Skip to main content

சாப்பிட்டதுமே தூக்கம் வருதா?! Food Coma பத்தி தெரிஞ்சுக்கோங்க...

'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு' என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். கேட்பது மட்டும் இல்லை, நமக்கே நடந்திருக்கும். ஆம். வயிறுமுட்ட உண்டுவிட்டு, சிறிது நேரம் அமர்ந்திருந்தாலே கண்கள் சுழற்றிக்கொண்டு வரும். அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால், ஆஹா... அது தான் சொர்க்கம்.

சாப்பிட்ட பிறகு வரும் இந்தக் குட்டி தூக்கத்திற்கு பெயர் 'ஃபுட் கோமா'வாம் (Food Coma). 'இது என்னடா புதுசா இருக்கு?' என்று இது பற்றிய சந்தேகத்தை பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்க, அவர் விளக்குகிறார்...

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

"சும்மா சாப்பிட்டாலே ஃபுட் கோமா ஏற்பட்டு விடாது. அளவுக்கு மீறி அதிகமாக உண்ணும்போது தான் ஃபுட் கோமா ஏற்படுகிறது. 'கோமா' என்றதும் 'நினைவுகள் மறந்துவிடும். பேச முடியாது. சுற்றி நடக்கும் எதுவும் தெரியாது' என்று பொருள் கொள்ள வேண்டாம். ஃபுட் கோமா என்னும் வார்த்தையில் வரும் 'கோமா' தூக்கம், சோம்பல், எனர்ஜி குறைபாடு, கவனமின்மை (Low Concentration) ஆகியவற்றைக் குறிக்கிறது.

எதனால் ஏற்படுகிறது?

தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மாவுச்சத்து ஒருவகை மயக்கநிலைக்கு கொண்டு செல்லும். அதாவது மாவுச்சத்தில் உள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும். இந்த ரத்தம் மூளைக்குச் செல்லும்போது நமக்கு தூக்கம், சோம்பல் போன்றவை ஏற்படுகின்றன.

இன்னும் சில நேரங்களில் தைராய்டு போன்ற பிரச்னைகள், அலர்ஜி, சத்துக் குறைபாடு ஆகியவற்றாலும் இப்படி ஏற்படலாம்.

இது ஒரு நோயா?

இது ஒரு நோயா?

ஃபுட் கோமா நிச்சயம் நோய் அல்ல. அதிகமாகச் சாப்பிடும்போது ஏற்படும் ஒருவித நிலை. அவ்வளவே.

எப்படித் தடுக்கலாம்?

  • சரியான அளவு உணவு மட்டும் எடுக்க வேண்டும். அளவுக்கு மீறி உண்ணக் கூடாது.

  • எல்லா சத்துகளும் சரியான அளவு கிடைக்கும்படியான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
    அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • இரவில் நல்ல தூக்கம் வேண்டும்.

  • 'பளிச்' என்று இருக்கும் விளக்குகளைப் பயன்படுத்தலாம். வெளிச்சமான இடத்தில் இருக்கலாம்.

  • மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடலாம்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...