Skip to main content

Anger Management: ஆரோக்கியமான கோபம், உரிமை கோபம்... நம்முடைய கோபத்தை எப்படி கையாளுவது?

''சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் எனக்குக் கோபம் வருது டாக்டர். கையில கிடைச்சதைத் தூக்கி வீசறேன். பிள்ளைங்களை அடிச்சுட்டு, அப்புறம் நானே அழறேன். இது தப்புன்னு புரியுது. ஆனால், என்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியலை'' - பெரும்பாலானவர்கள் புலம்பும் வார்த்தைகள் இவை.

''கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு. தேவையான ஒரு எமோஷனல் ஃபீலிங்'' என்கிறார், சென்னையின் மூத்த மனநல மருத்துவ நிபுணரான எம். திருநாவுக்கரசு.

Angry

'கோபத்தால் ஏற்படும் விளைவு, நல்லதாக மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாததாக இருந்தால், அது ஆரோக்கியமான கோபம். உதாரணத்துக்கு, 'மகன் சரியாகப் படிக்கவில்லை; வேலையைச் செய்யவில்லை; நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை; என்றால், அப்போது வரும் கோபத்தின் விளைவுகள் யார்மேல் கோபப்படுகிறோமோ அவர்களுக்கு ஆதாயமாகத்தான் இருக்குமே தவிர, பாதிப்பை ஏற்படுத்தாது.

அடுத்தவர் பற்றி கவலையின்றி, எதற்கெடுத்தாலும் கத்துவது, ஆரோக்கியமில்லாத கோபம். உதாரணத்துக்கு, 'எனக்கு நல்லதே நடக்கலை, எந்த லாபமும் கிடைக்கலை' என்பதற்காக பிறரிடம் கோபம் கொள்வது அறியாமை, இயலாமை, பதற்றம், செய்தத் தவறை மறைக்க கோபப்படுவது மோசமானது. எல்லோருமே இந்த ஆத்திரத்தை 'கோபம்’ என்று எடுத்துக்கொள்கிறார்கள்.

கோபிப்பதற்கே வசதி வாய்ப்பு தேவைப்படுகிறது. ஒருவர், தன்னுடைய அலுவலகத்தின் மேலாளரிடமோ, உரிமையாளரிடமோ அல்லது மாநிலத்தை ஆளும் முதல்வரிடமோ கோபத்தைக் காட்ட முடியுமா? வசதி வாய்ப்பை பொறுத்து, எங்கு வெளிப்படுத்த முடியுமோ அங்குதான் கோபத்தைக் காட்டமுடியும்.

'இனி உங்கள் தயவு தேவை இல்லை’ என்றால் அவரிடத்தில் கோபப்படுவது பிரச்னையைத் தராது. ஒருவரின் தயவு தேவையாக இருக்கும்போது, அந்த நபரிடம் கோபப்படுவது பெரும் பாதிப்பைத்தான் தரும். அதை மீறியும் கோவித்துக்கொள்கிறவனுக்கு, அறிவு கம்மியாக இருக்கும்; அல்லது அவன் குழந்தையாக இருக்கவேண்டும்; அல்லது மனநலம் குன்றியவனாக இருக்கவேண்டும்.

கோபத்தைக் குறைப்பது எப்படி; கோபம் இல்லாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் சாத்தியப்படாத ஒன்று. கோபத்தை எப்படி வழி நடத்தவேண்டும் என்று அறிந்துகொள்வது அவசியம்.

கோபம்

* கோபத்தை உறவு முறைகளிடம் வெளிப்படுத்துதல்:

தவிர்க்கக்கூடிய உறவுகளிடம் கோபத்தை வெளிப்படுத்தும்போது பெரிய பாதிப்பு வராது. ஆனால், நெருங்கிய உறவுகள் எனில், நிச்சயம் பாதிப்பு ஏற்படும். உறவே முறிந்தும் விடலாம்.

* உரிமை உள்ள இடத்தில் வெளிப்படுத்துதல்:

குடும்பத்துக்குள் ஒருவர் கோபப்படும்போது, 'உரிமை இருப்பதால்தானே கோவிக்கிறார்!’ என்று எடுத்துக் கொள்வதில்லை. குடும்பத்தில் கணவனோ, மனைவியோ, 'நம்மிடம்தானே கத்த முடியும்’ என்று ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு சமாளிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். ஒரே சமயத்தில் கணவன் - மனைவி இருவரும் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும். இதனால், அந்த இடத்தில் உடனடியாக கோபம் தனிந்து சுமூகமான மனநிலை நிலவும்.'' என்றார்.

சேலம் நியூரோ ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மனநல மருத்துவர் சி.பாஸ்கர், கோபத்துக்கான சில காரணங்களை பகிர்ந்து கொண்டார்.

''மகிழ்ச்சி, துக்கம், பயம் போன்று கோபமும் மூளையின் ஒரு வெளிப்பாடுதான். மூளையிலுள்ள 'அமைக்தலா’(Amygdala) எனும் பகுதியில் ஏற்படும் ரசாயனங்களின் மாற்றத்தால் கோபம் உண்டாகிறது. கோப உணர்ச்சி, அளவுக்கு மீறும்போதும் பிரச்னையாகிறது.

'ஈ.க்யூ’ (Emotional Quotient) என்பது, உணர்ச்சிகளைச் சரியான இடத்தில் பயன்படுத்தும் விகிதத்தைக் குறிக்கும். இந்த 'ஈ.க்யூ’ அதிகமாக இருப்பவர்கள், எப்போதும் கூலாக இருப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளும் சரியாக இருக்கும்.

கோபம்

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி கோபம் வந்தால், அதை ஒரு நோயாகக் கருதி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் மற்றும் யோகா, இதமான இசையைக் கேட்பது, புத்தகம் படிப்பது எனப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். இப்படி நம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியதைக் கடைப்பிடித்தால், கோபத்தால் வரும் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன வருத்த நோய், மனப் பதற்றநோய், மனச் சிதைவு நோய் போன்ற பல நோய், கிட்ட நெருங்காது'' என்கிறார்.

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...