Skip to main content

``நான் உன்னை காதலிக்கிறேன்..." - எலான் மஸ்க் போல நடித்து மோசடி: 50,000 டாலரை இழந்த பெண்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல்யமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அந்த எலான் மஸ்க் போல Deepfake தொழில்நுட்பம் மூலம் கொரியப் பெண் ஏமாற்றப்பட்ட செய்தி ஒன்றை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டப் பெண் அந்த செய்தி நிறுவனத்திடம்,``இன்ஸ்டாகிராம் மூலம் எலான் மஸ்க் போன்ற அந்த நபர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. ஆனால், அந்த நபர், டெஸ்லா நிறுவனத்தின் அலுவலகம், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் போன்ற பல இடங்களின் புகைப்படங்களை அனுப்பினார்.டெஸ்லா நிறுவனம்

அவருடைய உண்மையான ஐடியிலிருந்து அவர் அனுப்பியதாகவே நான் நம்பினேன். மேலும், இதுபோல அவருடைய ரசிகர்களிடம் தொடர்ந்து பேசுவது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருடைய குழந்தைகள், டெஸ்லா நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ்க்கான அவருடைய சில திட்டங்கள் போன்றவைகளை பகிர்ந்துகொள்ள தொடங்கினார். மேலும், தென் கொரியாவில் புதிய டெஸ்லா நிறுவனத்தை தொடங்கவிருப்பதாகவும், அது தொடர்பாக தென் கொரிய அதிபரை சந்தித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் ஒருமுறை, நான் உன்னை காதலிக்கிறேன்...

அது உனக்கு தெரியுமா? எனக் கேட்டார். அந்த சமயத்தில், நான் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறை படித்தேன். அப்போது, இவர் எலான் மஸ்க் தானா என எனக்கு மீண்டும் சந்தேகம் வலுத்தது. அது தொடர்பாக அவரிடம் பேசியபோது, அவர் சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் செய்தார். அதில் அவருடைய முகம், குரல், உடல் மொழி என அனைத்தும் அப்படியே இருந்தது. அதனால் அவரை எலான் மஸ்க்தான் என நம்பினேன். அதன்பிறகுதான், அவருடைய தென் கொரியா நிறுவனத்தில் 50,000 டாலர் முதலீடு செய்வதற்கு கேட்டுக்கொண்டார்.மோசடி

மேலும், இந்த முதலீடு என்னை பெரும் செல்வந்தராக்கும் என்றும், அவருக்கு பிடித்தவர்களை செல்வந்தர்களாக்குவது மகிழ்ச்சியான செயல் எனக் கூறினார். தென்கொரிய டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர் வங்கி கணக்கு என ஒரு வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் செலுத்தக் கூறினார். நானும் அதுபோலவே செய்தேன். அதற்கு பிறகு அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் வரும் பின்னே... டெஸ்லா வரும் முன்னே...' பா.ஜ.க-வுக்குப் பிரசாரம் செய்ய வரும் எலான் மஸ்க்?!


http://dlvr.it/T60GF2

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...