Skip to main content

Beauty: மல்லிகை... மயக்கும் வாசனையும் சில அழகுக்குறிப்புகளும்..!

''மனதை மயக்கும் மல்லிகைப்பூவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதன் வாசனை, மருந்தாகவும் பலன் தருகிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மல்லிகைப் பூ, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தருவதுடன், சருமத்தை பளபளப்பாகவும், தலைமுடியை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்'' என்கிற இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மல்லிகையின் மகத்துவத்தை மேலும் விவரிக்கிறார்.

மல்லிகை

அரைத்த சந்தனத்தை, மல்லிகைச்சாறுடன் கலந்து கண்ணுக்குக் கீழ் கருமைப் படர்ந்த இடத்தில் தினமும் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் காணாமல்போகும். பெண்கள், இதனுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து கலந்து பூசலாம்.

கண்களுக்கு அதிக வேலை தரும்போது, கண்களில் இருந்து நீர் அதிகம் வெளியேறும். இதற்கு மல்லிகைப் பூவை நீரில் கொதிக்கவிட்டு, ஆறியபின் அந்த நீரைக்கொண்டு கண்களைக் கழுவுங்கள். சோர்வும் நீங்கும். கண்களும் பளிச்சென தெரியும்.

மல்லிகைப் பூ உலர்ந்துவிட்டதே என்று தூக்கி எறியாமல், உலர்ந்த மல்லிகைப் பூ ஒரு கப் எடுத்து, அதனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, நான்கு துண்டு ஆப்பிள் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். இதைக்கொண்டு முகத்துக்குப் பேக் போடுங்கள். சிறிது நீரைக் கொதிக்கவைத்து அதில் ஃபிரெஷ் மல்லிகைப்பூவைப் போட்டு அதைக்கொண்டு முகத்தைக் கழுவுங்கள். உடலிலும் பூசிக் கொள்ளலாம். இதனால், தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். சோர்வு மறைந்து ரெட்டிப்பு பளபளப்பை தருவதுடன் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

Skin care

40 கிராம் மல்லிகைப் பூவுடன் மனோரஞ்சிதம், மகிழம் பூ, ஆவாரம் பூ இவை தலா 20 கிராம் சேர்த்து கலந்து, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவேண்டும். இரண்டு நாள்களில் பூக்களின் சாறு எண்ணெயுடன் கலந்து அடியில் தங்கிவிடும். இந்த எண்ணெயை தினமும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி 10 நிமிடம் ஊறவேண்டும். பிறகு, பயத்தமாவால் நன்றாக அலசவேண்டும். இதனால், தோலில் உள்ள சுருக்கம் மறைந்து, பொன்னிறமாக ஜொலிக்கும்; கூந்தலும் நறுமணம் வீசும்.

மல்லிகைப் பூவை உலர்த்தி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் இரண்டு டீஸ்பூனுடன், இரண்டு டீஸ்பூன் வெந்தயப் பொடியைக் கலந்து, தலைக்கு பேக் போட்டு, அரைமணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு அலச, பிசுக்கு போய், கூந்தல் பளபளக்கும். செழிப்பாக வளரும். வாசமும் வீசும்.

Sleep

உலர்ந்த மல்லிகைப் பூ - 100 கிராம், மரிக்கொழுந்து, புங்கங்காய் தோல் - தலா 50 கிராம், ரோஜா இதழ் - 20 கிராம், ஓமம் - 10 கிராம் இவற்றை மெஷினில் கொடுத்து நன்றாக பொடித்துக்கொள்ளுங்கள். வாரம் இரண்டு நாள்கள் இந்தப் பொடியை உடல் முழுவதும் தேய்த்துக் குளியுங்கள். சரும பிரச்னைகள் நீங்கும். அந்த நாள் முழுவதும் உடலில் சுகந்த மனம் வீசிக்கொண்டேயிருக்கும்.

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு மஸ்லின் துணியில் மல்லிகைப் பூவை வைத்து தலையணைக்குள் வைத்துவிடுங்கள். அறை முழுவதும் வாசம் வீசுவதுடன், தூக்கம் கண்களைத் தழுவும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க முடியும்.

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...