Skip to main content

`காவல் கரங்கள்' திட்டத்திற்கு அவசரநிலை சிகிச்சை ஊர்தியை வழங்கும் அதுல்யா சீனியர் கேர்!

மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மேலும் மேம்படுத்த வேண்டுமென்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக, பெருநகர சென்னை காவல்துறையின் சிறப்பான "காவல் கரங்கள்" திட்டத்தோடு அதுல்யா சீனியர் கேர் பெருமிதத்துடன் கைகோர்த்து செயல்படுகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நபர்கள் மற்றும் கவனிப்பின்றி விடப்பட்டிருக்கும் முதியோர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் தொடர்பான சேவைகளை வழங்குவது இந்த உன்னதமான முன்னெடுப்பு முயற்சியின் நோக்கமாகும். வசதியற்ற ஏழை, எளிய மக்களுக்கும், முதியோர்களுக்கும் விரிவான சிகிச்சை பாரமரிப்பை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்த முன்னெடுப்பு திட்டம் சிறப்பாக பயன்படுத்துகிறது.

அதுல்யா சீனியர் கேர்

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் ஆணையர் திரு. கபில் குமார் சி சாதகர் (ஐபிஎஸ்) மற்றும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் காவல்துறையின் பிற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். மூத்தகுடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் சமூக நலவாழ்வு மீது சென்னை காவல்துறையுடன் அதுல்யா கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

"காவல் கரங்கள்" செயல்திட்டத்தின் திறன்களை கணிசமாக உயர்த்தும் நோக்கத்தோடு அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு அவசரநிலை சிகிச்சை ஊர்தியை (ஆம்புலன்ஸ்) அதுல்யா சீனியர் கேர் தனது பங்களிப்பாக வழங்கியிருக்கிறது. ஆதாவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு உடனடி மருத்துவ கவளிப்பை வழங்கி அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மையங்களுக்கு அழைத்துச் செல்கிற மீட்பு நடவடிக்கைகளில் இந்த பிரதயேக ஆம்புலன்ஸ் முக்கிய பங்காற்றும். சாலை ஓரங்களிலும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் மீட்கப்படுகிற முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பயணத்தின்போதே சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை கவனிப்பை பெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து நவீன மருத்துவ சாதனங்களும் இந்த ஆம்புலன்ஸ்-ல் நிறுவப்பட்டுள்ளன.

அதுல்யா சீனியர் கேர்

அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலரான திரு ஜி ப்ரீனிவாசன், சமூக நலனுக்கான இந்த ஒத்துழைப்பு திட்டம் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில், "நமது மூத்தகுடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் சிறப்பாக்கும் குறிக்கோள் மீது அதுல்யாவில் நாங்கள் எப்போதும் உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கிறோம். "காவல் காங்கள்" திட்டத்தோடு கைகோர்த்து செயல்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள், அவர்கள் பெறுவதற்கான சிகிச்சை பராமரிப்பையும், கவளிப்பையும் பெறுவதை உறுதி செய்யும் வகையில் எமது சேவை பரப்பையும் மற்றும் தாக்கத்தையும் மேலும் விரிவுபடுத்த இந்த ஒத்துழைப்பு எங்களுக்கு உதவுகிறது. இந்த உன்னதமான நோக்கத்திற்காக ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்குவதை ஒரு கவுரவமாக நாங்கள் கருதுகிறோம். இந்த முனைப்பு திட்டத்திற்கு மனமார்ந்த ஆதரவை தொடர்ந்து வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். நமது முதியோர்களுக்கு அதிக பாதுகாப்பான, அதிக கனிவும், பரிவும் கலந்த சூழலை உருவாக்குவது எமது இலக்காகும். அந்த குறிக்கோள் இலக்கை நோக்கிய பயணத்தில் மாநகர காவல்துறையுடன் மேற்கொள்ளப்படும் இக்கூட்டாண்மை ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும்" என்று கூறினார்.

அதுல்யா சீனியர் கேர் மற்றும் பெருநகர சென்னை காவல்துறையின் ஒரு முன்னெடுப்பான "காவல் கரங்கள் திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு, இதன் திறன் மேம்பாட்டில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். தேவையிலுள்ள அதிக எண்ணிக்கையிலான நபர்களை சென்றடையவும் மற்றும் அவர்களுக்கு உதவவும் இது உதவும். வயதில் முதிர்ந்த நபர்களுக்கு உடல்சார்ந்த, உணர்வு சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த நலவாழ்வு தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பல்வேறு வசதிகளை வழங்கிவரும் அதுல்யா சீனியர் கேர்.

மூத்தகுடிமக்களுக்கான பராமரிப்பு சேவைகள் வழங்குவதில் தொடர்ந்து முதன்மை வகிக்கிறது. இந்த கூட்டாண்மை நடவடிக்கையின் வழியாக சமூக பொறுப்புறுதி மற்றும் சமுதாய நலவாழ்வின் மீதான தனது அர்ப்பணிப்பையும், வாக்குறுதியையும் அதுல்யா மீண்டும் வலுப்படுத்தியிருக்கிறது. வயது முதிர்ந்த ஒவ்வொரு நபரும் கண்ணியத்தோடும். மரியாதையோடும் நடத்தப்படுகிற ஒரு உலகை உருவாக்குவதில் இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையை நிஜமாக்குவதற்கான செயல்திட்டத்தில் இந்த ஒத்துழைப்பு ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும்.

அதுல்யா சீனியர் கேர்

அதுல்யா சீனியர் கேர் மற்றும் சென்னை காவல் துறையின் "காவல் கரங்கள்" என்பதற்கும் இடையிலான இக்கூட்டாண்மை, பிற பெருநிறுவனங்களுள் பின்பற்றுவதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டை நிறுவியிருக்கிறது. சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நிறுவனங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட மூத்தகுடிமக்களின் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க பெருநகர சென்னை காவல்துறையோடும் மற்றும் பிற கூட்டாளிகளோடும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து செயல்படுவதை அதுல்யா சீனியர் கேர் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...