Skip to main content

Doctor Vikatan: வேப்பிலையும் மஞ்சளும் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் குணமாகிவிடுமா?

Doctor Vikatan: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததாகவும், நான்காவது ஸ்டேஜில் இருந்த புற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பில்லை என மருத்துவர்கள் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து தன் மனைவிக்கு மஞ்சள், வேப்பிலை போன்றவற்றைக் கொடுத்து குணமாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால்தான் குணமடைந்திருக்கிறார். நவ்ஜோத் குறிப்பிட்டுள்ளபடி இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பது, எலுமிச்சை நீர், மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமெல்லாம் புற்றுநோய்க் கட்டிகள் குணமாகாது.

புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள் எல்லாம் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளின் மூலம்தான் குணமடைகிறார்கள். இவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினரும் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் குணமடைகிறார்கள்.

இன்னொரு பிரிவினர் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றுவது, எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி எடுத்துக்கொள்வது போன்றவற்றை மட்டும் பின்பற்றுபவர்கள். அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைப்பதில்லை. அத்தனை பேரும் உயிரிழக்கிறார்கள். நான்காவது பிரிவினர், இவற்றில் எதையுமே பின்பற்றாதவர்கள். அவர்களும் உயிர் பிழைப்பதில்லை. 

வேப்பிலை

அந்த வகையில் கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி போன்றவற்றை எடுத்துக்கொள்பவர்களும், இதே சிகிச்சைகளோடு கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்களும் புற்றுநோயிலிருந்து மீள்கிறார்கள்.  வெறும் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மட்டுமோ, அல்லது  எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவை மட்டுமோ புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தாது.

நவ்ஜோத் சிங் குறிப்பிட்டுள்ளபடி இத்தகைய தவறான செய்திகளைக் கேள்விப்படுகிற மக்கள்,  புற்றுநோய் பாதிக்கும் பட்சத்தில்  அதற்கான நவீன மருத்துவ சிகிச்சைகளை நாடாமல், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள் போன்ற விஷயங்களை நாடிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தவறான பரப்புரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.  இத்தகைய தவறான தகவல்களை நம்பி, புற்றுநோயாளிகள் சிகிச்சையை தாமதிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்நாள் குறையும் என்பதை மறக்கக்கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...