Skip to main content

Doctor Vikatan: வேப்பிலையும் மஞ்சளும் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் குணமாகிவிடுமா?

Doctor Vikatan: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தன் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததாகவும், நான்காவது ஸ்டேஜில் இருந்த புற்றுநோயை குணப்படுத்த வாய்ப்பில்லை என மருத்துவர்கள் சொன்னதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து தன் மனைவிக்கு மஞ்சள், வேப்பிலை போன்றவற்றைக் கொடுத்து குணமாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் செல்வராஜ்.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால்தான் குணமடைந்திருக்கிறார். நவ்ஜோத் குறிப்பிட்டுள்ளபடி இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பது, எலுமிச்சை நீர், மஞ்சள், வேப்பிலை போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமெல்லாம் புற்றுநோய்க் கட்டிகள் குணமாகாது.

புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள் எல்லாம் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளின் மூலம்தான் குணமடைகிறார்கள். இவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினரும் கீமோதெரபி மற்றும் நவீன மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் குணமடைகிறார்கள்.

இன்னொரு பிரிவினர் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றுவது, எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி எடுத்துக்கொள்வது போன்றவற்றை மட்டும் பின்பற்றுபவர்கள். அவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைப்பதில்லை. அத்தனை பேரும் உயிரிழக்கிறார்கள். நான்காவது பிரிவினர், இவற்றில் எதையுமே பின்பற்றாதவர்கள். அவர்களும் உயிர் பிழைப்பதில்லை. 

வேப்பிலை

அந்த வகையில் கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி போன்றவற்றை எடுத்துக்கொள்பவர்களும், இதே சிகிச்சைகளோடு கூடவே இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்பவர்களும் புற்றுநோயிலிருந்து மீள்கிறார்கள்.  வெறும் இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மட்டுமோ, அல்லது  எலுமிச்சை நீர், மஞ்சள் தூள், ஆப்பிள் சைடர் வினிகர், வேப்பிலை, துளசி போன்றவை மட்டுமோ புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தாது.

நவ்ஜோத் சிங் குறிப்பிட்டுள்ளபடி இத்தகைய தவறான செய்திகளைக் கேள்விப்படுகிற மக்கள்,  புற்றுநோய் பாதிக்கும் பட்சத்தில்  அதற்கான நவீன மருத்துவ சிகிச்சைகளை நாடாமல், எலுமிச்சை நீர், மஞ்சள் தூள் போன்ற விஷயங்களை நாடிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற தவறான பரப்புரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.  இத்தகைய தவறான தகவல்களை நம்பி, புற்றுநோயாளிகள் சிகிச்சையை தாமதிக்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்நாள் குறையும் என்பதை மறக்கக்கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...