Skip to main content

Masturbation: டீன் ஏஜ் சுய இன்பம்... ஓகே தானா..? - காமத்துக்கு மரியாதை 163

கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். தங்களுடைய டீன் ஏஜ் மகன் சுய இன்பம் செய்வதையறிந்த பெற்றோர்கள் பயப்பட வேண்டுமா அல்லது அது இயல்பானதென்று கடந்துவிட வேண்டுமா என்றும் விளக்கமாகச் சொல்கிறார் அவர்.

''மனித வளர்ச்சியின் ஒரு பகுதிதான் பருவமடைதல். பெண் குழந்தைகள் என்றால் மாதவிடாய் வர ஆரம்பிக்கும். இதை 'மெனார்க்கி' என்போம். இதுவே ஆண் குழந்தைகள் என்றால், 13 அல்லது 14 வயதில் பருவமடைவார்கள். அதற்கு முன்னரும் ஆகலாம். அது பரம்பரைத்தன்மையைப் பொறுத்தது. தூக்கத்தில் பாலியல் கனவுகள் வந்து விந்து வெளிவரும். இதை ஸ்பெர்மாக்கி (spermarche) என்போம். ஆணுறுப்பைத் தொடும்போது ஒருவித கிளர்ச்சியும் இன்பமும் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். பெண்களைப் பார்த்து ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் ஆணுறுப்பைத் தூண்டி விந்து வெளியேறும்போது மிகப்பெரிய கிளர்ச்சி கிடைப்பதையும் தெரிந்துகொள்வார்கள்.

Sexual wellness

இது 15 வயதிலும் நிகழலாம். 18 வயதிலும் நிகழலாம். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே தங்களுடைய 20 வயதுக்குள் சுய இன்பத்தைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்'' என்றவர், சுய இன்பம் சரியா, தவறா; மகனின் சுய இன்பத்தைப் பெற்றோர் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விளக்க ஆரம்பித்தார்.

''இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஆண்களுக்கும் 13 அல்லது 14 வயதிலேயே திருமணம் நடந்துவிடும். அடுத்த சில வருடங்களிலேயே அவர்களுக்குக் குழந்தையும் பிறந்துவிடும். அந்தக் காலகட்டத்தில் அதுதான் வழக்கம் என்பதால், `இவ்ளோ சின்ன வயசுலேயே செக்ஸ் பண்ணி குழந்தை பெத்துட்டாங்களே' என்று யாரும் இதைத் தவறாகப் பார்க்கவில்லை. ஆனால், இன்றைக்கு டீன் ஏஜ் ஆண்கள் சுய இன்பம் செய்தால் `இந்த வயசுலேயே இப்படியா' என்று பதற்றப்படுகிறோம். அவர்களைக் குற்றவாளிகள் போலவும் நடத்துகிறோம். இது ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம் இன்றைய ஆண்களுக்குக் கிட்டத்தட்ட இருபதுகளின் இறுதியிலோ, முப்பதுகளின் ஆரம்பத்திலோதான் திருமணமே நடக்கிறது. இந்த வயதுவரை பெரும்பாலான ஆண்கள் பாலியல் உறவில்லாமல்தான் இருக்கிறார்கள். அதனால், இயற்கையான பாலியல் உந்துதலால் அவர்கள் சுய இன்பம் செய்வதில் தவறில்லை.

Dr. Kamaraj

13 வயதில் பருவமடைகிற ஓர் ஆணால் 30 வயது வரைக்கும் எப்படி எந்தவிதமான பாலியல் உணர்வும் இல்லாமல் இருக்க முடியும்? `ச்சீ... என் பிள்ள சுய இன்பம் செய்றானே' என்று அவன் மீது கோபப்படவும் தேவையில்லை. `இதனால பின்னாடி அவனோட திருமண வாழ்க்கையில பிரச்னை வருமோ' என்று பயப்படவும் தேவையில்லை. சுய இன்பம் என்பது எந்த ஆபத்துமில்லாத, இயல்பான பாலியல் வெளிப்பாடு.

19-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரைக்கும் விந்தை இழந்துவிட்டால் உடல் பலவீனமாகிவிடும், நரம்புகள் தளர்ந்துவிடும். பைத்தியம் பிடித்துவிடும் என்றெல்லாம் நம்பினார்கள். ஆனால், அதன் பிறகான ஆராய்ச்சிகள் `சுய இன்பத்தால் பின்னாளில் எந்தப் பிரச்னையும் வராது' என்று நிரூபித்துவிட்டன.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் டீன் ஏஜ் கருத்தரிப்பு அதிகமாகிவிட்டதால், சுய இன்பம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். சுய இன்பம் செய்பவர்கள் கெட்டவர்கள் இல்லை. இயல்பான பாலியல் உணர்வை அடுத்தவருக்குத் தொல்லை தராமல் அவர்களே தணித்துக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்'' என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...