Skip to main content

Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?

Doctor Vikatan: என் 70 வயது பாட்டிக்கு அடிக்கடி கால் நரம்பு (கெண்டை) பிடித்துக்கொள்வதாகச் சொல்கிறார். அவர் இப்போதும் நன்றாக  விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நன்றாக நடக்கக் கூடியவர். கெண்டை பிடித்துக்கொள்ளும்போது நன்றாக எண்ணெய் தேய்த்து நீவிக் கொண்டே இருந்தால் 20 நிமிடங்களில் சரியாகிறது. கெண்டை பிடித்தல் என்றால் என்ன... இது எதனால் ஏற்படுகிறது... இதனை எப்படி சரிசெய்யலாம்...வராமல் தவிர்க்க முடியுமா?
-Agomathi, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

கெண்டை பிடிப்பது என்பதை மருத்துவ மொழியில் 'மஸுல் கிராம்ப்' (muscle cramp) என்று சொல்வோம். ஒரு தசையின் இயல்பே விரிந்து, சுருங்குதல்தான்.  இதில் சுருங்குதல் என்பதுதான் இயக்கங்களைக் கொண்டு வரும் என்றாலும், சுருங்குதலைப் போலவே விரிதலும் மிகவும் முக்கியம்.

சில சமயங்களில் சுருங்கிய தசைகள், மீண்டும் விரிவடைய முடியாமல், ரிலாக்ஸ் ஆக முடியாமல்  சுருங்கிய நிலையிலேயே இருக்கும். அதைத்தான் நாம் கெண்டை பிடிப்பது (sustained muscle contraction) என்று சொல்கிறோம். நம் உடலில் ரிலாக்சேஷனுக்கு தேவையான சில தனிமங்களும், சத்துகளும் குறையும்போது இப்படி ஏற்படலாம். இவற்றில் பிரதானமானதும் பொதுவானதும் என்றால் நீர்ச்சத்துக் குறைபாடு. குளிர்காலங்களில் கெண்டை பிடிப்பது சற்றே அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குளிர்காலங்களில் தாக உணர்வு சற்று குறைவாகவே இருக்கும்.  அடிக்கடி தண்ணீர் குடிக்காததால், அவர்களது உடலில் எளிதாக நீர்வறட்சி ஏற்படும்.

pain

வெயில் காலத்தில் நம்மை அறியாமல் நிறைய தண்ணீர் குடிப்போம். அதனால்  கோடையில் இந்தப் பிரச்னையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். சிறு வயதினருக்கும் கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வருகிறது. காரணம், இன்று பெரும்பாலும் பலரும் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருக்கிறோம். அதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ளாமல் தூங்குவதால், இது இன்னும் தீவிரமாகும்.  அடுத்து நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் என உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவதும் கெண்டை பிடிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.  சுருக்கமாக, எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் என்று இதைப் புரிந்துகொள்ளலாம். 

மூன்றாவது முக்கிய காரணம், கால்சியம் சத்துக் குறைபாடு. அடிக்கடி கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வந்தால், உடலில் கால்சியம், மக்னீசியம் மற்றும் எலக்ரோலைட் அளவுகளை செக் செய்துபார்க்க வேண்டியது அவசியம். அப்படிக் குறைபாடு இருந்தால் அதற்கான காரணம் அறிந்து சரி செய்ய வேண்டும்.  தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.  தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கெண்டைக்கால் பகுதியில் மட்டுமன்றி, பாதங்கள், பாத விரல்கள், தொடைகள், கைகள் போன்ற பகுதிகளில்கூட தசைப்பிடிப்பு வரலாம். எனவே அந்தப் பகுதிக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடுகளுக்கான மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள், தினமும் இளநீர் குடிப்பது, மோரில் உப்பு சேர்த்துக் குடிப்பது, பொட்டாசியம் சத்துக்காக வாழைப்பழம் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றலாம். இவற்றை எல்லாம் பின்பற்றிய பிறகும் பிரச்னை சரியாகவில்லை என்றால், 'நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி' என்ற டெஸ்ட் செய்து பார்த்து, நரம்புகளும் தசைகளும் நன்றாக உள்ளனா என்று பார்க்க வேண்டும்.  நரம்பியல் கோளாறு ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...