Skip to main content

Doctor Vikatan: வேப்பிலையும் மஞ்சளும் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் குணமாகிவிடுமா?

Doctor Vikatan: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததாகவும், நான்காவது ஸ்டேஜில் இருந்த புற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பில்லை என மருத்துவர்கள் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து தன் மனைவிக்கு மஞ்சள், வேப்பிலை போன்றவற்றைக் கொடுத்து குணமாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால்தான் குணமடைந்திருக்கிறார். நவ்ஜோத் குறிப்பிட்டுள்ளபடி இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பது, எலுமிச்சை நீர், மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமெல்லாம் புற்றுநோய்க் கட்டிகள் குணமாகாது.

புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள் எல்லாம் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளின் மூலம்தான் குணமடைகிறார்கள். இவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினரும் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் குணமடைகிறார்கள்.

இன்னொரு பிரிவினர் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றுவது, எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி எடுத்துக்கொள்வது போன்றவற்றை மட்டும் பின்பற்றுபவர்கள். அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைப்பதில்லை. அத்தனை பேரும் உயிரிழக்கிறார்கள். நான்காவது பிரிவினர், இவற்றில் எதையுமே பின்பற்றாதவர்கள். அவர்களும் உயிர் பிழைப்பதில்லை. 

வேப்பிலை

அந்த வகையில் கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி போன்றவற்றை எடுத்துக்கொள்பவர்களும், இதே சிகிச்சைகளோடு கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்களும் புற்றுநோயிலிருந்து மீள்கிறார்கள்.  வெறும் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மட்டுமோ, அல்லது  எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவை மட்டுமோ புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தாது.

நவ்ஜோத் சிங் குறிப்பிட்டுள்ளபடி இத்தகைய தவறான செய்திகளைக் கேள்விப்படுகிற மக்கள்,  புற்றுநோய் பாதிக்கும் பட்சத்தில்  அதற்கான நவீன மருத்துவ சிகிச்சைகளை நாடாமல், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள் போன்ற விஷயங்களை நாடிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தவறான பரப்புரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.  இத்தகைய தவறான தகவல்களை நம்பி, புற்றுநோயாளிகள் சிகிச்சையை தாமதிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்நாள் குறையும் என்பதை மறக்கக்கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...