Skip to main content

Malaria: ``பருவம் தவறிய மழையால் மலேரியா பரவலாம்... தடுக்க இதையெல்லாம் பண்ணுங்க!''

பருவமழை காலங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவுவது இயல்பு. பருவமழை பொழியும் மாதங்களாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களைக் குறிப்பிடுவோம். அந்தக் காலகட்டங்களில் சுகாதாரத்துறையும் விழித்துக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது, கொசு உற்பத்தியைத் தடுப்பது என தனது பணிகளைச் செய்யத் தொடங்கும்.

பொதுநல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா

ஆனால், தற்போது காலம் தவறிப் பெய்யும் மழை அதிகமாகிவிட்டது. அதனால் இந்தக் காலத்திலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நாடு முழுவதும் வெப்ப அலை வீசிய போதிலும் உத்தரப்பிரதேசத்தின் சோன்பந்த்ரா மாவட்டத்தின் கிராம மக்கள் பலரும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

"மலேரியா நோய் என்பது அனோஃபிலஸ் எனும் கொசு இனம் கடிப்பதால் ஏற்படக்கூடிய நோய்.

ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை பயன்படுத்தலாம்.

  • குழந்தைகளுக்கு கையுறை, காலுறை என உடல் முழுவதும் மூடும் உடைகளை அணிவிக்க வேண்டும்.

  • வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்தி ஆகாமலும் தவிர்க்க வேண்டும்.

  • கொசு விரட்டி, கொசு எதிர்க்கும் களிம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

  • மலேரியா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது ப்ளாஸ்மோடியம் கிருமிக் கொல்லிகள் மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஆனால், இதை மருத்துவர்களது பரிந்துரையின் பேரில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Malaria: அறிகுறிகள் என்னென்ன?

அறிகுறிகள் என்னென்ன?

  • குளிர் காய்ச்சல்,

  • தலைவலி,

  • உடல்வலி,

  • அதிகமான வியர்வை

சில நேரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்போது, மக்கள் சாதாரண காய்ச்சல் என்று எடுத்துக்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர். இது முற்றிலும் தவறு. என்னவாக இருந்தாலும் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

முக்கியமாக, ஓரிரு நாள்கள் காய்ச்சல் இருந்தால் உடனே ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை பாதிக்கப்பட்டால்...

மலேரியா உறுதி செய்யப்பட்டால் அதற்கான ப்ளாஸ்மோடியம் கொல்லி சிறப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. மலேரியா நோய்க்கான சிகிச்சை மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே கிடைக்கின்றன.

நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் மூளையை பாதிக்கக் கூடிய செரிப்ரெல் மலேரியா வகையாகவும் மாற்றமடையும். இது முக்கிய‌ உள்ளுறுப்புகளை பாதித்து உயிரைப் பறிக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.

சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன்‌‌ மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க முடியும்‌. மேலும், மலேரியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படும் தடுப்பூசியைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது" என்று விளக்கினார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...