Skip to main content

"இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு!" - அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப் பெற்ற சலவைத்தொழிலாளியின் மகள்

அமெரிக்க வெளியுறவு துறை நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பைப் பயிலும் வாய்ப்பைப் பெறுள்ளார் லக்னோவைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் மகளான தீபாளி கனோஜ்யா.

16 வயதான தீபாளி கனோஜ்யா லக்னோவைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியின் அப்பா ஒரு சலவைத் தொழிலாளி. ஆனால் அவளது தந்தை உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தீபாளிதான் வீட்டில் டியூசன் நடத்தி தனது அம்மாவிற்கு உதவி செய்து வந்திருக்கிறார். தீபாளி - நண்பர்களுடன்

நலிந்த பொருளாதார பின்னணியைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பைப் பயிலும் வாய்ப்பை இந்தியாவில் இருந்து 30 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அந்த 30 மாணவர்களில் 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியும் ஒருவர். இது குறித்துப் பேசியிருக்கும் தீபாளி, "இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களில் நானும் ஒருவர் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்வேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.தீபாளி கனோஜ்யா

"முதல் முறை அவளைத் தனியாக அனுப்புவதற்குச் சற்று பதற்றமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என்று தீபாளியின் அம்மா கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 19-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் தீபாளி கனோஜ்யாவிற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


http://dlvr.it/TB9hTz

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...