Skip to main content

கரண் ஜோஹர், இலியானா... பிரலங்களிடம் காணப்படும் body dysmorphia பிரச்னை.. தீர்வு என்ன?

அழகாக இருந்தாலும், கண்ணாடியில் மீண்டும் மீண்டும் முகத்தைப் பார்த்துவிட்டு, 'மூக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கலாம்', 'பிம்பிள்ஸ் அதிகமாக இருக்கு', 'இதை விட அழகாக இருந்திருக்கலாம்' என தன்னை உடனிருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தங்களது உடல் அமைப்பின் மீது திருப்தி இல்லாமல் ஏதோ ஒரு குறையை பற்றியே நினைத்துக்கொண்டு சிலர் இருப்பாரகள். இந்த நிலையை, மருத்துவ மொழியில் `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder) என்கிறார்கள்.

கரண் ஜோஹர்

இந்தப் பிரச்னை வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இருக்கிறது. 'காபி வித் கரண்' நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக 'Kill' படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய அவர், "எனக்கு எட்டு வயதிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்காக நிறைய மருத்துவர்களைச் சந்தித்து மருந்து, மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். இதனால் எனக்கு மனநலப் பிரச்னைகளும் ஏற்பட்டன. அதிலிருந்து மீள மிகவும் கடினமாக முயற்சி செய்தேன். எனது உடலை யாரிடமும் காண்பிக்கக் கூடாது என்பதற்காகவே எப்போதும் பெரிதாக இருக்கும் ஆடைகளை அணிவேன்.

`பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder)

நான் உடல் எடையைக் குறைத்து என் தோற்றத்தை நன்றாக வைத்துக்கொண்டாலும், இந்தப் பிரச்னையுடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று தெரிவித்தார். டெல்லியில் நடந்த 21-வது உலக மனநல மாநாட்டில் நடிகை இலியானாவும் தனக்கு பாடி டிஸ்மார்பியா இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

`பாடி டிஸ்மார்பிக் டிஸாடர்’ என்றால் என்ன என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. "உடலமைப்பு சார்ந்த இந்த உளவியல் சிக்கலைப் பெரும்பாலும் பெண்களுக்கான பிரச்னையாகவும், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரச்னையாகவுமே நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், ஆண் பெண் இருவரையும் சமஅளவில் இது பாதிக்கிறது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள், முடி வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள், சரும பாதிப்பு உள்ளவர்கள், வளரிளம் பருவத்தினர், கண் பிரச்னை உள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

மனநல மருத்துவர் குறிஞ்சி

சமூகத்தைக் கண்டு பயப்படும் ‘சோஷியல் போபியா’ (Social phobia) வகையைச் சார்ந்த இப்பிரச்னை, சம்பந்தப்பட்ட நபரை வெளி உலகுக்கு வந்து, மக்களோடு மக்களாகப் பழகவிடாது. ஓர் இடத்துக்குச் சென்றால், ‘நம்மை எப்படியெல்லாம் கிண்டலடிப்பார்கள்’ என்று கற்பனை செய்துகொண்டு, தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளும் மனோபாவம் இவர்களுக்கு நிறையவே இருக்கும்.

மூளையின் செயல்பாடுகளுக்கு உதவிசெய்யும் 'செரட்டோடினின்' (Serotonin) என்ற ஹார்மோனில் குறைபாடுகள் ஏற்படும்போது மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரச்னையைத் தீவிரப்படுத்தும். தகுந்த மனநல ஆலோசனை பெறுவதன் மூலம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

`பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்’ (Body Dysmorphic Disorder)

மேலும், சமூகத்தைப் பொறுத்தவரை இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் விமர்சனங்களைத் தவிர்ப்பது, அவர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது, அவர்களை நம்புவது போன்ற செயல்களின் மூலம், அவர்களுக்கு இந்தப் பிரச்னையிலிருந்து தீர்வு காண உதவ முடியும்" என்று அறிவுறுத்துகிறார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...