Skip to main content

Girls Only: வெளிச்சத்தில் உறவு; பெண்கள் dislike செய்ய 6 காரணங்கள்.. | காமத்துக்கு மரியாதை- 204

திருமணமான புதிதில் மட்டுமல்ல, வருடங்கள் பல கடந்தாலும் வெளிச்சத்தில் தாம்பத்திய உறவு கொள்ள பல பெண்கள் விரும்புவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

’’மனிதர்கள் பெரும்பாலும் ஓய்ந்திருக்கும் நேரத்தில் தான் உறவு கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓய்ந்திருக்கும் நேரம் பெரும்பாலும் இரவாகவே இருப்பதால், இருட்டில் உறவு கொள்வதுதான் மனிதர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே இப்போது வரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. வெளிச்சத்தில் உறவு நமக்கு பழக்கம் இல்லாதது முதல் காரணம்.

Why do women dim the lights during sex?

இரண்டாவது காரணம் கூச்சம். வெளிச்சத்தில் கணவருக்கு தன் உடலை வெளிப்படுத்த பெரும்பாலான பெண்கள் கூச்சப்படுகிறார்கள். விளைவு, விளக்கை அணைத்தால்தான் உறவு என்கிற முடிவில் பல பெண்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவது காரணம், தங்கள் உடல்பற்றிய குழப்பங்கள். பெண்களுக்கு தன் உடல் குறித்த எண்ணங்கள் ஆண்களைவிட அதிகம். ’தொப்பை இருக்கு’, ’மார்பகங்கள் சின்னதா இருக்கு’, ’மார்பகம் ஒண்ணவிட ஒண்ணு சின்னதா இருக்கு’, ’மார்பு காம்புகளை சுத்தி முடி இருக்கு’, ’மார்பு காம்புகள் உள்ளிழுக்கப்பட்டு இருக்கு’, ’அக்குள் இடுக்கு தொடை இடுக்கு கறுத்திருக்கு...’ இப்படி ஏதோ ஒரு குறைபாடு தனக்கு இருப்பதாக வருத்தப்படும் பெண்கள், வெளிச்சத்தில் உறவுக்கு விரும்புவது இல்லை. ’லைட் ஆஃப் செஞ்சிட்டா நம்ம உடம்புல இருக்கிற குறை கணவருக்குத் தெரியாது. வெளிச்சத்துல செஞ்சா, இது ஏன் இப்படியிருக்குன்னு அவர் கிண்டல் செஞ்சிட்டா’ என்கிற பயம் பல பெண்களிடமும் இருக்கிறது. இந்தப் பிரச்னையின் முக்கியமான காரணமே இதுதான்.

Dr. Kamaraj

ஒருசில பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை வெளிச்சத்தில் உறவுகொள்ள சம்மதிப்பார்கள். ஆனால், ஒரு குழந்தை பிறந்த பிறகு, ’மார்பகங்கள் தொங்கிப் போச்சு’, ’வயித்துல வரி வரியா இருக்கு’ என்று, மறுக்கத் தொடங்குவார்கள். இது நான்காவது காரணம்.

ஒரு சிலருக்கு, வெளிச்சத்தில் உறவு கொண்டால் சீக்கிரமே கணவருக்கு நாம் போர் அடித்து விடுவோம் என்கிற எண்ணம் இருக்கும். இது, ஐந்தாவது காரணம்.

மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையில் இருக்கிற பெண்களும் வெளிச்சத்தில் உறவு கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏதோ கடமைக்கு உறவு கொள்ளும் அவர்கள், தாம்பத்தியத்தில் இதுபோன்ற புதுப்புது முயற்சிகளுக்கு இணங்க மாட்டார்கள். இது ஆறாவது காரணம். ஆனால், இப்படிப்பட்ட பெண்களின் சதவிகிதம் மிக மிக குறைவுதான். அதனால், வெளிச்சத்தில் உறவு கொள்ள மாட்டேன் என்கிற பெண்கள் எல்லோருக்குமே கணவரை பிடிக்காதுபோல; நம்மை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டார் போல என்றெல்லாம் யோசித்து ஆண்கள் குழம்ப வேண்டாம்.’’ என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...