Skip to main content

Girls Only: வெளிச்சத்தில் உறவு; பெண்கள் dislike செய்ய 6 காரணங்கள்.. | காமத்துக்கு மரியாதை- 204

திருமணமான புதிதில் மட்டுமல்ல, வருடங்கள் பல கடந்தாலும் வெளிச்சத்தில் தாம்பத்திய உறவு கொள்ள பல பெண்கள் விரும்புவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

’’மனிதர்கள் பெரும்பாலும் ஓய்ந்திருக்கும் நேரத்தில் தான் உறவு கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓய்ந்திருக்கும் நேரம் பெரும்பாலும் இரவாகவே இருப்பதால், இருட்டில் உறவு கொள்வதுதான் மனிதர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே இப்போது வரை தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. வெளிச்சத்தில் உறவு நமக்கு பழக்கம் இல்லாதது முதல் காரணம்.

Why do women dim the lights during sex?

இரண்டாவது காரணம் கூச்சம். வெளிச்சத்தில் கணவருக்கு தன் உடலை வெளிப்படுத்த பெரும்பாலான பெண்கள் கூச்சப்படுகிறார்கள். விளைவு, விளக்கை அணைத்தால்தான் உறவு என்கிற முடிவில் பல பெண்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவது காரணம், தங்கள் உடல்பற்றிய குழப்பங்கள். பெண்களுக்கு தன் உடல் குறித்த எண்ணங்கள் ஆண்களைவிட அதிகம். ’தொப்பை இருக்கு’, ’மார்பகங்கள் சின்னதா இருக்கு’, ’மார்பகம் ஒண்ணவிட ஒண்ணு சின்னதா இருக்கு’, ’மார்பு காம்புகளை சுத்தி முடி இருக்கு’, ’மார்பு காம்புகள் உள்ளிழுக்கப்பட்டு இருக்கு’, ’அக்குள் இடுக்கு தொடை இடுக்கு கறுத்திருக்கு...’ இப்படி ஏதோ ஒரு குறைபாடு தனக்கு இருப்பதாக வருத்தப்படும் பெண்கள், வெளிச்சத்தில் உறவுக்கு விரும்புவது இல்லை. ’லைட் ஆஃப் செஞ்சிட்டா நம்ம உடம்புல இருக்கிற குறை கணவருக்குத் தெரியாது. வெளிச்சத்துல செஞ்சா, இது ஏன் இப்படியிருக்குன்னு அவர் கிண்டல் செஞ்சிட்டா’ என்கிற பயம் பல பெண்களிடமும் இருக்கிறது. இந்தப் பிரச்னையின் முக்கியமான காரணமே இதுதான்.

Dr. Kamaraj

ஒருசில பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை வெளிச்சத்தில் உறவுகொள்ள சம்மதிப்பார்கள். ஆனால், ஒரு குழந்தை பிறந்த பிறகு, ’மார்பகங்கள் தொங்கிப் போச்சு’, ’வயித்துல வரி வரியா இருக்கு’ என்று, மறுக்கத் தொடங்குவார்கள். இது நான்காவது காரணம்.

ஒரு சிலருக்கு, வெளிச்சத்தில் உறவு கொண்டால் சீக்கிரமே கணவருக்கு நாம் போர் அடித்து விடுவோம் என்கிற எண்ணம் இருக்கும். இது, ஐந்தாவது காரணம்.

மனதுக்குப் பிடிக்காத திருமண வாழ்க்கையில் இருக்கிற பெண்களும் வெளிச்சத்தில் உறவு கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏதோ கடமைக்கு உறவு கொள்ளும் அவர்கள், தாம்பத்தியத்தில் இதுபோன்ற புதுப்புது முயற்சிகளுக்கு இணங்க மாட்டார்கள். இது ஆறாவது காரணம். ஆனால், இப்படிப்பட்ட பெண்களின் சதவிகிதம் மிக மிக குறைவுதான். அதனால், வெளிச்சத்தில் உறவு கொள்ள மாட்டேன் என்கிற பெண்கள் எல்லோருக்குமே கணவரை பிடிக்காதுபோல; நம்மை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டார் போல என்றெல்லாம் யோசித்து ஆண்கள் குழம்ப வேண்டாம்.’’ என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...