Skip to main content

Masturbation: டீன் ஏஜ் சுய இன்பம்... ஓகே தானா..? - காமத்துக்கு மரியாதை 163

கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். தங்களுடைய டீன் ஏஜ் மகன் சுய இன்பம் செய்வதையறிந்த பெற்றோர்கள் பயப்பட வேண்டுமா அல்லது அது இயல்பானதென்று கடந்துவிட வேண்டுமா என்றும் விளக்கமாகச் சொல்கிறார் அவர்.

''மனித வளர்ச்சியின் ஒரு பகுதிதான் பருவமடைதல். பெண் குழந்தைகள் என்றால் மாதவிடாய் வர ஆரம்பிக்கும். இதை 'மெனார்க்கி' என்போம். இதுவே ஆண் குழந்தைகள் என்றால், 13 அல்லது 14 வயதில் பருவமடைவார்கள். அதற்கு முன்னரும் ஆகலாம். அது பரம்பரைத்தன்மையைப் பொறுத்தது. தூக்கத்தில் பாலியல் கனவுகள் வந்து விந்து வெளிவரும். இதை ஸ்பெர்மாக்கி (spermarche) என்போம். ஆணுறுப்பைத் தொடும்போது ஒருவித கிளர்ச்சியும் இன்பமும் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். பெண்களைப் பார்த்து ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் ஆணுறுப்பைத் தூண்டி விந்து வெளியேறும்போது மிகப்பெரிய கிளர்ச்சி கிடைப்பதையும் தெரிந்துகொள்வார்கள்.

Sexual wellness

இது 15 வயதிலும் நிகழலாம். 18 வயதிலும் நிகழலாம். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பத்தைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்'' என்றவர், சுய இன்பம் சரியா, தவறா; மகனின் சுய இன்பத்தைப் பெற்றோர் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விளக்க ஆரம்பித்தார்.

''இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஆண்களுக்கும் 13 அல்லது 14 வயதிலேயே திருமணம் நடந்துவிடும். அடுத்த சில வருடங்களிலேயே அவர்களுக்குக் குழந்தையும் பிறந்துவிடும். அந்தக் காலகட்டத்தில் அதுதான் வழக்கம் என்பதால், `இவ்ளோ சின்ன வயசுலேயே செக்ஸ் பண்ணி குழந்தை பெத்துட்டாங்களே' என்று யாரும் இதைத் தவறாகப் பார்க்கவில்லை. ஆனால், இன்றைக்கு டீன் ஏஜ் ஆண்கள் சுய இன்பம் செய்தால் `இந்த வயசுலேயே இப்படியா' என்று பதற்றப்படுகிறோம். அவர்களைக் குற்றவாளிகள் போலவும் நடத்துகிறோம். இது ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம் இன்றைய ஆண்களுக்குக் கிட்டத்தட்ட இருபதுகளின் இறுதியிலோ, முப்பதுகளின் ஆரம்பத்திலோதான் திருமணமே நடக்கிறது. இந்த வயதுவரை பெரும்பாலான ஆண்கள் பாலியல் உறவில்லாமல்தான் இருக்கிறார்கள். அதனால், இயற்கையான பாலியல் உந்துதலால் அவர்கள் சுய இன்பம் செய்வதில் தவறில்லை.

Dr. Kamaraj

13 வயதில் பருவமடைகிற ஓர் ஆணால் 30 வயது வரைக்கும் எப்படி எந்தவிதமான பாலியல் உணர்வும் இல்லாமல் இருக்க முடியும்? `ச்சீ... என் பிள்ள சுய இன்பம் செய்றானே' என்று அவன் மீது கோபப்படவும் தேவையில்லை. `இதனால பின்னாடி அவனோட திருமண வாழ்க்கையில பிரச்னை வருமோ' என்று பயப்படவும் தேவையில்லை. சுய இன்பம் என்பது எந்த ஆபத்துமில்லாத, இயல்பான பாலியல் வெளிப்பாடு.

19-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரைக்கும் விந்தை இழந்துவிட்டால் உடல் பலவீனமாகிவிடும், நரம்புகள் தளர்ந்துவிடும். பைத்தியம் பிடித்துவிடும் என்றெல்லாம் நம்பினார்கள். ஆனால், அதன் பிறகான ஆராய்ச்சிகள் `சுய இன்பத்தால் பின்னாளில் எந்தப் பிரச்னையும் வராது' என்று நிரூபித்துவிட்டன.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் டீன் ஏஜ் கருத்தரிப்பு அதிகமாகிவிட்டதால், சுய இன்பம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். சுய இன்பம் செய்பவர்கள் கெட்டவர்கள் இல்லை. இயல்பான பாலியல் உணர்வை அடுத்தவருக்குத் தொல்லை தராமல் அவர்களே தணித்துக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்'' என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...