Skip to main content

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக  மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு  மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர் வருமா...? சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

ப்ரீ டயாபட்டீஸுக்கும் வாழைப்பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவோர் எல்லாம் ப்ரீ டயாபட்டிக்காக மாறுவதில்லை. ப்ரீ டயாபட்டிக்காக இருக்கும் எல்லோரும் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவோராகவும் இருப்பதில்லை.

டயாபட்டீஸ் என்பது உடலின் வளர்சிதை மாற்றம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. மலச்சிக்கல் பிரச்னைக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மலச்சிக்கல் இருந்தால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாக நம் மனதில் பதிந்து போன விஷயமாக இருக்கிறது. ஆனால், மலச்சிக்கலுக்கான காரணத்தை முதலில் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். அதன் பிறகு தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது. 

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்தாலே சிரமமின்றி மலம் வெளியேறும்.  மலச்சிக்கலுக்கு தினமும் வாழைப்பழம் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

(pre-diabetes)

இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கேற்ற உடல் உழைப்பைக் கொடுக்கிறீர்களா என்பதுதான் முக்கியம்.  அதைத் தவிர்த்து வாழைப்பழம் சாப்பிட்டதால் சுகர் வந்துவிட்டதாகச் சொல்வதில் அர்த்தமும் இல்லை, அறிவியல்பூர்வமான உண்மையும் இல்லை. 

உடல் இயக்கம் சார்ந்த பிரச்னையான நீரிழிவு என்பது நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, வயது போன்ற விஷயங்களால் தீர்மானிக்கப்படுவது. வாழைப்பழத்தை நிறுத்தியபிறகு டெஸ்ட் செய்ததில் சுகர் இல்லை என்று வந்ததாகச் சொல்லியிருப்பது நல்ல விஷயம். நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். மலச்சிக்கலுக்கான காரணம் தெரிந்து, அதற்கும் சிகிச்சை எடுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...