Skip to main content

Doctor Vikatan: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாகவே இருப்பது ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு வழக்கத்தைவிட சற்று அதிகம் சாப்பிட்டாலே உடல் எடை ஏறிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாமல், ஒல்லியாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது...  இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.  

ஷைனி சுரேந்திரன்

உங்களுக்குத் தெரிந்தவர்களில் சிலர்  ஓரிடத்தில் நிற்காமல், உட்காராமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவர்களின் இந்தச் செயலை   'நான் -ஆக்டிவிட்டி எக்சர்சைஸ் தெர்மோஜெனசிஸ் ' (non activity exercise thermogenesis ) என்று சொல்கிறோம். இவர்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாகவே இருக்கும். இவர்கள்  ஒல்லியாகவே  இருப்பார்கள்.

அடுத்து மரபியல் ரீதியாகவும் சிலர் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பார்கள். குடும்பத்தில்  அத்தனை பேரும் ஒல்லியாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு  தசைகளின் அடர்த்தி ( Muscle mass) அதிகமிருக்கும். தசை என்பது உடல் முழுக்க இருக்கும். அது சும்மாவே இருக்காது. எந்த நேரமும் எனர்ஜி கேட்டுக்கொண்டே இருக்கும்.  ஒருவரது உடலில் தசை அடர்த்தி அதிகமாக, ஆக, கொழுப்பின் அளவு குறையும். உடலளவில் பலமாகவும் உணர்வோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் நடையும், தோரணையும் கம்பீரமாகவே இருக்கும். தசை அடர்த்தி அதிகமிருப்பவர்கள், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு கொழுப்பும் கம்மியாகவே இருக்கும். 

muscle mass

தைராய்டு ஹார்மோன்  அதிகம் சுரக்கும் ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்புள்ளவர்களும் ஒல்லியாக இருப்பார்கள்.  இன்னும் ஒரு பிரிவினர், என்னதான் விருப்பமான உணவு கொடுத்தாலும் அளவோடுதான் சாப்பிடுவார்கள்.  அதனாலேயே ஒல்லியாக இருப்பார்கள்.  ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோரும் ஆரோக்கியமானவர்கள் என்று அர்த்தமில்லை. ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் தெரியவரலாம். 'ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்' (Functional fitness) என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது கனமான ஒரு பொருளைத் தூக்க முடிகிறதா, முதுகுவலியின்றி மாடிப்படிகளில் ஏறி, இறங்க முடிகிறதா என்றெல்லாம் பார்ப்பது ஃபங்ஷனல் ஃபிட்னெஸ்ஸின் அளவுகோல்.

சிலருக்கு தினமும் இரவில் குறிப்பிட்ட மணிக்கு தூங்கியே ஆக வேண்டும். என்ன வேலை இருந்தாலும், யார் உடனிருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எனக்கு என் தூக்கம் முக்கியம் என தூங்கிவிடுவார்கள். அவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் வராது. உடலில் கொழுப்பு சேராது. அதனால் அவர்களும் ஒல்லியாக இருப்பார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...