Skip to main content

Health: தண்ணீரை ஊற்றியா... பாத்திரத்திலா? - காய்கறிகள், பழங்கள் கழுவும் முறைகள்!

காய்கறிகளை முறையாகச் சுத்தம் செய்து உபயோகிப்பது கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். சமையலின் கொதிநிலையில் கிருமிகள் போய்விடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும், நீரில் நன்கு சுத்தம் செய்து சமையலில் பயன்படுத்துவது தான் சுகாதாரமானதும் ஆரோக்கியமானதும். இதைப் பற்றி விளக்குகிறார், ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம் விநோத்.

காய்கறி - பழங்கள்

``ஒரு நபர் தினசரி உணவுகளில் 3 கப் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வேகவைத்தோ, பச்சையாகவோ, பச்சடியாகவோ சாப்பிடலாம். எந்தக் காய்கறியையும் பழத்தையும் சமைக்கவோ சாப்பிடவோ எடுத்துக்கொள்ளும் முன் ஒருமுறைக்கு இரண்டுமுறை நன்கு கழுவிச் சுத்தம் செய்துவிட வேண்டும்.

காய்கறிகள், பழங்களைக் கையாள்வதற்கு முன்பும், பணிகள் முடிந்த பின்பும் கைகளைக் கிருமி நாசினியாலோ சோப்பினாலோ நன்கு கழுவிவிடுதல் அவசியம்.

காய்கறி, பழங்களைக் கழுவுவதில் இரண்டு முறைகள் உண்டு. கண்ணுக்குத் தெரிந்த தூசுகளை நீக்குவது. அடுத்தது, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை நீக்குவது.

காய்கறிகளும் பழங்களும் வெளித்தூசுகளில் கிடந்து வந்திருப்பவை. எனவே, அவற்றை முதலில் சுத்தமான நீரில் நன்கு கழுவிவிட வேண்டும்.

காய்கறிகள், பழங்கள்!

அடுத்து, வெந்நீரால் கழுவ வேண்டும். சாதாரண நீரைவிட வெந்நீரால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதிகமாகவும் விரைவாகவும் அழியும். ஒருமுறை கழுவியதும் வெந்நீரை கீழே ஊற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மீண்டும் அந்த நீரைப் பயன்படுத்தக்கூடாது.

இரண்டு முறையிலும் சில விநாடிகளுக்கு நிதானமாகவும் பொறுமையாகவும் கழுவ வேண்டும். காய்கறிகளைக் கழுவுவதில் அவசரம் கூடாது.

எக்காரணம் கொண்டும் எந்தச் சூழலிலும், காய்கறி பழங்களை ஒருமுறை கழுவிய நீரை மறுமுறை கழுவுவதற்குப் பயன்படுத்தவே கூடாது.

தண்ணீரை, ஊற்றித்தான் கழுவ வேண்டும், பாத்திரத்தில் பிடித்து வைத்து பழம் காய்கறிகளைக் கழுவக் கூடாது. ஓடுகிற தண்ணீரிலேயே கிருமிகள் அழியும்.

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

கீரைவகைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் சிரத்தை அவசியம். உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் அலசலாம். இது நல்லதொரு கிருமிநாசினி முறை.

கேரட், வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளையும் ஆப்பிள் போன்ற பழங்களையும் தோலுரித்துச் சாப்பிடுகின்றனர். இது முழுக்கவே தவறானது. தோலில்தான் நிறையச் சத்துகள் நிரம்பியிருக்கும். தோலை உரித்துக் கீழே எறிவது, சத்துக்களைத் தூக்கிப் போடுவதற்குச் சமம். ஆகவே தோலோடு அவற்றைக் கழுவி சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.’’

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...