Skip to main content

Girls Only: வெளிச்சத்தில் உறவு; பெண்கள் dislike செய்ய 6 காரணங்கள்.. | காமத்துக்கு மரியாதை- 204

திருமணமான புதிதில் மட்டுமல்ல, வருடங்கள் பல கடந்தாலும் வெளிச்சத்தில் தாம்பத்திய உறவு கொள்ள பல பெண்கள் விரும்புவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

’’மனிதர்கள் பெரும்பாலும் ஓய்ந்திருக்கும் நேரத்தில் தான் உறவு கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓய்ந்திருக்கும் நேரம் பெரும்பாலும் இரவாகவே இருப்பதால், இருட்டில் உறவு கொள்வதுதான் மனிதர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே இப்போது வரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. வெளிச்சத்தில் உறவு நமக்கு பழக்கம் இல்லாதது முதல் காரணம்.

Why do women dim the lights during sex?

இரண்டாவது காரணம் கூச்சம். வெளிச்சத்தில் கணவருக்கு தன் உடலை வெளிப்படுத்த பெரும்பாலான பெண்கள் கூச்சப்படுகிறார்கள். விளைவு, விளக்கை அணைத்தால்தான் உறவு என்கிற முடிவில் பல பெண்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவது காரணம், தங்கள் உடல்பற்றிய குழப்பங்கள். பெண்களுக்கு தன் உடல் குறித்த எண்ணங்கள் ஆண்களைவிட அதிகம். ’தொப்பை இருக்கு’, ’மார்பகங்கள் சின்னதா இருக்கு’, ’மார்பகம் ஒண்ணவிட ஒண்ணு சின்னதா இருக்கு’, ’மார்பு காம்புகளை சுத்தி முடி இருக்கு’, ’மார்பு காம்புகள் உள்ளிழுக்கப்பட்டு இருக்கு’, ’அக்குள் இடுக்கு தொடை இடுக்கு கறுத்திருக்கு...’ இப்படி ஏதோ ஒரு குறைபாடு தனக்கு இருப்பதாக வருத்தப்படும் பெண்கள், வெளிச்சத்தில் உறவுக்கு விரும்புவது இல்லை. ’லைட் ஆஃப் செஞ்சிட்டா நம்ம உடம்புல இருக்கிற குறை கணவருக்குத் தெரியாது. வெளிச்சத்துல செஞ்சா, இது ஏன் இப்படியிருக்குன்னு அவர் கிண்டல் செஞ்சிட்டா’ என்கிற பயம் பல பெண்களிடமும் இருக்கிறது. இந்தப் பிரச்னையின் முக்கியமான காரணமே இதுதான்.

Dr. Kamaraj

ஒருசில பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை வெளிச்சத்தில் உறவுகொள்ள சம்மதிப்பார்கள். ஆனால், ஒரு குழந்தை பிறந்த பிறகு, ’மார்பகங்கள் தொங்கிப் போச்சு’, ’வயித்துல வரி வரியா இருக்கு’ என்று, மறுக்கத் தொடங்குவார்கள். இது நான்காவது காரணம்.

ஒரு சிலருக்கு, வெளிச்சத்தில் உறவு கொண்டால் சீக்கிரமே கணவருக்கு நாம் போர் அடித்து விடுவோம் என்கிற எண்ணம் இருக்கும். இது, ஐந்தாவது காரணம்.

மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையில் இருக்கிற பெண்களும் வெளிச்சத்தில் உறவு கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏதோ கடமைக்கு உறவு கொள்ளும் அவர்கள், தாம்பத்தியத்தில் இதுபோன்ற புதுப்புது முயற்சிகளுக்கு இணங்க மாட்டார்கள். இது ஆறாவது காரணம். ஆனால், இப்படிப்பட்ட பெண்களின் சதவிகிதம் மிக மிக குறைவுதான். அதனால், வெளிச்சத்தில் உறவு கொள்ள மாட்டேன் என்கிற பெண்கள் எல்லோருக்குமே கணவரை பிடிக்காதுபோல; நம்மை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டார் போல என்றெல்லாம் யோசித்து ஆண்கள் குழம்ப வேண்டாம்.’’ என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...