Skip to main content

Happy Couple: உங்க மனைவிக்கு உங்களை ரொம்ப பிடிக்கணுமா..? | காமத்துக்கு மரியாதை - 179

கணவர்கள் எப்படி நடந்துகொண்டால் மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்..? கணவர்கள் தங்களை எப்படி நடத்தினால் பெண்களுக்குப் பிடிக்கும்..? தாம்பத்திய உறவில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்..? இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில்களை, காமசூத்ரா மற்றும் சில ஆய்வுகளின் அடிப்படையில் 10 பாயின்ட்டுகளாக பாலியல் மருத்துவர் காமராஜ் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். ஏனென்றால், ஆணின் தாம்பத்திய ஈடுபாடு என்பது பல்ப் போல... ஸ்விட்ச் போடவும் எரிவதுபோல உணர்வு, உறவு, உடனடியாக தூக்கம் என்று இருப்பார்கள்.

ஆனால், பெண்கள் அயர்ன் பாக்ஸ்போல... உணர்வு, உறவு இரண்டுமே மெதுவாகத்தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். தவிர, ஸ்விட்ச்சை ஆஃப் செய்த பிறகும் அயர்ன் பாக்ஸ் சிறிது நேரம் சூடாக இருப்பதுபோல உறவுக்குப் பிறகும் கணவரின் அருகாமையை விரும்புவார்கள். அதனால்தான், தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.

2. உறவின்போது ஆண்கள் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனால், பெண்கள் அந்த நேரத்தில் கணவன் தன் உடலை பாராட்ட வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால், இதை பெரும்பாலான ஆண்கள் செய்வதே இல்லை.

Sex Education

3. அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் மென்மையுடனும் காதலுடனும் நீண்ட நேரம் முத்தமிடுகிற ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கணவர்கள் இந்த பாயின்ட்டையும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. கூந்தலைத் தடவிக்கொடுக்கிற கணவரை மனைவிக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இதைப் பெரும்பான்மை ஆண்கள் செய்வதே இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

5. தன்னை அழகாக உணரச் செய்கிற ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். 'நீ எனக்கு முக்கியமானவள்' என்பதை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ உணரச் செய்கிற கணவர்களும் பெண்களுக்குப் பிடித்தமானவர்களே...

Sexual Wellness

6. காதலிக்கும்போது 24 மணி நேரமும் காதலித்துக் கொண்டிருக்கிற ஆண்கள், திருமணம் முடிந்தவுடன் முதலில் தொலைப்பது அதைத்தான். 24 மணி நேரம் ஒரே வீட்டுக்குள், ஒரே அறைக்குள் இருக்கும்போது இணையின் குற்றம், குறைகளைச் சொல்லிக்காட்டாமல் இருக்க முடியாதுதான். அதையும் மீறி திருமணத்துக்குப் பிறகும் தன்னை காதலிக்கிற கணவர்களை மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

7. ஒரு விருந்தினரை நடத்துவதுபோல, தன்னை மரியாதையாக நடத்துகிற கணவரை, பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்.

8. பெண்ணின் உடலையறிந்து அவளை உச்சக்கட்டம் அடைய வைக்கிற ஆணையும், படுக்கையறைக்கு உள்ளே எப்படிக் கொண்டாடுகிறானோ, அதைப்போலவே வெளியேயும் தன்னை அன்பாக நடத்துகிற கணவர்களை மனைவிகளுக்கு மிக மிகப் பிடிக்கும்.

Dr. Kamaraj

9. காதலிக்கும்போது காதலர்களாக இருக்கிற ஆண்கள், திருமணம் முடிந்தவுடன் மேனேஜர் ஆகி விடுகிறார்கள். ஒரு மேனேஜர் தன் கீழ் வேலைபார்க்கும் கிளார்க்கிடம் உத்தரவிடுவதுபோல மனைவிக்கு உத்தரவிட ஆரம்பித்து விடுகிறார்கள். உத்தரவிடுவது காதலை அழித்து விடும். இப்படி உத்தரவிடுகிற கணவர்களை பெண்களுக்குப் பிடிப்பதேயில்லை என்பதுதான் நிஜம்.

10. உடல் சுத்தமின்மை, வாய் சுத்தமின்மை, அழுக்கு ஆடைகள், தொப்பை... இப்படியிருக்கிற கணவர்களை தாம்பத்திய உறவின்போது பெண்கள் வெறுக்கவே செய்வார்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...