Skip to main content

அதிக மக்கள் தொகை, நிதி நெருக்கடி... ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சீனா!

சீனாவில் மக்கள் தொகை மற்றும் வயதானவா்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டின் நிதி நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. population

இதற்கு முன்பு, சீனாவில் ஆண்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக இருந்தது. அதே போல, அலுவலகப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 55, உடலுழைப்பை அதிகமாகச் செலுத்தும் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 50 என ஓய்வு பெறும் வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரிய அரசியல் மாநாட்டை கடந்த வாரம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அதில், சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை படிப்படியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை முதியோர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள முதியோர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஓய்வுபெறும் வயது எத்தனை அகவைகள் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. 2023-ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓய்வூதிய மேம்பாட்டு அறிக்கையின்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 65 ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ’இந்த முடிவால் கடினமான உடல் உழைப்பு உள்ளிட்ட வேலைகளில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.சீனா (மாதிரி படம்) GM Crops: மக்காச்சோளம், சோயாபீன்.. 81 மரபணு மாற்று விதைகளுக்கு சீனா அனுமதி! சூழலியலாளர்கள் அதிர்ச்சி

மேலும், வசதியான, அதிக லாபம் ஈட்டக்கூடிய வேலைகளில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவதைத் தேர்வுசெய்ய மாட்டார்கள். எனவே, இளைய தலைமுறையினருக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும். தாமதமான ஓய்வு என்பது அவர்களின் ஓய்வூதியங்களையும் தாமதமாக்கும்’ எனப் பலரும் இணையத்தில் தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


http://dlvr.it/TB3HKd

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...