Skip to main content

Doctor Vikatan: AC அறையில் சிலருக்கு அதிகம் குளிர்கிறது; சிலருக்கு வியர்க்கிறது... ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு ஏசியில் பயங்கரமாகக் குளிர்கிறது என்கிறார்கள். அதே இடத்தில் சிலரோ எனக்கு வியர்க்கிறது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை? அவர்கள் பொய் சொல்கிறார்களா அல்லது தோலின் தன்மையைப் பொறுத்து குளிர் உணர்வு மாறுபடுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் 

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

குளிர்ச்சியைத் தாங்கும் திறன் என்பது நபருக்கு நபர் மாறுபடும். மிக முக்கியமாக இது ஒருவரது 'பாடி காம்பேசிஷன்' (Body Composition) எனப்படும்  உடலில் உள்ள கொழுப்பு, தசை, எலும்பு மற்றும் நீரின் விகிதத்தைப் பொறுத்தது. அதாவது அவரது உடலில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு தசை அடர்த்தி உள்ளது, அவர்களது வளர்சிதை மாற்றம் எப்படியிருக்கிறது போன்றவற்றைப் பொறுத்தது.

உடலில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கு அது ஒருவகையிலான காப்பு (insulation) போன்று செயல்படும். அதன் விளைவாக அவர்கள் எவ்வளவு குளிரான இடத்தில் இருந்தாலும் அதை சிரமமாக உணர மாட்டார்கள். AC செய்யப்பட்ட அறையில்கூட அவர்களில் சிலருக்கு வியர்க்கும். அதேபோல தசை அடர்த்தி அதிகமுள்ளவர்களுக்கும் வளர்சிதை மாற்ற இயக்கம் (metabolism) அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அவர்களது உடல் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவை தவிர, உடல் அளவில் மிகுந்த ஆக்டிவ்வாக இருப்பவர்கள், அதிகம் நடப்பவர்கள், ஏதேனும் வேலையைச் செய்துகொண்டே இருப்பவர்கள் எல்லோரும் உடலளவில் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்வார்கள். அதனாலும் அவர்களுக்கு அதிகம் குளிர் எடுக்காது.

நீங்கள் சாப்பிடும் உணவுகளுக்கும் இதில் பங்கிருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் அதிக காபி குடிப்பவராக இருந்தால், அது பி.எம்.ஆர் எனப்படும் 'பேசல் மெட்டபாலிக் ரேட்'டை அதிகரிக்கும். அதனால் உடலளவில் கதகதப்பாக உணர்வீர்கள்.

தசை அடர்த்தி அதிகமுள்ளவர்களுக்கும் வளர்சிதை மாற்ற இயக்கம் (metabolism) அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அவர்களது உடல் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்யும்.

குளிரைத் தாங்கும் தன்மைக்கும் தைராய்டு பாதிப்புக்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு. தைராய்டு சுரப்பு குறைவாக இருக்கும்போது அதிக குளிர்ச்சியாகவும், தைராய்டு சுரப்பு அதிகமாக இருக்கும்போது சூடாகவும் உணர்வார்கள். அனீமியா எனப்படும் ரத்தச்சோகை பாதிப்பு உள்ளவர்களுக்கு, குளிரைத் தாங்கும் திறன் குறைவாக இருக்கும். குளிர்ச்சியான வானிலை நிலவும்போது சிலருக்கு மூட்டு தொடர்பான ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ், ஃபைப்ரோமையால்ஜியா போன்ற  பிரச்னைகள் தூண்டபப்டும். வலி அதிகரிக்கும். 

உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு, ரத்த நாளங்கள் சுருங்குவதால்  உடலில் குளிரைத் தாங்கும் திறன் சற்று அதிகமிருக்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, இத்தனை விஷயங்களையும் கருத்தில் கொண்டு, எந்தக் காரணத்தால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என தெரிந்த பிறகே அதற்கான தீர்வைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...