Skip to main content

சாப்பிட்டதுமே தூக்கம் வருதா?! Food Coma பத்தி தெரிஞ்சுக்கோங்க...

'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு' என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம். கேட்பது மட்டும் இல்லை, நமக்கே நடந்திருக்கும். ஆம். வயிறுமுட்ட உண்டுவிட்டு, சிறிது நேரம் அமர்ந்திருந்தாலே கண்கள் சுழற்றிக்கொண்டு வரும். அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால், ஆஹா... அது தான் சொர்க்கம்.

சாப்பிட்ட பிறகு வரும் இந்தக் குட்டி தூக்கத்திற்கு பெயர் 'ஃபுட் கோமா'வாம் (Food Coma). 'இது என்னடா புதுசா இருக்கு?' என்று இது பற்றிய சந்தேகத்தை பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்க, அவர் விளக்குகிறார்...

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

"சும்மா சாப்பிட்டாலே ஃபுட் கோமா ஏற்பட்டு விடாது. அளவுக்கு மீறி அதிகமாக உண்ணும்போது தான் ஃபுட் கோமா ஏற்படுகிறது. 'கோமா' என்றதும் 'நினைவுகள் மறந்துவிடும். பேச முடியாது. சுற்றி நடக்கும் எதுவும் தெரியாது' என்று பொருள் கொள்ள வேண்டாம். ஃபுட் கோமா என்னும் வார்த்தையில் வரும் 'கோமா' தூக்கம், சோம்பல், எனர்ஜி குறைபாடு, கவனமின்மை (Low Concentration) ஆகியவற்றைக் குறிக்கிறது.

எதனால் ஏற்படுகிறது?

தேவைக்கு அதிகமாகச் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மாவுச்சத்து ஒருவகை மயக்கநிலைக்கு கொண்டு செல்லும். அதாவது மாவுச்சத்தில் உள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும். இந்த ரத்தம் மூளைக்குச் செல்லும்போது நமக்கு தூக்கம், சோம்பல் போன்றவை ஏற்படுகின்றன.

இன்னும் சில நேரங்களில் தைராய்டு போன்ற பிரச்னைகள், அலர்ஜி, சத்துக் குறைபாடு ஆகியவற்றாலும் இப்படி ஏற்படலாம்.

இது ஒரு நோயா?

இது ஒரு நோயா?

ஃபுட் கோமா நிச்சயம் நோய் அல்ல. அதிகமாகச் சாப்பிடும்போது ஏற்படும் ஒருவித நிலை. அவ்வளவே.

எப்படித் தடுக்கலாம்?

  • சரியான அளவு உணவு மட்டும் எடுக்க வேண்டும். அளவுக்கு மீறி உண்ணக் கூடாது.

  • எல்லா சத்துகளும் சரியான அளவு கிடைக்கும்படியான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
    அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • இரவில் நல்ல தூக்கம் வேண்டும்.

  • 'பளிச்' என்று இருக்கும் விளக்குகளைப் பயன்படுத்தலாம். வெளிச்சமான இடத்தில் இருக்கலாம்.

  • மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடலாம்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...