Skip to main content

Health: தண்ணீரை ஊற்றியா... பாத்திரத்திலா? - காய்கறிகள், பழங்கள் கழுவும் முறைகள்!

காய்கறிகளை முறையாகச் சுத்தம் செய்து உபயோகிப்பது கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். சமையலின் கொதிநிலையில் கிருமிகள் போய்விடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும், நீரில் நன்கு சுத்தம் செய்து சமையலில் பயன்படுத்துவது தான் சுகாதாரமானதும் ஆரோக்கியமானதும். இதைப் பற்றி விளக்குகிறார், ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம் விநோத்.

காய்கறி - பழங்கள்

``ஒரு நபர் தினசரி உணவுகளில் 3 கப் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வேகவைத்தோ, பச்சையாகவோ, பச்சடியாகவோ சாப்பிடலாம். எந்தக் காய்கறியையும் பழத்தையும் சமைக்கவோ சாப்பிடவோ எடுத்துக்கொள்ளும் முன் ஒருமுறைக்கு இரண்டுமுறை நன்கு கழுவிச் சுத்தம் செய்துவிட வேண்டும்.

காய்கறிகள், பழங்களைக் கையாள்வதற்கு முன்பும், பணிகள் முடிந்த பின்பும் கைகளைக் கிருமி நாசினியாலோ சோப்பினாலோ நன்கு கழுவிவிடுதல் அவசியம்.

காய்கறி, பழங்களைக் கழுவுவதில் இரண்டு முறைகள் உண்டு. கண்ணுக்குத் தெரிந்த தூசுகளை நீக்குவது. அடுத்தது, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை நீக்குவது.

காய்கறிகளும் பழங்களும் வெளித்தூசுகளில் கிடந்து வந்திருப்பவை. எனவே, அவற்றை முதலில் சுத்தமான நீரில் நன்கு கழுவிவிட வேண்டும்.

காய்கறிகள், பழங்கள்!

அடுத்து, வெந்நீரால் கழுவ வேண்டும். சாதாரண நீரைவிட வெந்நீரால் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதிகமாகவும் விரைவாகவும் அழியும். ஒருமுறை கழுவியதும் வெந்நீரை கீழே ஊற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மீண்டும் அந்த நீரைப் பயன்படுத்தக்கூடாது.

இரண்டு முறையிலும் சில விநாடிகளுக்கு நிதானமாகவும் பொறுமையாகவும் கழுவ வேண்டும். காய்கறிகளைக் கழுவுவதில் அவசரம் கூடாது.

எக்காரணம் கொண்டும் எந்தச் சூழலிலும், காய்கறி பழங்களை ஒருமுறை கழுவிய நீரை மறுமுறை கழுவுவதற்குப் பயன்படுத்தவே கூடாது.

தண்ணீரை, ஊற்றித்தான் கழுவ வேண்டும், பாத்திரத்தில் பிடித்து வைத்து பழம் காய்கறிகளைக் கழுவக் கூடாது. ஓடுகிற தண்ணீரிலேயே கிருமிகள் அழியும்.

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

கீரைவகைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் சிரத்தை அவசியம். உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் அலசலாம். இது நல்லதொரு கிருமிநாசினி முறை.

கேரட், வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளையும் ஆப்பிள் போன்ற பழங்களையும் தோலுரித்துச் சாப்பிடுகின்றனர். இது முழுக்கவே தவறானது. தோலில்தான் நிறையச் சத்துகள் நிரம்பியிருக்கும். தோலை உரித்துக் கீழே எறிவது, சத்துக்களைத் தூக்கிப் போடுவதற்குச் சமம். ஆகவே தோலோடு அவற்றைக் கழுவி சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.’’

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...