Skip to main content

Relationship: தம்பதிக்கு இடையே அன்பை உடைக்கும் 10 காரணங்கள்!

Relationship

'இட் இஸ் மை பர்சனல்' என்று சொல்வது தம்பதிக்கு இடையே அதிகரித்திருக்கிறது. இந்த அணுகுமுறை அளவுக்கு மீறிப் போகும்போது, இந்த மனப்பான்மையே விரிசலுக்குக் காரணமாகிவிடுகிறது. 

சமூக ஊடகங்கள்

இணையிடம் தோன்ற ஆரம்பிக்கும் ஒளிவு, மறைவுகள் தம்பதியிடையே சந்தேகத்தை எழுப்பி உறவை உடைக்கக் காரணமாகின்றன.

காதல்

விட்டுக்கொடுத்தல் என்கிற வார்த்தையே கிட்டத்தட்ட மறைந்துகொண்டிருக்கிறது. விட்டுக்கொடுத்தல் நல்ல விஷயம் என்று தெரிந்தவர்கள்கூட, 'அதை அவ பண்ணட்டுமே/அவன் பண்ணட்டுமே' என்றுதான் நினைக்கிறார்கள். 

Relationship

சினிமாக்களில் வேண்டுமானால் ஈகோ கொண்ட  நாயகனும் நாயகியும் முடிவில் இணைந்துவிடுவார்கள். ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் இது சாத்தியப்படுவதில்லை. காதலோ, திருமணமோ... உறவை உடைக்கிற உலகின் மிகப்பெரிய சுத்தியல் ஈகோ.

Relationship

இன்றைய டெக்னாலஜி விரல் நுனியில் விஷயங்களைத் தந்துவிடுவதால், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற மனப்பான்மையைப் பெரும்பாலானவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவும்கூட உறவில் இணக்கத்தைத் தகர்க்கக்கூடிய விஷயம்தான்.

ரிலேஷன்ஷிப்

'நான் என்ன சொல்ல வர்றேன்னா' என்கிற நாம், 'நீ என்ன சொல்ல நினைக்கிற' என்று அட்லீஸ்ட் ஒரு காதையாவது துணைக்குக் கொடுத்தால், ரிலேஷன்ஷிப் வலுவாக இருக்கும். இல்லையென்றால், பிரச்னைதான்.

Relationship

காலை முதல் மாலை வரை அணிகிற உடையில்கூட 'செளகர்யமாக உணர்வது' அவசியம். வாழ்க்கை முழுக்க ஒரு வீட்டுக்குள் வசிப்பவர்களுக்கு, இந்த செளகர்யம் அவசியமோ அவசியம். 

Relationship

'அய்யோ... வீட்டுக்குப்போன அந்த முகத்தைப் பார்க்கணுமே' என்கிற அளவுக்குத் துணையின் மனதில் உங்கள் மீதான எரிச்சல் இல்லாதிருப்பது அவசியம். 

Relationship conflict

துணையின் விருப்பங்களை, ரசனைகளை உங்கள் விருப்பங்கள், ரசனைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டாதீர்கள். அவரவர் ரசனை அவரவர்க்கு உசத்தி.

Relationship

காதலிலும் சரி, கல்யாணத்துக்குப் பிறகும் சரி... ஒருவரையொருவர் மதித்து நடந்துகொள்வது எந்தக் காலத்திலும் ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது. 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...