Skip to main content

அதென்ன நவபாஷாணம்; அது கொடிய வியாதிகளையும் சரி செய்யுமா? - சித்த மருத்துவர் விளக்கம்

குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் நவபாஷாண தண்டாயுதபாணி கோயிலில், நவபாஷாணத்தாலான முருகன் சிலை இருக்கிறது. இந்த சிலை சுரண்டப்பட்டதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

பழனிமலைக் கோயில், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறைக்கோயில் என தமிழ்நாட்டில் சில இடங்களில் நவபாஷாண சிலைகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக, சுரண்டப்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. இன்றைக்கும் இதேபோன்றதொரு செய்தி வந்திருக்கிறது. நவபாஷாண சிலைகள் என்றால் என்ன, அதில் மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா என்று சித்த மருத்துவர் செல்வ சண்முகத்திடம் கேட்றிந்தோம்.

சித்த மருந்து

''நவபாஷாணங்கள் என்பதற்கு கல், மருந்து, நஞ்சு என்று மூன்று அர்த்தங்கள் உண்டு. நவபாஷாணம் அல்லது நவபாடாணம் என்றும் சொல்லலாம். இது மிக மிக குறைவான அளவு மனித உடலுக்குள் சென்றாலும், மரணம் நிகழ்ந்துவிடும். சித்தர்களுடைய நூல்கள் பாஷாணங்களில் 64 வகைகள் இருக்கின்றதாக சொல்கின்றன. இதில் இயற்கையாக கிடைக்கக்கூடியவை 32, செயற்கையாக உருவாக்கக்கூடியவை 32. இவற்றில் லிங்கம், வீரம், பூரம், கந்தகம், கெளரி பாஷாணம், தாளகம், மனோசிலை, வெள்ளைப் பாஷாணம், தொட்டிப்பாஷாணம் ஆகிய 9 வகை பாஷாணங்கள் மிகக்கொடிய விஷத்தன்மையைக் கொண்டவை. அதே அளவுக்கு இந்தப் பாஷாணங்களில் மருத்துவத்தன்மைகளும் இருப்பதாகச் சித்தர்கள் ஆராய்ந்து தெரிந்துகொண்டதோடு, அவற்றை சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தியிருப்பதை சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த நவபாஷாணங்களைத்தான் சிலை செய்யப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை தீர்க்கமுடியாத சில வியாதிகள் வராமல் தடுக்கும் என்பதையும் சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

நவபாஷாணங்களில் இருக்கிற மருத்துவ குணங்களை அறிந்துகொண்ட சித்தர்கள், அவற்றில் ஏன் சிலைகளை வடித்தார்கள் என்கிற கேள்வி நமக்கெல்லாம் எழும். அதற்கும் பதில் இருக்கிறது. சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயம், அவற்றை அனுபானங்களுடன் சேர்த்துதான் அருந்த வேண்டும் என்பது. அதென்ன அனுபானங்கள்...? பால், தேன், நெய், பழச்சாறுகள்தான் அந்த அனுபானங்கள். சித்த மருந்துகளின் தன்மைகளுக்கு ஏற்ப, அவற்றை பால், தேன் அல்லது நெய் என ஏதோவொரு அனுபானத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மட்டுமே, அதன் பலன் நோயாளிகளுக்கு முழுமையாக கிடைக்கும். இப்போது நவபாஷாண சிலைகளுக்கு வருவோம். நவபாஷாணத்தில் இருக்கிற மருத்துவ தன்மை, அதன் மீது சேர்க்கப்படுகிற அனுபானங்கள் என இங்கேயும் அதே கான்செப்ட் தான் நடக்கிறது. சித்த மருத்துவத்தில் பெரியளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்படாததால், இதைத்தாண்டிய தகவல்களை தெரிவிக்க முடியவில்லை.

செல்வ சண்முகம்

நவபாஷாண சிலைகள் மேல் ஊற்றப்பட்ட அனுபானங்களான பால், தேன், நெய் போன்றவற்றை சாப்பிட்டால், தீராத வியாதிகளும் சரியாகி விடுமா என்கிற கேள்வி இந்த இடத்தில் பலருக்கும் எழும். காப்பு, நீக்கம், நிறைப்பு என சித்த மருத்துவத்தில் 3 வகை மருந்துகள் இருக்கின்றன. காப்பு என்பது வருமுன் காப்பது, நீக்கம் என்றால் நோயை முழுமையாக நீக்குவது, நிறைப்பு என்றால் தாக்கிய நோய் சரியான பின்பு உடம்பின் கட்டமைப்பை பழையபடி மீட்டுருவாக்கம் செய்வதற்காக செய்யப்படுகிற சிகிச்சை. இதில் நவபாஷாண சிலைகள் மேல் ஊற்றப்பட்ட அனுபானங்களை அருந்துவது என்பது நோய் வராமல் தடுக்கிற 'காப்பு' மருத்துவ முறையைச் சேர்ந்தது'' என்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...