Skip to main content

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா steam bath எனப்படும் நீராவிக்குளியல்?

Doctor Vikatan: நீராவிக்குளியல் எடுப்பது உண்மையிலேயே நல்லதா...  எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா.... அதனால் விரைவில் எடை குறையும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த   கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

தலத் சலீம்

தலை பாரமாக இருந்தாலோ, சளி பிடித்திருந்தாலோ வெந்நீரை சூடாக்கி, மருந்துகள் அல்லது மூலிகைகள் சேர்த்து ஆவி பிடிக்கிற வழக்கம் நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேறி, தலை பாரம் நீங்கி, சுவாசப்பாதை சீராகிறது. ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக் குளியலும்  கிட்டத்தட்ட அப்படித்தான்.

ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக்குளியல், மிகப் பழைமையான மருத்துவ முறைகளில் இருந்திருக்கிறது.  அதாவது எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நீராவிக் குளியல் எடுப்பதை அவர்கள் வாழ்க்கை முறையாகவே பின்பற்றியிருக்கிறார்கள். சூடான நீராவியைப் பரவச் செய்வதன் மூலம், உடலிலுள்ள தேவையற்ற நீர், வியர்வையாக  வெளியேறும். ரத்த ஓட்டத்தை சீராக்குவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ரத்த அழுத்த அளவை சரியாக வைப்பது, வொர்க் அவுட்டுக்கு பிறகான உடல் களைப்பைப் போக்குவது, தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்துவது என இதன் பலன்கள் எக்கச்சக்கம்.

மிக முக்கியமாக, ஸ்ட்ரெஸ் குறைய ஸ்டீம் பாத் உதவுகிறது.  சில ஜிம்களில் ஸ்டீம் பாத் வசதியும் இருப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை ஸ்டீம் பாத் எடுப்பதன் மூலம், எடைக்குறைப்பும் துரிதமாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.  ஸ்டீம் பாத் எடுக்கும்போது உடலிலிருந்து நிறைய நீர்ச்சத்து வெளியேறும். அதை ஈடுகட்டவும், உடலில் நீர் வறட்சி ஏற்படாமலிருக்கவும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம்.

steam bath

இத்தனை பலன்கள் இருந்தாலும், ஸ்டீம்பாத் எடுக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.  எடைக்குறைப்புக்கு உதவும் என்பதற்காக அடிக்கடி இதைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் உடலில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஏதேனும் சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்டீம் பாத் எடுக்க வேண்டும். 

மருத்துவ சிகிச்சை மையங்களில் மூலிகைகளைப் பயன்படுத்தியும் ஸ்டீம் பாத் கொடுப்பார்கள். அது உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதிலிருந்து, மூட்டுவலி, உடல்வலி என பிரத்யேக பிரச்னைகளுக்கான சிகிச்சையாகவும் பரிந்துரைக்கப்படும். முறையான மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளும்போது ஸ்டீம் பாத் நல்ல சிகிச்சையாகவும்   பலனளிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...