Skip to main content

Doctor Vikatan: எலுமிச்சை, தக்காளி, மஞ்சள்... சமையல் பொருள்களை  சருமத்தில் apply பண்ணலாமா..?

Doctor Vikatan: என் தோழி தினமும் சமைக்கும்போது, சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்களில் எதையாவது எடுத்து முகத்தில் தடவிக்கொள்வாள். உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, தயிர், புதினா சாறு... இப்படி எதையும் விட்டுவைக்க மாட்டாள். எல்லாமே சரும ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது அவள் கருத்து. இந்த விஷயம் எந்த அளவுக்குச் சரியானது... சமையலுக்கான அனைத்துப் பொருள்களையும் நேரடியாக சருமத்திலும் apply செய்யலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா  

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சமையலுக்கான பொருள்களை முகத்தில் தடவிக்கொள்வது பற்றி கேட்கிறீர்கள். சிறுநீரை முகத்தில் தடவினால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும் என்றொரு நம்பிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. அதை நம்பி, பலரும் தங்களது சிறுநீரையே முகத்தில் தடவிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட விநோதங்களும் இங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

யூரியா என்பது  நீர்ச்சத்துக்கு காரணமானது. குறிப்பிட்ட சதவிகிதம் யூரியா உள்ள கான்சென்ட்ரேஷன், நம் சருமத்தின் ஈரப்பதம் குறையாமல், அதைத் தக்கவைக்கும். அதையும் இதையும் பொருத்திப் பார்த்து, தங்களது சிறுநீரையே மாய்ஸ்ச்சரைசராக உபயோகிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது.  எல்லா பொருள்களும் நம் சருமத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. இப்படி ஒவ்வாத பொருள்களால் ஏற்படும் அலர்ஜியை  சரும மருத்துவத்தில், 'அலர்ஜிக் கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' (Allergic contact dermatitis) என்று சொல்வோம்.  எலுமிச்சைப்பழம், புளி, கிராம்பு போன்றவற்றில் இயல்பிலேயே ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை இருக்கும். எனவே, இப்படி உள்ளுக்குச் சாப்பிடுகிற எல்லாவற்றையும் சருமத்தில் அப்ளை செய்வது ஆரோக்கியமான விஷயமல்ல. 

facepack

சருமத்தின் அழகையும் இளமையையும் தக்கவைக்க வேண்டுமானால், நிறைய காய்கறிகள், பழங்களை உள்ளுக்குச் சாப்பிடுங்கள். அவற்றையெல்லாம் சருமத்துக்குப் பயன்படுத்தி, சிக்கலை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். சருமப் பராமரிப்பு என்ற விஷயத்தை எளிதாக வைத்துக்கொள்ளுங்கள். உள்ளே சாப்பிடும் காய்கறி, பழங்களில் ஒன்றிரண்டு வேண்டுமானால் பிரச்னையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அவையும் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று அர்த்தமில்லை. சருமத்தில் அப்ளை செய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று புரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில் தயிர், தேன், ஓட்ஸ் போன்றவற்றை சருமத்தில் தடவிக்கொள்வதால் பிரச்னைகள் வராது. 

ஒரு ஃபேஸ்பேக்கோ, ஆயில் மசாஜோ செய்துகொண்டு காத்திருக்கும் அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ உங்களுக்கு ஒருவித ரிலாக்ஸிங் மனநிலையைத் தரும்பட்சத்தில் அவற்றைச் செய்து கொள்ளலாம். அந்த நல்ல உணர்வுக்காக இப்படிப்பட்ட வீட்டு சிகிச்சைகளை வாரம் ஒருமுறையோ, பத்து நாள்களுக்கு ஒருமுறையோ செய்து கொள்ளலாம். மற்றபடி அவை பலன் தரும் என்று நம்பாதீர்கள். அப்படி உங்கள் மனநிலைக்காக நீங்கள் தேர்வுசெய்கிற பொருள்களும் பாதுகாப்பானவையாக  இருக்கட்டும். எலுமிச்சை, புதினா என கிடைக்கும் எல்லாவற்றையும் சருமத்தில் தடவாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...