Skip to main content

Organ donation: இறப்பிலும் 3 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த ஊட்டி விவசாயி.. நெகிழ்ச்சி சம்பவம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அர்ஜூனன். 63 வயதான அவருக்கு கடந்த 24 ம் தேதி மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அர்ஜூனன் மூளைச்சாவு அடைந்ததை கண்டறிந்துள்ளனர். உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

அர்ஜூனன்

அர்ஜூனனின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதாக உறவினர்கள் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் அர்ஜூனனின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை அகற்றி பாதுகாப்பான முறையில் கொண்டு சென்றனர். உடல் உறுப்புகளை தாமதமின்றி கொண்டு செல்ல கிரீன் காரிடார் முறையில் அலர்ட் செய்து அசுர வேகத்தில் கொண்டுச் சென்றனர். அர்ஜூனனின் உடல் உறுப்புகளை மூன்று பேருக்கு பொறுத்தியுள்ளனர். இதன்மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. அர்ஜூனன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.

உடல் உறுப்பு தானம்

இது குறித்து தெரிவித்த ஊட்டி மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, " ரத்தகொதிப்பு காரணமாக அர்ஜூனன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் விதிகளின் படி அவரது இரு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, ஈரோடு மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள பயனாளர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட மருத்துவக்கல்லூரியில் நடந்த இரண்டாவது உடல் உறுப்பு தானம் இது " என்றார்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...