Skip to main content

கார் விபத்தில் இறந்த காதலன்... 3000 ஆண்டுகள் பழைமையான `Ghost Marriage’ சடங்குக்கு தயாராகும் காதலி!

தைவானை சேர்ந்த `யூ’ (Yu)என்றப் பெண் தன் காதலன், நண்பர்களுடன் ஜூலை 15 அன்று காரில் சென்றிருக்கிறார். அப்போது கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில், காரில் இருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். யூ-வின் காலிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவர் உயிர் பிழைத்த நிலையில், யூ-வின் காதலன் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக பேசிய யூ, ``விபத்து நடந்த அந்த நிகழ்வு இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. என் காதலன், அவனது சகோதரி, எங்கள் நண்பன் மூவரும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் பார்த்தபோது மனம் உடைந்தேன்.மணமகள்

என் காலில் காயங்கள் இருந்தபோதிலும், அவர்களை மீட்க முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. இறுதியில் என் காதலனை இழந்துவிட்டேன். ஆனால், எங்கள் காதல் உண்மையானது. அதை கௌரவிக்க வேண்டும் என விரும்புகிறேன். என் காதலனுக்கு வயதான தாயார் மட்டும்தான் இருக்கிறார். எனவே, என் காதலனின் அம்மாவை கவனித்துக் கொள்ளவும், என் அடுத்தகட்ட வாழ்வை அவர்களுடன் வாழவும் விரும்புகிறேன். அதற்காக பேய் திருமண சடங்கை(Ghost Marriage) செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பேய் திருமணம்(Ghost Marriage):

பேய் திருமணம் என்பது சீனாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான பாரம்பரிய முறை. திருமணம் செய்துகொள்ளாமல் இறந்தவர்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மரணத்துக்குப் பிறகு தனக்காக யாரும் இல்லை என்ற வேதனையை அனுபவிப்பதாகவும், அதனால் இறந்தவரை நேசித்தவர், உறவினர்கள் முன்னிலையில் மானசீகமாக இறந்தவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பணிக்கும் ஒரு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. மேலும், பேய் திருமண செய்துகொள்பவர் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு, மீதி வாழ்வை வாழ்வார்கள் எனக் கூறப்படுகிறது.மணமகள்

எப்படி நடக்கும் இந்த திருமணம்:

இறந்தவர்களின் புகைப்படம், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் பிற கலைப்பொருட்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இறந்தவரை திருமணம் செய்துகொள்பவர் திருமண உடையில் அலகரித்து திருமணம் போன்றே விமரிசையாக இந்த சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88 />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88சிவகாசி: காதல் திருமணம்; மனைவி கண்முன்னே இளைஞர் படுகொலை - பெண்ணின் அண்ணன், தம்பி உள்ளிட்ட மூவர் கைது


http://dlvr.it/TB5HqM

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...