Skip to main content

விறைப்புத்தன்மை குறையுதா..? இதுவும் காரணமா இருக்கலாம்! | காமத்துக்கு மரியாதை - 195

மூன்று வருடங்களுக்கு முன்னால் எனக்கு புராஸ்டேட் கேன்சர் இருந்தது. அதன் காரணமாக பயாப்ஸி ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்காக நான் தினமும் உறங்கப்போவதற்கு முன் 'Pradif' என்ற மாத்திரையைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். தற்போது என்னுடைய பிரச்னை என்னவென்றால், இந்த மாத்திரையை நான் சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து நான் பல்வேறு பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறேன். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு விறைப்புத்தன்மை இல்லை. நான் என்ன செய்வது? வாசகரின் இந்தக் கேள்விக்கு மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதில் சொல்கிறார்.

Erectile dysfunction

''உங்கள் விறைப்பின்மை பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. `நமக்கு புராஸ்டேட் கேன்சர் வந்து விட்டதே' என்கிற பயமும் மன உளைச்சலும்தான் முக்கிய காரணங்கள். புராஸ்டேட் கேன்சரின் பக்க விளைவுகளாலும் விறைப்புத்தன்மையில் கோளாறு வரலாம்.

புராஸ்டேட் பயாப்ஸி செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்து புராஸ்ட்டேட் சுரப்பியை நீக்கி விட்டார்களா என்பது பற்றிச் சொல்லவில்லை. அப்படி நீக்கியிருந்தாலும், சிலருக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவதில் பிரச்னை வரலாம்.

Dr. Narayana Reddy

நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரை. பொதுவாக, உங்களுடைய பிரச்னைக்கு tamsulosin + dutasteride என்ற காம்பினேஷன் மருந்தைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் எடுத்து வருகிற மாத்திரையும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த மருந்து ஆண் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும். இதனால் விறைப்புத்தன்மை குறையும். விளைவு, தாம்பத்திய உறவிலும் ஆர்வம் குறையும். உங்கள் பிரச்னைக்கு மேலே சொல்லப்பட்டுள்ளவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்துப் பேசுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும். பயப்படாதீர்கள்'' என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...