Skip to main content

``இஸ்ரேல் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது..!" - கமலா ஹாரிஸ்

பாலஸ்தீனம், சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், சிரியாவில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் (Golan Heights) மீது வான்வழித் தாக்குதல் நேற்று நடைபெற்றது. இதில் 11 சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், 20 போ் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தத் தாக்குதலை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய நிலையில், அந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா மறுத்திருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள கமலா ஹாரிஸ் நேற்று, இஸ்ரேலுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பக கமலா ஹாரிஸ், வடக்கு இஸ்ரேலில் உள்ள மஜ்தல் ஷம்ஸ் என்ற இடத்தில் கால்பந்து மைதானத்தில் நேற்று ஹிஸ்புல்லா நடத்திய கொடூரமான தாக்குதலில் குழந்தைகள், இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அமெரிக்கா அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இந்த கொடூரமான தாக்குதலை கண்டிப்பதோடு, கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவருக்காகவும் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பில் கார்டன், ``இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, மேலும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்க துணை அதிபரின் ஆதரவு இரும்புக் கவசம் போன்றது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் 11: ஹிஸ்புல்லா முதல் இஸ்லாமிக் ஜிகாத் வரை… இஸ்‌ரேலின் எதிரிகள் ஏராளம்!


http://dlvr.it/TBBk7k

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...