Skip to main content

சாப்பிட்டதுமே தூக்கம் வருதா?! Food Coma பத்தி தெரிஞ்சுக்கோங்க...

'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு' என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். கேட்பது மட்டும் இல்லை, நமக்கே நடந்திருக்கும். ஆம். வயிறுமுட்ட உண்டுவிட்டு, சிறிது நேரம் அமர்ந்திருந்தாலே கண்கள் சுழற்றிக்கொண்டு வரும். அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால், ஆஹா... அது தான் சொர்க்கம்.

சாப்பிட்ட பிறகு வரும் இந்தக் குட்டி தூக்கத்திற்கு பெயர் 'ஃபுட் கோமா'வாம் (Food Coma). 'இது என்னடா புதுசா இருக்கு?' என்று இது பற்றிய சந்தேகத்தை பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்க, அவர் விளக்குகிறார்...

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

"சும்மா சாப்பிட்டாலே ஃபுட் கோமா ஏற்பட்டு விடாது. அளவுக்கு மீறி அதிகமாக உண்ணும்போது தான் ஃபுட் கோமா ஏற்படுகிறது. 'கோமா' என்றதும் 'நினைவுகள் மறந்துவிடும். பேச முடியாது. சுற்றி நடக்கும் எதுவும் தெரியாது' என்று பொருள் கொள்ள வேண்டாம். ஃபுட் கோமா என்னும் வார்த்தையில் வரும் 'கோமா' தூக்கம், சோம்பல், எனர்ஜி குறைபாடு, கவனமின்மை (Low Concentration) ஆகியவற்றைக் குறிக்கிறது.

எதனால் ஏற்படுகிறது?

தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மாவுச்சத்து ஒருவகை மயக்கநிலைக்கு கொண்டு செல்லும். அதாவது மாவுச்சத்தில் உள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும். இந்த ரத்தம் மூளைக்குச் செல்லும்போது நமக்கு தூக்கம், சோம்பல் போன்றவை ஏற்படுகின்றன.

இன்னும் சில நேரங்களில் தைராய்டு போன்ற பிரச்னைகள், அலர்ஜி, சத்துக் குறைபாடு ஆகியவற்றாலும் இப்படி ஏற்படலாம்.

இது ஒரு நோயா?

இது ஒரு நோயா?

ஃபுட் கோமா நிச்சயம் நோய் அல்ல. அதிகமாகச் சாப்பிடும்போது ஏற்படும் ஒருவித நிலை. அவ்வளவே.

எப்படித் தடுக்கலாம்?

  • சரியான அளவு உணவு மட்டும் எடுக்க வேண்டும். அளவுக்கு மீறி உண்ணக் கூடாது.

  • எல்லா சத்துகளும் சரியான அளவு கிடைக்கும்படியான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
    அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • இரவில் நல்ல தூக்கம் வேண்டும்.

  • 'பளிச்' என்று இருக்கும் விளக்குகளைப் பயன்படுத்தலாம். வெளிச்சமான இடத்தில் இருக்கலாம்.

  • மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடலாம்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...