Skip to main content

Doctor Vikatan: பட்டாசுத்துகள் கண்களில் பட்டால் ஆபத்தா? பாதுகாப்பு வழிகள்... தீர்வுகள் என்ன?

Doctor Vikatan: வருடந்தோறும் பட்டாசு வெடிக்கும்போது ஏதேனும் ஒரு காயம் படுவதைத் தவிர்க்க முடியாதுதான். மற்ற காயங்கள் ஒன்றிரண்டு நாள்களில் குணமாகிவிடும். கண்களில் ஏற்படும் காயங்கள்தான் பயமுறுத்துகின்றன. பட்டாசுப் புகையோ, துகளோ கண்களில் படுவது என்பது அவ்வளவு பெரிய பிரச்னையை ஏற்படுத்துமா... இதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.    

விஜய் ஷங்கர்

மற்ற எந்த நாள்களைவிடவும் தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் அடுத்தடுத்த நாள்களில் கண் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை சற்று அதிகமிருக்கும். பட்டாசு வெடித்ததால் கண்களில் காயம்பட்டதாகச் சொல்லிக்கொண்டு வருவார்கள். சாதாரணமாக கண்கள் சிவப்பதில் தொடங்கி, விழித்திரை பாதிப்பு வரை இதன் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பட்டாசு, வெடிகளை வெடிப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களை, விபத்துகளைத் தவிர்க்கும் வழிகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரைகள்தான் என்றாலும், ஒவ்வொரு வருடமும் அந்த அறிவுரைகள் தேவையாக இருக்கின்றன. முதல் விஷயம், எந்தப் பட்டாசை வெடிப்பதாக, கொளுத்துவதாக இருந்தாலும் மிக அருகில் நின்று கொளுத்தாதீர்கள். நீளமான வத்தி பயன்படுத்தி பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றி பட்டாசு வெடிப்பதை உறுதிபடுத்துங்கள்.

கண்ணாடி அணிபவரோ, அணியாதவரோ, பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புக்காக கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துக்கொள்ளலாம். தீப்பொறி, பட்டாசுத் துகள் போன்றவை உங்கள் கண்களில் விழுவதிலிருந்து இது உங்களைப் பாதுகாக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணியும் வழக்கம் உள்ளவர்கள், பட்டாசு வெடிக்கும்போது  அதைத் தவிர்த்துவிடுங்கள். லென்ஸை கழற்றிவைத்துவிடுங்கள். லென்ஸ் அணிந்திருக்கும் நிலையில் கண்களில் பட்டாசுப் புகையோ, துகளோ, தீப்பொறியோ பட்டால் கண்கள் சிவப்பது, எரிச்சல் என பிரச்னை இன்னும் தீவிரமாகலாம்.

பட்டாசு

குழந்தைகளைத் தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்காமல் பெரியவர்கள் யாராவது அருகில் இருப்பது பாதுகாப்பானது. இவற்றையெல்லாம் பின்பற்றியும் எதிர்பாராத விதமாக கண்களில் பட்டாசு வெடித்துக் காயம் பட்டால், கண்களைக் கசக்குவது, அழுத்துவது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உடனடியாக கண் மருத்துவரை அணுகுங்கள். எப்படிப்பட்ட பாதிப்பு என்பதை அவர் சரியாகப் பார்த்து சிகிச்சை வழங்குவார்.

கண்களில் பட்டாசுக் காயம் ஏற்படுவதை அலட்சியமாக நினைக்காதீர்கள். பட்டாசுத்துகள் கண்களுக்குள் போவதால், கருவிழிகள் புண்ணாவது முதல் விழித்திரை பாதிப்புவரை பல பிரச்னைகள் வரலாம் என்பதால் கவனமாக இருங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...