Skip to main content

ஒழுங்கமைக்கப்படாத சூழலால் உண்டாகும் மன அழுத்த பிரச்னை - தவிர்ப்பதற்கு தீர்வு சொல்லும் உளவியலாளர்!

அமெரிக்காவில் இருக்கக்கூடிய `அலையன்ஸ் மனநல மேம்பாட்டு அமைப்பானது' ஒரு லாபம் நோக்கம் இல்லாத பொதுச் சேவை செய்யக்கூடிய ஓர் அமைப்பாகும். இது அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் மனநலத்தையும், உடல் நலத்தையும் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் நோக்கமே வெறி வெல் மைண்ட் (very well mind) அதாவது ஒரு சிறந்த மனநிலையை உருவாக்குவதே!

இவர்கள் ஜனவரி மாதத்தை ஒழுங்கமைக்கப்பட்ட மாதமாக தற்போது அறிவித்திருக்கிறார்கள். மேலும் உளவியல் ரீதியிலான பார்வையின் அடிப்படையில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளின் தாக்கம் குறைவாக இருப்பதும், ஒருவரின் இலக்குகளை அடைவதற்கு ஒழுங்குமுறைகள் பெரிதும் உதவுவதும் தெரியவந்திருக்கிறது. அதேபோல, ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் ஒழுங்கமைப்பு இல்லாத வீடுகளைப் பார்க்கும்போது அதிக மன அழுத்தம் ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய உளவியலாளர் சு.சுபாராமன், ``ஒழுங்கமைக்கப்படுதல் என்பது ஆரோக்கிய மனநிலையின் வெளிப்பாடாகும். தேவையில்லாத பொருட்களை வீட்டிலிருந்து அகற்றுவதால் நம் மனம் நிம்மதி அடையும், எதிர்மறை சிந்தனைகளின் தாக்கம் குறையும் மற்றும் கவனத்தை அதிகரிக்கப் பெரிதும் உதவும். வெரி வெல் மைண்ட் என்ற திட்டத்தின் படி தேவையற்ற பொருள்களைக் குறைத்தல், சுத்தம் செய்தல், மனநலம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சக்திவாய்ந்த தொடர்பு உள்ளது.

ஒழுங்கமைக்கப்படாமல் இருக்கக்கூடிய நம்முடைய சூழல் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் நம்முடைய மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசால்(cortisol) அதிகமாகச் சுரப்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானவர்கள் நமக்கு மட்டும் தான் ஒழுங்கமைப்பு இல்லாத வீட்டைப் பார்க்கும் பொழுது மன அழுத்தமும் மனச்சோர்வும் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். இல்லை, நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இவ்வாறான மனநிலை வருவது உண்டு.

சமீபத்தில் ஒரு தம்பதி (கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர்கள்) உளவியல் ஆலோசனை பெற வந்திருந்தனர்.

இருவருக்கும் வீட்டு வேலைகளை நிர்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கணவர் தன் வீட்டுப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக வேண்டுமென்றே தாமதமாக வீட்டிற்கு வருவதாக... தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதிலும் அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொள்வது, குழந்தைகளையும் மனதளவில் பாதிப்படையச் செய்திருக்கிறது. ஒருகட்டத்தில் குழந்தைகளை மாணவ விடுதியில் சேர்க்கும் அளவுக்கு யோசித்து, ஆலோசனை கேட்டு வந்திருந்தனர். இதுபோல எத்தனையோ உறவுச் சிக்கல்கள் ஒழுங்கமைப்பின் சீர்குலைவினால் ஏற்படுகிறது.

ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வாழ சில சில வழிமுறைகள் இருக்கின்றன:-

1. காலையில் எழுந்தவுடன் நாம் இன்று செய்ய வேண்டிய வேலை குறித்து to do list போடுவது மற்றும் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து (visualization) காட்சிப்படுத்திப் பார்த்தல்.

2. அனைத்து வேலைகளையும் ஒன்றாக முடிக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். ஏனென்றால் எப்பேர்பட்ட திட்டம் என்றாலும் 100/100 செய்து முடிப்பது சாத்தியக்குறைவு தான். ஆகவே வேலையை பிரித்துக் கொண்டு ஒரு பாக வேலைகளில் கவனம் செலுத்தி, அதனை முடித்திவிட்டு பிறகு அடுத்த வேலைக்குச் செல்லுங்கள்.

சு.சுபாராமன் - உளவியலாளர்


3. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதை ஒரு கலையாக நினைத்துப் பின்பற்றலாம்.

4. நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களைத் தேவையுடையவர்களுக்குக் கொடுத்து விடுவது இட நெருக்கடியைச் சரிசெய்யும்.

5. ஒழுங்குபடுத்தும் வேலையை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்குச் சிரமமாக இருந்தால் ஏதாவது பாட்கேஸ்ட், ரேடியோ போன்றவற்றைக் கேட்டுக்கொண்டே அதைச் செய்யுங்கள்.

இதையெல்லாம் பின்பற்றி நடைமுறைப்படுத்துவதன் மூலம், ஒருங்கமைப்பு சிக்கல்களிலிருந்து தீர்வு காணலாம்" என்கிறார் சுபாராமன்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...