Skip to main content

Doctor Vikatan: சர்க்கரைநோயை விரட்டுமா கருஞ்சீரகம்- ஓமம்- வெந்தயம் கலந்த பொடி?

Doctor Vikatan: கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம்- இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து வறுத்துப் பொடித்து தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், வேறெந்த நோய்களும் அண்டாது என பலரும் சொல்கிறார்கள். கருஞ்சீரகத்துக்கு மரணத்தையே வெல்லும் தன்மை உண்டு என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா? இந்தப் பொடியை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா... இதன் பலன் என்ன?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நீங்கள் குறிப்பிட்டுள்ள கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றின் பொடிக் கலவையை நீரிழிவு பாதித்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது மட்டுமே நீரிழிவைக் கட்டுப்படுத்திவிடும் என்று நம்பக்கூடாது. 

நீரிழிவு உள்ளவர்கள், மற்ற சிகிச்சைகளோடு சேர்த்து இதையும் எடுத்துக்கொள்ளலாம். இதை எடுத்துக்கொள்வதால் சர்க்கரைநோய் தானாகக் குறைந்துவிடும் என அலட்சியமாக இருப்பதுதான் தவறு. ஆய்வுபூர்வமாகப் பார்த்தால், வெந்தயத்துக்கும் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. கருஞ்சீரகத்துக்கும் அந்தத் தன்மை உண்டு. நீரிழிவுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள், அவை சித்த மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ... அவற்றுடன் சேர்த்து இந்தப் பொடியையும் துணை உணவுப்பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் சர்க்கரை சேர்த்து காபி, டீ அருந்துவோர், அதற்கு பதிலாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் சேர்த்து அரைத்த பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்த தேநீரைக் குடிக்கலாம்.

diabetes

அஞ்சறைப் பெட்டியில் உள்ள மற்ற பொருள்களை எல்லாம்விடவும், கருஞ்சீரகத்தில் அளவுக்கதிகமான ஆன்டிக்ஸிடன்ட்ஸ் உள்ளது. குறிப்பாக, தைமோகுயினோன் என்ற வேதிப்பொருள், இதில் மிக அதிகம். கருஞ்சீரகத்துக்கு புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. செல்களைப் புதுப்பித்து, உடலின் கழிவுகளை விரைவாக வெளியேற்றி, செல்களைப் புதுப்பிக்கும் தன்மை கொண்டது கருஞ்சீரகம்.

தினமும் இதை கால் டீஸ்பூன் அளவுக்கு பொடியாக எடுத்துக்கொள்ளலாம். பருப்புப்பொடி தயாரிக்கும்போது கருஞ்சீரகத்தையும் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள்கள் கருஞ்சீரகம் சேர்த்துக்கொதிக்கவைத்த டீ போன்று அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேவையில்லை. மற்றபடி பெரியவர்கள் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...