Skip to main content

Dry Grapes: குட்டியூண்டு பழம்... அதுக்குள்ள இவ்ளோ நன்மைகளா?! | Health

‘கிஸ்மிஸ்’ என்னும் செல்லப்பேரால அழைக்கப்படுற உலர் திராட்சை, மருத்துவ குணங்களை வாரி வழங்குறதுல வள்ளல்! இதோட பலன்கள் பற்றி சொல்கிறார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்.

ரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்புன்னு நம்ம உடம்புக்கு தேவையான எக்கச்சக்க மினரல்ஸ் இதுல இருக்கு.

த்தத்துல ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கணும்னா தினமும் உலர் திராட்சை சாப்பிடுங்க.

லும்புகளுக்கு வலிமை தர்ற 'போரான்' மினரலும் உலர் திராட்சையில் இருக்கு. ஸோ, இது எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு சார்ந்த பிரச்னைகளை தள்ளிப்போடும்.

Dry Grapes

ங்க கூந்தலும், சருமமும் பளபளன்னு ஹெல்தியா இருக்கணும்னா தினமும் உலர் திராட்சை சாப்பிடணும்.

நார்ச்சத்து அதிகமா இருக்கிறதால செரிமான சக்தியை அதிகமாக்குறதுலயும் உலர் திராட்சை செம சப்போர்ட்டிவ்.

லர் திராட்சையைத் தண்ணீர்ல ஊற வெச்சு தினமும் சாப்பிட்டு வந்தா, மலச்சிக்கலுக்கு தனியா மாத்திரை, மருந்து சாப்பிடணும்கிற அவசியமே வராது. ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி ஐஞ்சாறு உலர் திராட்சையைச் சாப்பிட்டு பால் குடிச்சிட்டா, மறுநாள் காலையில மலம் சுலபமா வெளியேறும்.

டம்பு வெயிட் போடணும்னு நினைக்கிறவங்க, தினமும் கொஞ்சம் உலர் திராட்சைகளோடு பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டா போதும்.

றட்டு இருமல், நாக்கு உலர்ந்து போதல், அதிக தாகம் மாதிரியான பிரச்னைகள் இருக்கிறவங்க உலர் திராட்சையைத் தண்ணீர்ல ஊற வெச்சு குடிக்கலாம்.

லர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமா இருக்கிறதால, நோய்கள் வராம தடுத்திடும்.

யிற்றுப்போக்கு இருக்கிறப்போ, சீரகம் சேர்த்துக் கொதிக்க வைச்ச தண்ணீர்ல சில உலர் திராட்சைகளை ஊறவைச்சு சாப்பிடலாம்.

Dr. Vikram kumar

தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்த, உயர் ரத்த அழுத்த நோயாளிகளோட ரத்த அழுத்தம் சீரடைந்ததா ஆய்வுகள் சொல்லுது. குடல் புற்றுநோயைத் தடுக்கிற நலக்கூறுகள் உலர் திராட்சையில் இருக்கிறதாகவும் ஆய்வுகள் சொல்லுது. இதயநோய் ஏற்படுவதைத் தடுக்கும் உலர் திராட்சையோட உட்கூறுகள் பற்றி ஆய்வுகள் நடந்திட்டிருக்கு.

டயபடீஸ் இருக்கிறவங்களைத் தவிர, மத்தவங்க தினமும் உலர் திராட்சை சாப்பிட்டா ரொம்ப நாள் ஹெல்தியா இருக்கலாம்.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...