Skip to main content

Happy Couple: உங்க மனைவிக்கு உங்களை ரொம்ப பிடிக்கணுமா..? | காமத்துக்கு மரியாதை - 179

கணவர்கள் எப்படி நடந்துகொண்டால் மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்..? கணவர்கள் தங்களை எப்படி நடத்தினால் பெண்களுக்குப் பிடிக்கும்..? தாம்பத்திய உறவில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்..? இந்த மூன்று கேள்விகளுக்குமான பதில்களை, காமசூத்ரா மற்றும் சில ஆய்வுகளின் அடிப்படையில் 10 பாயின்ட்டுகளாக பாலியல் மருத்துவர் காமராஜ் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

1. தாம்பத்திய உறவில் நிதானமாகச் செயல்படுகிற கணவனை, மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும். ஏனென்றால், ஆணின் தாம்பத்திய ஈடுபாடு என்பது பல்ப் போல... ஸ்விட்ச் போடவும் எரிவதுபோல உணர்வு, உறவு, உடனடியாக தூக்கம் என்று இருப்பார்கள்.

ஆனால், பெண்கள் அயர்ன் பாக்ஸ்போல... உணர்வு, உறவு இரண்டுமே மெதுவாகத்தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். தவிர, ஸ்விட்ச்சை ஆஃப் செய்த பிறகும் அயர்ன் பாக்ஸ் சிறிது நேரம் சூடாக இருப்பதுபோல உறவுக்குப் பிறகும் கணவரின் அருகாமையை விரும்புவார்கள். அதனால்தான், தாம்பத்திய உறவில் நிதானமாக, ஜென்டிலாக ஈடுபடுகிற கணவனை, மனைவிக்கு மிகவும் பிடிக்கும்.

2. உறவின்போது ஆண்கள் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனால், பெண்கள் அந்த நேரத்தில் கணவன் தன் உடலை பாராட்ட வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால், இதை பெரும்பாலான ஆண்கள் செய்வதே இல்லை.

Sex Education

3. அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் மென்மையுடனும் காதலுடனும் நீண்ட நேரம் முத்தமிடுகிற ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கணவர்கள் இந்த பாயின்ட்டையும் மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. கூந்தலைத் தடவிக்கொடுக்கிற கணவரை மனைவிக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இதைப் பெரும்பான்மை ஆண்கள் செய்வதே இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

5. தன்னை அழகாக உணரச் செய்கிற ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். 'நீ எனக்கு முக்கியமானவள்' என்பதை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ உணரச் செய்கிற கணவர்களும் பெண்களுக்குப் பிடித்தமானவர்களே...

Sexual Wellness

6. காதலிக்கும்போது 24 மணி நேரமும் காதலித்துக் கொண்டிருக்கிற ஆண்கள், திருமணம் முடிந்தவுடன் முதலில் தொலைப்பது அதைத்தான். 24 மணி நேரம் ஒரே வீட்டுக்குள், ஒரே அறைக்குள் இருக்கும்போது இணையின் குற்றம், குறைகளைச் சொல்லிக்காட்டாமல் இருக்க முடியாதுதான். அதையும் மீறி திருமணத்துக்குப் பிறகும் தன்னை காதலிக்கிற கணவர்களை மனைவிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

7. ஒரு விருந்தினரை நடத்துவதுபோல, தன்னை மரியாதையாக நடத்துகிற கணவரை, பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்.

8. பெண்ணின் உடலையறிந்து அவளை உச்சக்கட்டம் அடைய வைக்கிற ஆணையும், படுக்கையறைக்கு உள்ளே எப்படிக் கொண்டாடுகிறானோ, அதைப்போலவே வெளியேயும் தன்னை அன்பாக நடத்துகிற கணவர்களை மனைவிகளுக்கு மிக மிகப் பிடிக்கும்.

Dr. Kamaraj

9. காதலிக்கும்போது காதலர்களாக இருக்கிற ஆண்கள், திருமணம் முடிந்தவுடன் மேனேஜர் ஆகி விடுகிறார்கள். ஒரு மேனேஜர் தன் கீழ் வேலைபார்க்கும் கிளார்க்கிடம் உத்தரவிடுவதுபோல மனைவிக்கு உத்தரவிட ஆரம்பித்து விடுகிறார்கள். உத்தரவிடுவது காதலை அழித்து விடும். இப்படி உத்தரவிடுகிற கணவர்களை பெண்களுக்குப் பிடிப்பதேயில்லை என்பதுதான் நிஜம்.

10. உடல் சுத்தமின்மை, வாய் சுத்தமின்மை, அழுக்கு ஆடைகள், தொப்பை... இப்படியிருக்கிற கணவர்களை தாம்பத்திய உறவின்போது பெண்கள் வெறுக்கவே செய்வார்கள்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...