Skip to main content

குன்னூர்: மஞ்சள் காமாலை பதற்றத்தில் உலிக்கல் பேரூராட்சி மக்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது உலிக்கல் பேரூராட்சி. 17 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சி பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு வணிகர்கள் அதிகமுள்ள பகுதியாக இருக்கிறது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சில கிராமங்களைச் சேர்ந்த மக்களில் சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் தென்பட்டிருக்கிறது. குன்னூரில் உள்ள தனியார் உடல் பரிசோதனை மையத்தில் சோதனை மேற்கொண்டதில் சிலருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலாஸ்

அச்சமடைந்த மக்கள், கோவை மாவட்டம், கேரள மாநில எல்லைப் பகுதியில் நாட்டு வைத்தியம் மூலம் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை மூலம் சேலாஸ் பகுதியில் முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். சேலாஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக கூறப்படுவதால், மக்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், "உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களில் 6 நபர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். புதிதாக 4 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இங்கிலீஷ் மருத்துவத்தை தவிர்த்து நாட்டு வைத்தியம் பெற்று வருகின்றனர். ஊட்டி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி வருகிறோம். குடிநீர் ஆதாரங்களில் மாசு ஏற்பட்டு அதன் மூலமாக இந்த பாதிப்பு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நீர் நிலை

சேலாஸ் , பில்லிமலை, நீர்மம்முட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. காய்ச்சிய குடிநீரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிப்பதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை " என்றனர்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...