Skip to main content

Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?

Doctor Vikatan: என் 70 வயது பாட்டிக்கு அடிக்கடி கால் நரம்பு (கெண்டை) பிடித்துக்கொள்வதாகச் சொல்கிறார். அவர் இப்போதும் நன்றாக  விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நன்றாக நடக்கக் கூடியவர். கெண்டை பிடித்துக்கொள்ளும்போது நன்றாக எண்ணெய் தேய்த்து நீவிக் கொண்டே இருந்தால் 20 நிமிடங்களில் சரியாகிறது. கெண்டை பிடித்தல் என்றால் என்ன... இது எதனால் ஏற்படுகிறது... இதனை எப்படி சரிசெய்யலாம்...வராமல் தவிர்க்க முடியுமா?
-Agomathi, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

கெண்டை பிடிப்பது என்பதை மருத்துவ மொழியில் 'மஸுல் கிராம்ப்' (muscle cramp) என்று சொல்வோம். ஒரு தசையின் இயல்பே விரிந்து, சுருங்குதல்தான்.  இதில் சுருங்குதல் என்பதுதான் இயக்கங்களைக் கொண்டு வரும் என்றாலும், சுருங்குதலைப் போலவே விரிதலும் மிகவும் முக்கியம்.

சில சமயங்களில் சுருங்கிய தசைகள், மீண்டும் விரிவடைய முடியாமல், ரிலாக்ஸ் ஆக முடியாமல்  சுருங்கிய நிலையிலேயே இருக்கும். அதைத்தான் நாம் கெண்டை பிடிப்பது (sustained muscle contraction) என்று சொல்கிறோம். நம் உடலில் ரிலாக்சேஷனுக்கு தேவையான சில தனிமங்களும், சத்துகளும் குறையும்போது இப்படி ஏற்படலாம். இவற்றில் பிரதானமானதும் பொதுவானதும் என்றால் நீர்ச்சத்துக் குறைபாடு. குளிர்காலங்களில் கெண்டை பிடிப்பது சற்றே அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குளிர்காலங்களில் தாக உணர்வு சற்று குறைவாகவே இருக்கும்.  அடிக்கடி தண்ணீர் குடிக்காததால், அவர்களது உடலில் எளிதாக நீர்வறட்சி ஏற்படும்.

pain

வெயில் காலத்தில் நம்மை அறியாமல் நிறைய தண்ணீர் குடிப்போம். அதனால்  கோடையில் இந்தப் பிரச்னையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். சிறு வயதினருக்கும் கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வருகிறது. காரணம், இன்று பெரும்பாலும் பலரும் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருக்கிறோம். அதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ளாமல் தூங்குவதால், இது இன்னும் தீவிரமாகும்.  அடுத்து நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் என உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவதும் கெண்டை பிடிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.  சுருக்கமாக, எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் என்று இதைப் புரிந்துகொள்ளலாம். 

மூன்றாவது முக்கிய காரணம், கால்சியம் சத்துக் குறைபாடு. அடிக்கடி கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வந்தால், உடலில் கால்சியம், மக்னீசியம் மற்றும் எலக்ரோலைட் அளவுகளை செக் செய்துபார்க்க வேண்டியது அவசியம். அப்படிக் குறைபாடு இருந்தால் அதற்கான காரணம் அறிந்து சரி செய்ய வேண்டும்.  தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.  தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கெண்டைக்கால் பகுதியில் மட்டுமன்றி, பாதங்கள், பாத விரல்கள், தொடைகள், கைகள் போன்ற பகுதிகளில்கூட தசைப்பிடிப்பு வரலாம். எனவே அந்தப் பகுதிக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடுகளுக்கான மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள், தினமும் இளநீர் குடிப்பது, மோரில் உப்பு சேர்த்துக் குடிப்பது, பொட்டாசியம் சத்துக்காக வாழைப்பழம் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றலாம். இவற்றை எல்லாம் பின்பற்றிய பிறகும் பிரச்னை சரியாகவில்லை என்றால், 'நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி' என்ற டெஸ்ட் செய்து பார்த்து, நரம்புகளும் தசைகளும் நன்றாக உள்ளனா என்று பார்க்க வேண்டும்.  நரம்பியல் கோளாறு ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...