Skip to main content

Health: அரிசிக்கு பதில் காலிஃப்ளவர் ரைஸ்; எடை குறைய உதவுமா?

காலிஃப்ளவரை மிக்ஸியில் உதிர் உதிராக பொடித்து, அதை ஆவியில் வேக வைத்து குழம்பு, சைட் டிஷ்ஷாக இன்னும் சில காய்கறிகள் வைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் என்கிற நம்பிக்கை, டயட் விரும்பிகளிடம் இருக்கிறது. அது உண்மைதானா, அது உண்மையென்றால் காரணம் என்ன என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.

Cauliflower

''உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள், தங்கள் டயட்டில் அரிசிக்குப்பதிலாக காலிஃப்ளவரை அவித்து சாப்பிடுகிறார்கள். 100 கிராம் காலிஃப்ளவரில் மொத்தமே 25 கலோரிதான் இருக்கிறது. 3 கிராம் கொழுப்பு, 5 கிராம் மாவுச்சத்து, 1.9 கிராம் புரதம் என்று இருப்பதால், வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் ஏற்றது, நீரிழிவு இருப்பவர்களுக்கும் ஏற்றது. இதில் வைட்டமின் சி, கே, பி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீஷியம், ஃபோலேட்டின், கோலின் என்று எக்க்கச்சக்க சத்துக்கள் இருக்கின்றன.

சுற்றுச்சுழலில் இருக்கிற மாசுபாடும், உணவுப்பொருள்களில் இருக்கிற பூச்சிக்கொல்லி மருந்தும் நம் உடலில் ஆக்சிடேஷனை அதிகரிக்கும். ஆக்சிஜனைக் குறிக்கும் O 2-வில் ஒரு எலெக்ட்ரான் சேர்வதைத்தான் இப்படிக் குறிப்பிடுக்கிறார்கள். இதனால், உடலில் திசுக்களில் மாற்றம் நிகழும். இதை காலிஃப்ளவர் குறைக்கும்.

தாரிணி கிருஷ்ணன்

மூச்சுக்குழல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

இதில் இருக்கிற வைட்டமின் கே ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்யும்.

காலிஃப்ளவரில் இருக்கிற என்சைம், கேன்சரை வராமல் தடுக்கும். வருகிற வாய்ப்பு இருப்பவர்களுக்கு அதை தள்ளிப்போடும்.

வயிற்றில் அல்சரை ஏற்படுத்தும் ஹெலிகோபாக்டர் பைலோரி (எச்.பைலோரி) என்கிற பாக்டீரியாவின் வளர்ச்சியைக் குறைக்கும்.

இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், பெருங்குடலில் வரக்கூடிய புற்றுநோயை தடுக்கும்.

வயது காரணமாக ஏற்படுகிற எலும்பு அடர்த்தி இழப்பை தடுக்கும். எலும்புகளில் கொலாஜின் சேர உதவுவதால், மூட்டுவலி வராது.

காலிஃப்ளவர் ரைஸ் உடல் எடையைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும் என்றாலும், இதிலிருக்கிற அதிகப்படியான நார்ச்சத்து சிலருக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும்.
காலிஃப்ளவர் ரோஸ்ட்

காலிஃப்ளவர் மூளையில் வீக்கம் வராமல் தடுப்பதால், வயது காரணமாக வருகிற அல்சைமர், பார்க்கின்சன் போன்ற பிரச்னைகளைத் தள்ளிப்போடும்.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்​,​ கொழுப்பைக் குறைப்பதோடு​,​ நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.​

யார் காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது?

இதயப் பிரச்னைக்கான `பிளட் தின்னர்' மாத்திரை சாப்பிடுபவர்கள் காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது. தைராய்டு பிரச்னைகள் இருப்பவர்கள் அளவோடு சாப்பிடலாம்.

cauliflower rice

காலிஃப்ளவர் ரைஸ் பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?

காலிஃப்ளவர் ரைஸ் உடல் எடையைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும் என்றாலும், இதிலிருக்கிற அதிகப்படியான நார்ச்சத்து சிலருக்கு செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்தும்.

உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகமாக இருப்பவர்கள் காலிஃப்ளவரை சாப்பிட்டால், இதில் இருக்கிற பியூரின் அதை இன்னும் அதிகப்படுத்திவிடலாம். இதனால், சிறுநீரகக்கல் மற்றும் மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் கவுட் ஆர்த்ரைட்டீஸ் போன்ற பிரச்னைகள் வரலாம்'' என்கிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...