக, இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். பற்களின் எனாமலை அரித்துவிடும்.

இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது.  குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம். அரிசி, மண் போன்றவற்றைச் சாப்பிடுவதால், அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகரிக்கும். ரத்தச்சோகை அளவுக்கு அதிகமாகும்போது அது உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறலாம்.  அரிசியை பச்சையாகச் சாப்பிடுவதால், ஃபுட் பாய்சன் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம்.  குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமி, அரிசியை ஊறவைத்துச் சாப்பிடும் வழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். அப்படி ஊறவைப்பதாலும் கிருமித் தொற்று ஏற்பட்டு, ஃபுட் பாய்சன் ஆகலாம். 

இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது. குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம்.

சமைக்காத அரிசியில் பசிலஸ் சீரியஸ்  (Bacillus cereus )  எனப்படும் கிருமி இருக்கும். அதுதான் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமி. இதன் வீரியத்தைப் பொறுத்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.  சமைக்காத அரிசி சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு எப்போதும் களைப்பு, தூக்கம், முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, இந்தப் பழக்கத்தை நிறுத்துவதுதான் பாதுகாப்பானது.

எனவே, நீங்களும் சரி, உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்தப் பழக்கம் இருந்தாலும் சரி, அவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, இதிலிருந்து வெளியே வர அறிவுறுத்துங்கள். ஏதேனும் சத்துக்குறைபாடு இருக்குமானால், அதற்கான சிகிச்சை கொடுத்தாலே, இப்படிப்பட்ட வித்தியாசமான உணவுத் தேடலிலிருந்து வெளியே வரலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...