Skip to main content

Doctor Vikatan: தீவிரமான ஸ்கிப்பிங் பயிற்சி, பீரியட்ஸ் வருவதை துரிதமாக்குமா?

Doctor Vikatan: பீரியட்ஸ் ஆனதும் தலைக்குக் குளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவது ஏன்... அதற்கு மருத்துவ காரணம் ஏதாவது உண்டா.... உடற்பயிற்சிகள் செய்தால், குறிப்பாக ஸ்கிப்பிங் பயிற்சியால் வழக்கத்தைவிட பீரியட்ஸ் முன்னரே வரும் என்பது உண்மையா... பீரியட்ஸின் போது உடற்பயிற்சிகள் செய்யலாமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

பீரியட்ஸ் நாள்களில் தலைக்குக் குளிப்பது அவசியம் என்றெல்லாம் இல்லை. சில குடும்பங்களில் அது காலங்காலமாக ஒரு வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. குளித்தால் உடல் ரிலாக்ஸ் ஆகும் என்பதும், ஒருவித புத்துணர்வை உணர்வோம் என்பதும் நாம் அறிந்ததே. பீரியட்ஸ் நாள்களில் ஏற்கெனவே உடல், மன ரீதியாக சற்று மந்தமாக உணர்வார்கள் பெண்கள். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும். மனநிலையை சற்று மாற்றும். அதற்காக குளிக்கலாம், தவறில்லை. மற்றபடி அது கட்டாயமெல்லாம் இல்லை. 

பீரியட்ஸ் என்பது ஹார்மோன்களின் தூண்டுதலால் வருவது. மூளையிலிருந்து வரும் எஃப்.எஸ்.ஹெச் (FSH) மற்றும் சினைப்பைகளிலிருந்து சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான்  ஹார்மோன்களுக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. இது மாதந்தோறும் நிகழக்கூடிய ஒன்று.

ஸ்கிப்பிங் செய்வது, சைக்கிள் ஓட்டுவது, அதிகம் விளையாடுவது போன்றவற்றால் எல்லாம் பீரியட்ஸ் வந்துவிடாது. பீரியட்ஸ் வரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கலாம்... அந்த நேரத்தில் ஒரு பெண் விளையாட்டிலோ, ஸ்கிப்பிங் பயிற்சி போன்ற வேறு உடல் இயக்கச் செயல்பாட்டிலோ ஈடுபட்டிருக்கலாம். அதையடுத்து பீரியட்ஸும் வந்திருக்கலாம். அதற்காக, விளையாட்டால்தான் பீரியட்ஸ் வந்தது என அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.

பீரியட்ஸ் - சித்திரிப்பு படம்

பீரியட்ஸின்போது பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் காலத்தில் பெண்களை  எந்த வேலையும் செய்யவிடாமல் ஒதுக்கிவைத்தார்கள்.  இன்றைய வாழ்க்கையில் அது சாத்தியமில்லை.  ஓய்வு தேவையா என்பதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பம். வலியும் ப்ளீடிங்கும் அதிகமாக இருக்கும் பெண்கள் ஓய்வெடுக்கலாம். ஆனால், அது எல்லோருக்குமான பொது விதி இல்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உடல்நிலையைப் பொறுத்து கடினமான வேலைகளைச் செய்யாமல் இருக்கலாம். சைக்கிள், பைக் ஓட்டுவது,  குதிரை ஓட்டுவது போன்றவற்றை எப்போதும்போல செய்யலாம். ஜிம்மில் கடினமான வொர்க் அவுட் செய்வதைத் தவிர்க்கலாம். ப்ளீடிங் ஆவதால் உடல் பலவீனமாக இருக்கும் என்பதுதான் காரணம். இடுப்புக்கும் வயிற்றுக்கும் அழுத்தம் தராத, வலியை அதிகரிக்காத மிதமான பயிற்சிகள் செய்யலாம், தவறில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...