Skip to main content

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் பொறுத்து குளிர் உணர்வு மாறுபடுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் 

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

குளிர்ச்சியைத் தாங்கும் திறன் என்பது நபருக்கு நபர் மாறுபடும். மிக முக்கியமாக இது ஒருவரது 'பாடி காம்பேசிஷன்' (Body Composition) எனப்படும்  உடலில் உள்ள கொழுப்பு, தசை, எலும்பு மற்றும் நீரின் விகிதத்தைப் பொறுத்தது. அதாவது அவரது உடலில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு தசை அடர்த்தி உள்ளது, அவர்களது வளர்சிதை மாற்றம் எப்படியிருக்கிறது போன்றவற்றைப் பொறுத்தது.

உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கு அது ஒருவகையிலான காப்பு (insulation) போன்று செயல்படும். அதன் விளைவாக அவர்கள் எவ்வளவு குளிரான இடத்தில் இருந்தாலும் அதை சிரமமாக உணர மாட்டார்கள். AC செய்யப்பட்ட அறையில்கூட அவர்களில் சிலருக்கு வியர்க்கும். அதேபோல தசை அடர்த்தி அதிகமுள்ளவர்களுக்கும் வளர்சிதை மாற்ற இயக்கம் (metabolism) அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அவர்களது உடல் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவை தவிர, உடல் அளவில் மிகுந்த ஆக்டிவ்வாக இருப்பவர்கள், அதிகம் நடப்பவர்கள், ஏதேனும் வேலையைச் செய்துகொண்டே இருப்பவர்கள் எல்லோரும் உடலளவில் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்வார்கள். அதனாலும் அவர்களுக்கு அதிகம் குளிர் எடுக்காது.

நீங்கள் சாப்பிடும் உணவுகளுக்கும் இதில் பங்கிருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் அதிக காபி குடிப்பவராக இருந்தால், அது பி.எம்.ஆர் எனப்படும் 'பேசல் மெட்டபாலிக் ரேட்'டை அதிகரிக்கும். அதனால் உடலளவில் கதகதப்பாக உணர்வீர்கள்.

தசை அடர்த்தி அதிகமுள்ளவர்களுக்கும் வளர்சிதை மாற்ற இயக்கம் (metabolism) அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அவர்களது உடல் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யும்.

குளிரைத் தாங்கும் தன்மைக்கும் தைராய்டு பாதிப்புக்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு. தைராய்டு சுரப்பு குறைவாக இருக்கும்போது அதிக குளிர்ச்சியாகவும், தைராய்டு சுரப்பு அதிகமாக இருக்கும்போது சூடாகவும் உணர்வார்கள். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கு, குளிரைத் தாங்கும் திறன் குறைவாக இருக்கும். குளிர்ச்சியான வானிலை நிலவும்போது சிலருக்கு மூட்டு தொடர்பான ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ், ஃபைப்ரோமையால்ஜியா போன்ற  பிரச்னைகள் தூண்டபப்டும். வலி அதிகரிக்கும். 

உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு, ரத்த நாளங்கள் சுருங்குவதால்  உடலில் குளிரைத் தாங்கும் திறன் சற்று அதிகமிருக்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, இத்தனை விஷயங்களையும் கருத்தில் கொண்டு, எந்தக் காரணத்தால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என தெரிந்த பிறகே அதற்கான தீர்வைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...