Skip to main content

Health: மழை & குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

பழக்கம் காரணமாக், குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரிலேயே குளிப்பார்கள் சிலர். அப்படி செய்யலாமா என நரம்பியல் மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்.

``மனிதர்கள் `warm-blooded animal' வகையைச் சேர்ந்தவர்கள். நம்முடைய உடலின் வெப்பநிலையை நம் தோலிலிருக்கிற ரத்த ஓட்டம்தான் சீராக வைத்திருக்க உதவுகிறது. திடீரென அதிகப்படியான குளிர்ச்சி நம்முடைய தோலைத் தாக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் ரத்தம் இதயத்துக்குள் வரும். இதயம் அந்த ரத்தத்தை பம்ப் செய்து மூளைக்கு அனுப்பும். மூளைக்கு அதிகப்படியான ரத்தம் செல்லும்போது மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த ரத்தக்கசிவு மூளையின் உட்புறமும் ஏற்படலாம், வெளிப்புறமும் ஏற்படலாம். உள்ளுக்குள் ஏற்படும்போது பக்கவாதம் வரலாம். திடீரென மயக்கமும் ஏற்படலாம். மயக்கத்துக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றி விடலாம் என்றாலும் முப்பத்து மூன்று சதவிகிதம் உயிராபத்தும் இருக்கிறது.

குளியல்

இத்தனை டிகிரிக்கு மேல் ஓ.கே!

குளிர்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்ப்பதே நல்லது. நாம் குளிக்கும் நீர் 25 டிகிரி வெப்ப நிலைக்கு மேல்தான் இருக்க வேண்டும். 25 டிகிரி வெப்பத்தை எப்படித் தெரிந்துகொள்வது? நம் வீடுகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைத்துக் குடிக்கும் நீர் 30 டிகிரி வெப்பத்தில் இருக்கும். இதுவே மண்பானையில் என்றால் 27 அல்லது 28 டிகிரியில் இருக்கலாம். குளிக்கும் நீரில், நம் கையை வைத்துப் பார்த்தாலே `குடிக்கும் நீரையொத்த வெப்பம் இருக்கிறதா' என்பதை உணர முடியும்.

அதிகப்படியான குளிர்ச்சி ஆபத்தே..!

இரவு நேரங்களில் வெளிப்புற வெப்பநிலை 24 அல்லது 23 டிகிரி வரை குறையும். குளிர்காலத்தில் இது இன்னமும் குறையும். இரவிலும் குளிர்காலத்திலும் தண்ணீர் மிகவும் சில்லென்று இருக்கும். இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகக்கூடக் குளிர்ந்த நீரை முதலில் தலையில் ஊற்றக் கூடாது.

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம். பாலமுருகன்

குளிர் காலத்தில் ஆற்று நீரில் தலைகீழாக டைவ் அடிக்கலாமா?

குளிர் காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் ஆற்றுநீரில் தலைகீழாகக் குதிப்பது நல்லதல்ல. உடம்பின் வெப்பநிலை திடீரென குறையும்போது நான் ஏற்கெனவே சொன்னதுபோல மூளைக்கு அதிக ரத்தம் சென்று பிரச்னை வரலாம். வீட்டில் குளித்தாலும் சரி, நீர் நிலைகளில் குளித்தாலும் சரி, முதலில் பாதங்களில், அடுத்து முட்டிகளில், பிறகு இடுப்பில், நெஞ்சில், கடைசியாகத்தான் தலையில் தண்ணீர் பட வேண்டும். இதுதான் சரியான குளியல் முறை.

ஷவரில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வருமா?

மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுகிற அளவுக்கு, ஷவரில் நீர் வேகமாக வருவதில்லை. மற்றபடி, ஷவரில் வருகிற நீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், அதைத் தவிர்ப்பதே நல்லது.

குளியல்

நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வராதா?

வேகமான நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போதுகூட மூளை நரம்புகளில் சேதம் ஏற்படலாம். அதனால்தான், நீர்வீழ்ச்சி வேகமாக இருக்கும்போது பொதுமக்களைக் குளிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். நீர்வீழ்ச்சியின் வேகம் மூளை நரம்புகளை மட்டுமல்ல கண் நரம்புகளையும் பாதிக்கலாம்.

இந்த அறிவுறுத்தல்கள் குழந்தைகளில் ஆரம்பித்து வயதானவர்கள் வரை பொருந்தும்'' என்கிறார் நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...