Skip to main content

Dry Grapes: குட்டியூண்டு பழம்... அதுக்குள்ள இவ்ளோ நன்மைகளா?! | Health

‘கிஸ்மிஸ்’ என்னும் செல்லப்பேரால அழைக்கப்படுற உலர் திராட்சை, மருத்துவ குணங்களை வாரி வழங்குறதுல வள்ளல்! இதோட பலன்கள் பற்றி சொல்கிறார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்.

ரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்புன்னு நம்ம உடம்புக்கு தேவையான எக்கச்சக்க மினரல்ஸ் இதுல இருக்கு.

த்தத்துல ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கணும்னா தினமும் உலர் திராட்சை சாப்பிடுங்க.

லும்புகளுக்கு வலிமை தர்ற 'போரான்' மினரலும் உலர் திராட்சையில் இருக்கு. ஸோ, இது எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு சார்ந்த பிரச்னைகளை தள்ளிப்போடும்.

Dry Grapes

ங்க கூந்தலும், சருமமும் பளபளன்னு ஹெல்தியா இருக்கணும்னா தினமும் உலர் திராட்சை சாப்பிடணும்.

நார்ச்சத்து அதிகமா இருக்கிறதால செரிமான சக்தியை அதிகமாக்குறதுலயும் உலர் திராட்சை செம சப்போர்ட்டிவ்.

லர் திராட்சையைத் தண்ணீர்ல ஊற வெச்சு தினமும் சாப்பிட்டு வந்தா, மலச்சிக்கலுக்கு தனியா மாத்திரை, மருந்து சாப்பிடணும்கிற அவசியமே வராது. ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி ஐஞ்சாறு உலர் திராட்சையைச் சாப்பிட்டு பால் குடிச்சிட்டா, மறுநாள் காலையில மலம் சுலபமா வெளியேறும்.

டம்பு வெயிட் போடணும்னு நினைக்கிறவங்க, தினமும் கொஞ்சம் உலர் திராட்சைகளோடு பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டா போதும்.

றட்டு இருமல், நாக்கு உலர்ந்து போதல், அதிக தாகம் மாதிரியான பிரச்னைகள் இருக்கிறவங்க உலர் திராட்சையைத் தண்ணீர்ல ஊற வெச்சு குடிக்கலாம்.

லர் திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமா இருக்கிறதால, நோய்கள் வராம தடுத்திடும்.

யிற்றுப்போக்கு இருக்கிறப்போ, சீரகம் சேர்த்துக் கொதிக்க வைச்ச தண்ணீர்ல சில உலர் திராட்சைகளை ஊறவைச்சு சாப்பிடலாம்.

Dr. Vikram kumar

தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்த, உயர் ரத்த அழுத்த நோயாளிகளோட ரத்த அழுத்தம் சீரடைந்ததா ஆய்வுகள் சொல்லுது. குடல் புற்றுநோயைத் தடுக்கிற நலக்கூறுகள் உலர் திராட்சையில் இருக்கிறதாகவும் ஆய்வுகள் சொல்லுது. இதயநோய் ஏற்படுவதைத் தடுக்கும் உலர் திராட்சையோட உட்கூறுகள் பற்றி ஆய்வுகள் நடந்திட்டிருக்கு.

டயபடீஸ் இருக்கிறவங்களைத் தவிர, மத்தவங்க தினமும் உலர் திராட்சை சாப்பிட்டா ரொம்ப நாள் ஹெல்தியா இருக்கலாம்.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...