Skip to main content

Doctor Vikatan: சர்க்கரைநோயை விரட்டுமா கருஞ்சீரகம்- ஓமம்- வெந்தயம் கலந்த பொடி?

Doctor Vikatan: கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்- இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து வறுத்துப் பொடித்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், வேறெந்த நோய்களும் அண்டாது என பலரும் சொல்கிறார்கள். கருஞ்சீரகத்துக்கு மரணத்தையே வெல்லும் தன்மை உண்டு என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா? இந்தப் பொடியை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... இதன் பலன் என்ன?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நீங்கள் குறிப்பிட்டுள்ள கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றின் பொடிக் கலவையை நீரிழிவு பாதித்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது மட்டுமே நீரிழிவைக் கட்டுப்படுத்திவிடும் என்று நம்பக்கூடாது. 

நீரிழிவு உள்ளவர்கள், மற்ற சிகிச்சைகளோடு சேர்த்து இதையும் எடுத்துக்கொள்ளலாம். இதை எடுத்துக்கொள்வதால் சர்க்கரைநோய் தானாகக் குறைந்துவிடும் என அலட்சியமாக இருப்பதுதான் தவறு. ஆய்வுபூர்வமாகப் பார்த்தால், வெந்தயத்துக்கும் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. கருஞ்சீரகத்துக்கும் அந்தத் தன்மை உண்டு. நீரிழிவுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள், அவை சித்த மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ... அவற்றுடன் சேர்த்து இந்தப் பொடியையும் துணை உணவுப்பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் சர்க்கரை சேர்த்து காபி, டீ அருந்துவோர், அதற்கு பதிலாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் சேர்த்து அரைத்த பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்த தேநீரைக் குடிக்கலாம்.

diabetes

அஞ்சறைப் பெட்டியில் உள்ள மற்ற பொருள்களை எல்லாம்விடவும், கருஞ்சீரகத்தில் அளவுக்கதிகமான ஆன்டிக்ஸிடன்ட்ஸ் உள்ளது. குறிப்பாக, தைமோகுயினோன் என்ற வேதிப்பொருள், இதில் மிக அதிகம். கருஞ்சீரகத்துக்கு புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. செல்களைப் புதுப்பித்து, உடலின் கழிவுகளை விரைவாக வெளியேற்றி, செல்களைப் புதுப்பிக்கும் தன்மை கொண்டது கருஞ்சீரகம்.

தினமும் இதை கால் டீஸ்பூன் அளவுக்கு பொடியாக எடுத்துக்கொள்ளலாம். பருப்புப்பொடி தயாரிக்கும்போது கருஞ்சீரகத்தையும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள்கள் கருஞ்சீரகம் சேர்த்துக்கொதிக்கவைத்த டீ போன்று அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேவையில்லை. மற்றபடி பெரியவர்கள் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...