Skip to main content

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக  மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு  மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர் வருமா...? சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

ப்ரீ டயாபட்டீஸுக்கும் வாழைப்பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவோர் எல்லாம் ப்ரீ டயாபட்டிக்காக மாறுவதில்லை. ப்ரீ டயாபட்டிக்காக இருக்கும் எல்லோரும் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவோராகவும் இருப்பதில்லை.

டயாபட்டீஸ் என்பது உடலின் வளர்சிதை மாற்றம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. மலச்சிக்கல் பிரச்னைக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மலச்சிக்கல் இருந்தால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாக நம் மனதில் பதிந்து போன விஷயமாக இருக்கிறது. ஆனால், மலச்சிக்கலுக்கான காரணத்தை முதலில் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். அதன் பிறகு தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது. 

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்தாலே சிரமமின்றி மலம் வெளியேறும்.  மலச்சிக்கலுக்கு தினமும் வாழைப்பழம் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

(pre-diabetes)

இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கேற்ற உடல் உழைப்பைக் கொடுக்கிறீர்களா என்பதுதான் முக்கியம்.  அதைத் தவிர்த்து வாழைப்பழம் சாப்பிட்டதால் சுகர் வந்துவிட்டதாகச் சொல்வதில் அர்த்தமும் இல்லை, அறிவியல்பூர்வமான உண்மையும் இல்லை. 

உடல் இயக்கம் சார்ந்த பிரச்னையான நீரிழிவு என்பது நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, வயது போன்ற விஷயங்களால் தீர்மானிக்கப்படுவது. வாழைப்பழத்தை நிறுத்தியபிறகு டெஸ்ட் செய்ததில் சுகர் இல்லை என்று வந்ததாகச் சொல்லியிருப்பது நல்ல விஷயம். நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். மலச்சிக்கலுக்கான காரணம் தெரிந்து, அதற்கும் சிகிச்சை எடுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...