Skip to main content

Relationship: தம்பதிக்கு இடையே அன்பை உடைக்கும் 10 காரணங்கள்!

Relationship

'இட் இஸ் மை பர்சனல்' என்று சொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையே விரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது. 

சமூக ஊடகங்கள்

இணையிடம் தோன்ற ஆரம்பிக்கும் ஒளிவு, மறைவுகள் தம்பதியிடையே சந்தேகத்தை எழுப்பி உறவை உடைக்கக் காரணமாகின்றன.

காதல்

விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையே கிட்டத்தட்ட மறைந்துகொண்டிருக்கிறது. விட்டுக்கொடுத்தல் நல்ல விஷயம் என்று தெரிந்தவர்கள்கூட, 'அதை அவ பண்ணட்டுமே/அவன் பண்ணட்டுமே' என்றுதான் நினைக்கிறார்கள். 

Relationship

சினிமாக்களில் வேண்டுமானால் ஈகோ கொண்ட  நாயகனும் நாயகியும் முடிவில் இணைந்துவிடுவார்கள். ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் இது சாத்தியப்படுவதில்லை. காதலோ, திருமணமோ... உறவை உடைக்கிற உலகின் மிகப்பெரிய சுத்தியல் ஈகோ.

Relationship

இன்றைய டெக்னாலஜி விரல் நுனியில் விஷயங்களைத் தந்துவிடுவதால், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற மனப்பான்மையைப் பெரும்பாலானவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவும்கூட உறவில் இணக்கத்தைத் தகர்க்கக்கூடிய விஷயம்தான்.

ரிலேஷன்ஷிப்

'நான் என்ன சொல்ல வர்றேன்னா' என்கிற நாம், 'நீ என்ன சொல்ல நினைக்கிற' என்று அட்லீஸ்ட் ஒரு காதையாவது துணைக்குக் கொடுத்தால், ரிலேஷன்ஷிப் வலுவாக இருக்கும். இல்லையென்றால், பிரச்னைதான்.

Relationship

காலை முதல் மாலை வரை அணிகிற உடையில்கூட 'செளகர்யமாக உணர்வது' அவசியம். வாழ்க்கை முழுக்க ஒரு வீட்டுக்குள் வசிப்பவர்களுக்கு, இந்த செளகர்யம் அவசியமோ அவசியம். 

Relationship

'அய்யோ... வீட்டுக்குப்போன அந்த முகத்தைப் பார்க்கணுமே' என்கிற அளவுக்குத் துணையின் மனதில் உங்கள் மீதான எரிச்சல் இல்லாதிருப்பது அவசியம். 

Relationship conflict

துணையின் விருப்பங்களை, ரசனைகளை உங்கள் விருப்பங்கள், ரசனைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டாதீர்கள். அவரவர் ரசனை அவரவர்க்கு உசத்தி.

Relationship

காதலிலும் சரி, கல்யாணத்துக்குப் பிறகும் சரி... ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்வது எந்தக் காலத்திலும் ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது. 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...