Skip to main content

Doctor Vikatan: பீரியட்ஸ் தள்ளிப்போனால் எத்தனை நாள்களில் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

Doctor Vikatan: என் வயது 26. திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன.  கர்ப்பத்துக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை பீரியட்ஸ் தள்ளிப்போனால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டாம் என்கிறார் என் மாமியார். அதெல்லாம் அந்தக் காலம்... அடுத்தநாளே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்கிறாள் தோழி. இருவர் சொல்வதில் எது சரி... பீரியட்ஸ் தள்ளிப்போன எத்தனையாவது நாளில் மருத்துவரை அணுக வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

உங்களுடைய மாதவிலக்கு சுழற்சி ரெகுலராக இருக்கும்பட்சத்தில், 2 நாள்கள் பீரியட்ஸ் தள்ளிப்போனாலே, உடனடியாக மருத்துவரிடம் சென்று செக் செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

ஒருவேளை அது கர்ப்பம் தரித்திருப்பதன் அறிகுறியாக இருந்தால்,  சீக்கிரமே அந்தத் தாய் ஃபோலிக் அமில (folic acid) மாத்திரைகளைத் தொடங்குவதன் மூலம், குழந்தையின் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமாக இருக்கச் செய்ய முடியும்.  முந்தைய காலத்தில் எல்லாம் 40- 50 நாள்கள் ஆன பிறகு மருத்துவரைப் பார்த்தால் போதும் என்று சொல்வார்கள். ஆனால், இன்று அப்படியெல்லாம் அவசியமில்லை. 

எவ்வளவு சீக்கிரம் கர்ப்பிணிக்கு ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் என்பது  விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதால்,  பீரியட்ஸ் தள்ளிப்போன உடனேயே மருத்துவரைச் சந்திக்கலாம்.  அது தவிர, அந்தப் பெண்ணுக்கு கர்ப்பம் ஆரோக்கியமான முறையில்தான் உருவாகியிருக்கிறதா அல்லது கருக்குழாயில் பதிந்திருக்கிறதா என்றும் பார்க்க வேண்டியது அவசியம். அரிதாக சிலருக்கு கருக்குழாய்களில் கரு பதிந்து வளரத் தொடங்கும். 'எக்டோபிக் பிரெக்னன்சி' (ectopic pregnancy ) என்று சொல்லப்படும் இதைச் சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டால், மருந்துகளின் உதவியோடு அந்தக் கருவை அகற்றிவிடலாம்.

Periods: ரத்தப் பரிசோதனை...

பீரியட்ஸ் தள்ளிப்போனதாக மருத்துவரைச் சந்தித்தால் அவர் முதலில் பீட்டா ஹெச்சிஜி (Beta hCG) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்வார். அந்த டெஸ்ட்டில் சில அளவுகளைப் பார்க்க வேண்டியிருக்கும். அதில் சந்தேகம் வந்தால் இன்னும் இரண்டு நாள்கள் காத்திருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் அதே டெஸ்ட்டை செய்யச் சொல்வார்கள். பீட்டா ஹெச்சிஜி அளவானது இரண்டு மடங்காக வேண்டும். அப்படி ஆகும்பட்சத்தில் அந்தக் கர்ப்பம் நல்ல முறையில் இருப்பதாகவும், நல்லபடி வளரும் என்றும் அர்த்தம். 

ஒருவேளை அந்த பீட்டா ஹெச்சிஜி அளவானது மிகக் குறைந்த அளவே அதிகரித்திருந்தால், கரு நன்றாக வளரவில்லை என அர்த்தம்.  கரு கலைந்துபோகவோ, கருக்குழாயில் பதிந்து வளரவோ வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணுக்கு வழக்கத்தைவிட சற்று சீக்கிரமே அல்ட்ரா சவுண்டு சோதனை செய்ய வேண்டியிருக்கும்.  அதாவது 2 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, கருவானது கர்ப்பப்பையில் இருக்கிறதா, வெளியே கருக்குழாயில் உருவாகியிருக்கிறதா என்று பார்க்கப்படும். 

கர்ப்பப்பையில்தான் இருக்கிறது என்றால், கருவின் இதயத்துடிப்பை செக் செய்வார்கள் மருத்துவர்கள்.  இதயத்துடிப்பு இருக்கும்பட்சத்தில் அந்தக் கரு நன்றாகவே வளரும்.  கருக்குழாயில் கரு பதிந்திருந்தால் லேப்ராஸ்கோப்பி அல்லது மருந்துகள் என எந்த முறையில் அதை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர் முடிவு செய்வார்.

எனவேதான், பீரியட்ஸ் தள்ளிப்போனதும் தாமதிக்காமல் உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...