Skip to main content

Doctor Vikatan: தினமும் இரவு உணவுக்கு சிறுதானிய கஞ்சி குடிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்னையும் இல்லை. இந்நிலையில் நான் தினமும் இரவு உணவுக்கு சிறுதானியங்களில் தயாரித்த கஞ்சியை எடுத்துக்கொள்ளலாமா?

-suresh, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.

நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

சிறுதானியங்களைப் பொறுத்தவரை காலையில் சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெற முடியும். அது முடியாத பட்சத்தில் மதியமும் சாப்பிடலாம். வெள்ளை சாதத்துக்கு மாற்றாக சிறுதானியங்களைச் சாப்பிடப் பழகலாம். இரவில் சாப்பிட விரும்பும் பட்சத்தில், அதிகபட்சம் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. சிறுதானிய உணவுகளை எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஒரு வரைமுறை உள்ளது. அந்த வகையில் முக்கால் கப் அளவுக்கு எடுத்துக் கொள்வதுதான் சரியானது. சிறுதானியங்களைச் சமைக்க நிறைய தண்ணீர் தேவைப்படும். முழுமையாக வேகவைத்துதான் சாப்பிட வேண்டும்.  சிறுதானிய உணவுகளைச் சாப்பிடும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

வாரத்தில் 3 முதல் 4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகள் சாப்பிட்டால் போதுமானது. தினமும் மூன்று வேளைகளுக்கும் சிறுதானிய உணவுகள் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசிமில்லை. ஒருநாள்விட்டு ஒருநாள் சாப்பிடலாம். இடைப்பட்ட நாள்களில் அரிசி, கோதுமை உணவுகள் சாப்பிடலாம்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையின்றி சிறுதானிய உணவுகளைச் சாப்பிட வேண்டாம். சிலருக்கு தைராய்டு பாதிப்பை இந்த உணவுகள் தீவிரப்படுத்தக்கூடும் என்பதே காரணம். 

ராகி கஞ்சி

சிலவகை சிறுதானியங்கள் 'காய்ட்ரோஜென்' (goitrogens) என்ற ஹார்மோனை விடுவிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதன் விளைவாக  உடலில் உப்புச்சத்து தேங்கிவிடும். உடலில் சோடியம் அளவு அதிகரிப்பது நல்லதல்ல. எனவே, ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சீசனுக்கேற்ப சிறுதானியங்களைத் தேர்வு செய்து சாப்பிடுவதும் அவசியம்.

உதாரணத்துக்கு, இப்போதைய கோடைக்காலத்துக்கு குதிரைவாலி, கேழ்வரகு போன்றவை சிறந்தவை. இவை உடலைக் குளிர்ச்சியாக வைக்கும். குளிர்காலத்தில் கம்பு போன்று உடல் வெப்பத்தை வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கேற்ப  சமநிலைப்படுத்தும் சிறுதானியங்களைத் தேர்வுசெய்து சாப்பிடலாம். எனவே, உங்களுக்கு உடல்நல தொந்தரவுகள் இல்லாத பட்சத்தில், வாரத்தில் 3-4 நாள்களுக்கு சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை காலை மற்றும் பகல் வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...