Skip to main content

கார் விபத்தில் இறந்த காதலன்... 3000 ஆண்டுகள் பழைமையான `Ghost Marriage’ சடங்குக்கு தயாராகும் காதலி!

தைவானை சேர்ந்த `யூ’ (Yu)என்றப் பெண் தன் காதலன், நண்பர்களுடன் ஜூலை 15 அன்று காரில் சென்றிருக்கிறார். அப்போது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில், காரில் இருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். யூ-வின் காலிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவர் உயிர் பிழைத்த நிலையில், யூ-வின் காதலன் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக பேசிய யூ, ``விபத்து நடந்த அந்த நிகழ்வு இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. என் காதலன், அவனது சகோதரி, எங்கள் நண்பன் மூவரும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் பார்த்தபோது மனம் உடைந்தேன்.மணமகள்

என் காலில் காயங்கள் இருந்தபோதிலும், அவர்களை மீட்க முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. இறுதியில் என் காதலனை இழந்துவிட்டேன். ஆனால், எங்கள் காதல் உண்மையானது. அதை கௌரவிக்க வேண்டும் என விரும்புகிறேன். என் காதலனுக்கு வயதான தாயார் மட்டும்தான் இருக்கிறார். எனவே, என் காதலனின் அம்மாவை கவனித்துக் கொள்ளவும், என் அடுத்தகட்ட வாழ்வை அவர்களுடன் வாழவும் விரும்புகிறேன். அதற்காக பேய் திருமண சடங்கை(Ghost Marriage) செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பேய் திருமணம்(Ghost Marriage):

பேய் திருமணம் என்பது சீனாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான பாரம்பரிய முறை. திருமணம் செய்துகொள்ளாமல் இறந்தவர்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மரணத்துக்குப் பிறகு தனக்காக யாரும் இல்லை என்ற வேதனையை அனுபவிப்பதாகவும், அதனால் இறந்தவரை நேசித்தவர், உறவினர்கள் முன்னிலையில் மானசீகமாக இறந்தவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பணிக்கும் ஒரு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. மேலும், பேய் திருமண செய்துகொள்பவர் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு, மீதி வாழ்வை வாழ்வார்கள் எனக் கூறப்படுகிறது.மணமகள்

எப்படி நடக்கும் இந்த திருமணம்:

இறந்தவர்களின் புகைப்படம், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருட்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இறந்தவரை திருமணம் செய்துகொள்பவர் திருமண உடையில் அலகரித்து திருமணம் போன்றே விமரிசையாக இந்த சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88சிவகாசி: காதல் திருமணம்; மனைவி கண்முன்னே இளைஞர் படுகொலை - பெண்ணின் அண்ணன், தம்பி உள்ளிட்ட மூவர் கைது


http://dlvr.it/TB5HqM

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...