Skip to main content

ஒழுங்கமைக்கப்படாத சூழலால் உண்டாகும் மன அழுத்த பிரச்னை - தவிர்ப்பதற்கு தீர்வு சொல்லும் உளவியலாளர்!

அமெரிக்காவில் இருக்கக்கூடிய `அலையன்ஸ் மனநல மேம்பாட்டு அமைப்பானது' ஒரு லாபம் நோக்கம் இல்லாத பொதுச் சேவை செய்யக்கூடிய ஓர் அமைப்பாகும். இது அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் மனநலத்தையும், உடல் நலத்தையும் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே வெறி வெல் மைண்ட் (very well mind) அதாவது ஒரு சிறந்த மனநிலையை உருவாக்குவதே!

இவர்கள் ஜனவரி மாதத்தை ஒழுங்கமைக்கப்பட்ட மாதமாக தற்போது அறிவித்திருக்கிறார்கள். மேலும் உளவியல் ரீதியிலான பார்வையின் அடிப்படையில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளின் தாக்கம் குறைவாக இருப்பதும், ஒருவரின் இலக்குகளை அடைவதற்கு ஒழுங்குமுறைகள் பெரிதும் உதவுவதும் தெரியவந்திருக்கிறது. அதேபோல, ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் ஒழுங்கமைப்பு இல்லாத வீடுகளைப் பார்க்கும்போது அதிக மன அழுத்தம் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய உளவியலாளர் சு.சுபாராமன், ``ஒழுங்கமைக்கப்படுதல் என்பது ஆரோக்கிய மனநிலையின் வெளிப்பாடாகும். தேவையில்லாத பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுவதால் நம் மனம் நிம்மதி அடையும், எதிர்மறை சிந்தனைகளின் தாக்கம் குறையும் மற்றும் கவனத்தை அதிகரிக்கப் பெரிதும் உதவும். வெரி வெல் மைண்ட் என்ற திட்டத்தின் படி தேவையற்ற பொருள்களைக் குறைத்தல், சுத்தம் செய்தல், மனநலம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சக்திவாய்ந்த தொடர்பு உள்ளது.

ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கக்கூடிய நம்முடைய சூழல் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் நம்முடைய மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசால்(cortisol) அதிகமாகச் சுரப்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானவர்கள் நமக்கு மட்டும் தான் ஒழுங்கமைப்பு இல்லாத வீட்டைப் பார்க்கும் பொழுது மன அழுத்தமும் மனச்சோர்வும் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். இல்லை, நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான மனநிலை வருவது உண்டு.

சமீபத்தில் ஒரு தம்பதி (கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர்கள்) உளவியல் ஆலோசனை பெற வந்திருந்தனர்.

இருவருக்கும் வீட்டு வேலைகளை நிர்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கணவர் தன் வீட்டுப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக வேண்டுமென்றே தாமதமாக வீட்டிற்கு வருவதாக... தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதிலும் அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொள்வது, குழந்தைகளையும் மனதளவில் பாதிப்படையச் செய்திருக்கிறது. ஒருகட்டத்தில் குழந்தைகளை மாணவ விடுதியில் சேர்க்கும் அளவுக்கு யோசித்து, ஆலோசனை கேட்டு வந்திருந்தனர். இதுபோல எத்தனையோ உறவுச் சிக்கல்கள் ஒழுங்கமைப்பின் சீர்குலைவினால் ஏற்படுகிறது.

ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வாழ சில சில வழிமுறைகள் இருக்கின்றன:-

1. காலையில் எழுந்தவுடன் நாம் இன்று செய்ய வேண்டிய வேலை குறித்து to do list போடுவது மற்றும் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து (visualization) காட்சிப்படுத்திப் பார்த்தல்.

2. அனைத்து வேலைகளையும் ஒன்றாக முடிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். ஏனென்றால் எப்பேர்பட்ட திட்டம் என்றாலும் 100/100 செய்து முடிப்பது சாத்தியக்குறைவு தான். ஆகவே வேலையை பிரித்துக் கொண்டு ஒரு பாக வேலைகளில் கவனம் செலுத்தி, அதனை முடித்திவிட்டு பிறகு அடுத்த வேலைக்குச் செல்லுங்கள்.

சு.சுபாராமன் - உளவியலாளர்


3. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதை ஒரு கலையாக நினைத்துப் பின்பற்றலாம்.

4. நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களைத் தேவையுடையவர்களுக்குக் கொடுத்து விடுவது இட நெருக்கடியைச் சரிசெய்யும்.

5. ஒழுங்குபடுத்தும் வேலையை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்குச் சிரமமாக இருந்தால் ஏதாவது பாட்கேஸ்ட், ரேடியோ போன்றவற்றைக் கேட்டுக்கொண்டே அதைச் செய்யுங்கள்.

இதையெல்லாம் பின்பற்றி நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒருங்கமைப்பு சிக்கல்களிலிருந்து தீர்வு காணலாம்" என்கிறார் சுபாராமன்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...