Skip to main content

Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?

Doctor Vikatan: என் 70 வயது பாட்டிக்கு அடிக்கடி கால் நரம்பு (கெண்டை) பிடித்துக்கொள்வதாகச் சொல்கிறார். அவர் இப்போதும் நன்றாக  விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நன்றாக நடக்கக் கூடியவர். கெண்டை பிடித்துக்கொள்ளும்போது நன்றாக எண்ணெய் தேய்த்து நீவிக் கொண்டே இருந்தால் 20 நிமிடங்களில் சரியாகிறது. கெண்டை பிடித்தல் என்றால் என்ன... இது எதனால் ஏற்படுகிறது... இதனை எப்படி சரிசெய்யலாம்...வராமல் தவிர்க்க முடியுமா?
-Agomathi, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

கெண்டை பிடிப்பது என்பதை மருத்துவ மொழியில் 'மஸுல் கிராம்ப்' (muscle cramp) என்று சொல்வோம். ஒரு தசையின் இயல்பே விரிந்து, சுருங்குதல்தான்.  இதில் சுருங்குதல் என்பதுதான் இயக்கங்களைக் கொண்டு வரும் என்றாலும், சுருங்குதலைப் போலவே விரிதலும் மிகவும் முக்கியம்.

சில சமயங்களில் சுருங்கிய தசைகள், மீண்டும் விரிவடைய முடியாமல், ரிலாக்ஸ் ஆக முடியாமல்  சுருங்கிய நிலையிலேயே இருக்கும். அதைத்தான் நாம் கெண்டை பிடிப்பது (sustained muscle contraction) என்று சொல்கிறோம். நம் உடலில் ரிலாக்சேஷனுக்கு தேவையான சில தனிமங்களும், சத்துகளும் குறையும்போது இப்படி ஏற்படலாம். இவற்றில் பிரதானமானதும் பொதுவானதும் என்றால் நீர்ச்சத்துக் குறைபாடு. குளிர்காலங்களில் கெண்டை பிடிப்பது சற்றே அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குளிர்காலங்களில் தாக உணர்வு சற்று குறைவாகவே இருக்கும்.  அடிக்கடி தண்ணீர் குடிக்காததால், அவர்களது உடலில் எளிதாக நீர்வறட்சி ஏற்படும்.

pain

வெயில் காலத்தில் நம்மை அறியாமல் நிறைய தண்ணீர் குடிப்போம். அதனால்  கோடையில் இந்தப் பிரச்னையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். சிறு வயதினருக்கும் கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வருகிறது. காரணம், இன்று பெரும்பாலும் பலரும் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருக்கிறோம். அதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ளாமல் தூங்குவதால், இது இன்னும் தீவிரமாகும்.  அடுத்து நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் என உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவதும் கெண்டை பிடிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.  சுருக்கமாக, எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் என்று இதைப் புரிந்துகொள்ளலாம். 

மூன்றாவது முக்கிய காரணம், கால்சியம் சத்துக் குறைபாடு. அடிக்கடி கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வந்தால், உடலில் கால்சியம், மக்னீசியம் மற்றும் எலக்ரோலைட் அளவுகளை செக் செய்துபார்க்க வேண்டியது அவசியம். அப்படிக் குறைபாடு இருந்தால் அதற்கான காரணம் அறிந்து சரி செய்ய வேண்டும்.  தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.  தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கெண்டைக்கால் பகுதியில் மட்டுமன்றி, பாதங்கள், பாத விரல்கள், தொடைகள், கைகள் போன்ற பகுதிகளில்கூட தசைப்பிடிப்பு வரலாம். எனவே அந்தப் பகுதிக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடுகளுக்கான மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள், தினமும் இளநீர் குடிப்பது, மோரில் உப்பு சேர்த்துக் குடிப்பது, பொட்டாசியம் சத்துக்காக வாழைப்பழம் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றலாம். இவற்றை எல்லாம் பின்பற்றிய பிறகும் பிரச்னை சரியாகவில்லை என்றால், 'நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி' என்ற டெஸ்ட் செய்து பார்த்து, நரம்புகளும் தசைகளும் நன்றாக உள்ளனா என்று பார்க்க வேண்டும்.  நரம்பியல் கோளாறு ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...