Skip to main content

அதிக மக்கள் தொகை, நிதி நெருக்கடி... ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சீனா!

சீனாவில் மக்கள் தொகை மற்றும் வயதானவா்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் நிதி நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. population

இதற்கு முன்பு, சீனாவில் ஆண்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக இருந்தது. அதே போல, அலுவலகப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 55, உடலுழைப்பை அதிகமாகச் செலுத்தும் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 50 என ஓய்வு பெறும் வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரிய அரசியல் மாநாட்டை கடந்த வாரம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அதில், சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை படிப்படியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை முதியோர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள முதியோர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஓய்வுபெறும் வயது எத்தனை அகவைகள் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. 2023-ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓய்வூதிய மேம்பாட்டு அறிக்கையின்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65 ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ’இந்த முடிவால் கடினமான உடல் உழைப்பு உள்ளிட்ட வேலைகளில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.சீனா (மாதிரி படம்) GM Crops: மக்காச்சோளம், சோயாபீன்.. 81 மரபணு மாற்று விதைகளுக்கு சீனா அனுமதி! சூழலியலாளர்கள் அதிர்ச்சி

மேலும், வசதியான, அதிக லாபம் ஈட்டக்கூடிய வேலைகளில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவதைத் தேர்வுசெய்ய மாட்டார்கள். எனவே, இளைய தலைமுறையினருக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும். தாமதமான ஓய்வு என்பது அவர்களின் ஓய்வூதியங்களையும் தாமதமாக்கும்’ எனப் பலரும் இணையத்தில் தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


http://dlvr.it/TB3HKd

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...