Skip to main content

Doctor Vikatan: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் heart attack அதிகம் ஏற்பட என்ன காரணம்?

Doctor Vikatan: பொதுவாக மாரடைப்பு என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவு என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், சமீப காலமாக இளவயதினரும் பெண்களும் மாரடைப்பு பாதித்து உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். உண்மையில் அவர்களுக்கு என்னதான் நடக்கிறது...? இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்?

 பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த இதயநோய் மருத்துவர் சொக்கலிங்கம்.

மருத்துவர் சொக்கலிங்கம்

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், இதயத்தின் ரத்தக்குழாய்களின் அமைப்பு, மற்றும் அவற்றில் நடக்கும் மாறுதல்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதயத்தின் வலது, இடது பக்கங்களில்  2- 3 மில்லி மீட்டர் அளவில் இரண்டு இதய ரத்தக் குழாய்கள்  இருக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன், சர்க்கரை, மிக முக்கியமாக கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்க வேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது இல்லை என்றால் இதயம், மூளை என எல்லாமே செயலற்றுப் போய், மனிதன் இறந்துவிடுவான். 

மகிழ்ச்சியான மனநிலை

மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்வரைதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும். எண்டார்ஃபின் (Endorphin ) என ஒரு ஹார்மோன் நம் உடலில் சுரக்கும். மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே சுரக்கக்கூடியது இது. இந்த ஹார்மோன்தான் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை தக்கவைக்கிறது. ஸ்ட்ரெஸ், கவலை என மனிதன் மகிழ்ச்சியை இழக்கும்போது அட்ரீனலின் (Adrenaline) என்ற ஹார்மோன் சுரக்கிறது. அந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் படியத் தொடங்கும். அப்படிப் படியும்போது, உங்களைக் காக்கும் கொலஸ்ட்ராலே, உங்களை அழிக்கும் கொலஸ்ட்ராலாக மாறுகிறது. 

இப்படி கொலஸ்ட்ரால்  படிய குறைந்தது 15-20 வருடங்கள் ஆகும். இதய ரத்தக்குழாயின் உள்ளே உள்ள லைனிங்கானது கண்ணாடிபோல  ஸ்மூத்தாக இருக்கும். அப்படி இருக்கும்வரை ரத்தம் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும். தீவிர ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும்நிலையில் எண்டார்ஃபினுக்கு பதில் அட்ரீனலின் சுரந்து, லைனிங்கில் சின்ன கீறல் விழும். அதனால்  அந்த இடத்தில் ரத்தம் உறைந்துவிடும். இதற்கு 'கொரோனரி த்ராம்போசிஸ்' (Coronary Thrombosis)  என்று பெயர்.   ரத்தத்தில் கொழுப்பு படிய 15-20 வருடங்கள் ஆகும் என்றாலும், இந்தக் கீறல் விழ சில நிமிடங்கள் போகும்.  உடனடியாக சிகிச்சை எடுத்தால் மட்டுமே இந்த நபரை காப்பாற்ற முடியும். சமீப காலத்தில் 20-25 வயதில் ஆண்களும், பெண்களும் மாரடைப்பில் இறப்பதன் பின்னணி இப்போது புரிகிறதா?

ஹார்ட் அட்டாக்

இதய ரத்தக் குழாயின் விட்டம் 0 என்பது தான் நார்மல். அதுவே 100 என்ற நிலையை எட்டினால் அது 100 சதவிகித அடைப்பு என்று அர்த்தம். 100 சதவிகித அடைப்பு இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வரும். 70,80 சதவிகித அடைப்பில் எல்லாம் வராது. அது 100-ஐ எட்டியதும் சட்டென வந்துவிடும். பிறகு எப்படி 80, 90 சதவிகித அடைப்பு ஏற்பட்டவர்கள் சட்டென இறக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். 50 வயதுள்ள ஒரு நபருக்கு 70-80 சதவிகித அடைப்பு இருப்பதாக  வைத்துக்கொள்வோம். தீவிர ஸட்ரெஸ் காரணமாக அந்த அடைப்பின் மேல் லேசான கீறல் வரும். கீறல் எங்கு விழுந்தாலும் அங்கே ரத்தம் உறைந்துவிடும். உடனடியாக அது 100 சதவிகித அடைப்பாக மாறிவிடும். அது இறப்புக்கும் வழிவகுக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...