Skip to main content

நாள் ஒன்றுக்கு ஒரு பேரீச்சம்பழம்தான் உணவு; பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த சகோதரர்கள்! - பின்னணி என்ன?

கோவாவில் பூட்டிய வீட்டில் இரண்டு பட்டதாரி சகோதரர்கள் இறந்துகிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்திருக்கும் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில், உயிரிழந்த சகோதரர்களின் பெயர்கள் முகமது ஜுபர் கான் (29) மற்றும் ஆஃபான் கான் (27). இவர்களின் தாய் ருக்ஸானா கான் மற்றும் தந்தை நசீர் கான். தந்தை கர்நாடகாவில் துணிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இதில், மூத்த சகோதரர் இன்ஜினியர். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இளைய சகோதரர் பி.காம் பட்டதாரி. இருவரும் சமீபத்தில் தங்களின் பெற்றோருடன் மார்கோ நகரத்துக்கு குடியேறினார்.

உயிரிழப்பு

மூத்த சகோதரரின் மனைவி தன் குழந்தைகளுடன், இவர்களுடன் மார்கோவுக்கு குடியேறவில்லை. மேலும், சகோதரர்கள் இருவரும் மார்கோவுக்கு குடியேறிய பிறகு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தனர். இதற்கிடையில், தன்னுடைய மனைவி மற்றும் மகன்களின் வித்தியாசமான உணவுமுறை காரணமாக நசீர் கான், அதே மார்கோ நகரத்தில் வேறொரு பகுதிக்கு தனியாகக் குடிபெயர்ந்தார். அதாவது, தாய் மற்றும் மகன்கள் என மூவரும் ஒரு நாளைக்கு ஒரேயொரு பேரீச்சம்பழத்தை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் தனியாகச் சென்ற நசீர் கான் தன் மனைவி, மகன்களை அவ்வப்போது காண வந்துகொண்டிருந்தார். இருப்பினும், வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த புதனன்று வீட்டினுள் சகோதரர்கள் இறந்து கிடப்பதாகத் தகவலறிந்த போலீஸார், உடனடியாக வீட்டுக்கு வந்து கதவை உடைத்து இறந்தவர்களின் உடலை மீட்டனர். அதோடு, மயக்க நிலையில் கிடந்த தாயை மீட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய், மன நலத்தைப் பரிசோதிக்க கோவா மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

காவல்துறை

பின்னர், சகோதரர்களின் இறப்புக்கான காரணம் குறித்து பேசிய தெற்கு கோவா காவல்துறை கண்காணிப்பாளர் சுனிதா சாவந்த், `பிரேத பரிசோதனையில் ஊட்டச்சத்துக் குறைபாடுதான் கரணம் என்று தெரியவந்திருக்கிறது' என்று கூறினார். இருப்பினும், தாயார் சிகிச்சையில் இருப்பதால் அவரின் வாக்குமூலத்துக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...