Skip to main content

``நான் உன்னை காதலிக்கிறேன்..." - எலான் மஸ்க் போல நடித்து மோசடி: 50,000 டாலரை இழந்த பெண்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல்யமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அந்த எலான் மஸ்க் போல Deepfake தொழில்நுட்பம் மூலம் கொரியப் பெண் ஏமாற்றப்பட்ட செய்தி ஒன்றை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டப் பெண் அந்த செய்தி நிறுவனத்திடம்,``இன்ஸ்டாகிராம் மூலம் எலான் மஸ்க் போன்ற அந்த நபர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. ஆனால், அந்த நபர், டெஸ்லா நிறுவனத்தின் அலுவலகம், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் போன்ற பல இடங்களின் புகைப்படங்களை அனுப்பினார்.டெஸ்லா நிறுவனம்

அவருடைய உண்மையான ஐடியிலிருந்து அவர் அனுப்பியதாகவே நான் நம்பினேன். மேலும், இதுபோல அவருடைய ரசிகர்களிடம் தொடர்ந்து பேசுவது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருடைய குழந்தைகள், டெஸ்லா நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ்க்கான அவருடைய சில திட்டங்கள் போன்றவைகளை பகிர்ந்துகொள்ள தொடங்கினார். மேலும், தென் கொரியாவில் புதிய டெஸ்லா நிறுவனத்தை தொடங்கவிருப்பதாகவும், அது தொடர்பாக தென் கொரிய அதிபரை சந்தித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் ஒருமுறை, நான் உன்னை காதலிக்கிறேன்...

அது உனக்கு தெரியுமா? எனக் கேட்டார். அந்த சமயத்தில், நான் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறை படித்தேன். அப்போது, இவர் எலான் மஸ்க் தானா என எனக்கு மீண்டும் சந்தேகம் வலுத்தது. அது தொடர்பாக அவரிடம் பேசியபோது, அவர் சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் செய்தார். அதில் அவருடைய முகம், குரல், உடல் மொழி என அனைத்தும் அப்படியே இருந்தது. அதனால் அவரை எலான் மஸ்க்தான் என நம்பினேன். அதன்பிறகுதான், அவருடைய தென் கொரியா நிறுவனத்தில் 50,000 டாலர் முதலீடு செய்வதற்கு கேட்டுக்கொண்டார்.மோசடி

மேலும், இந்த முதலீடு என்னை பெரும் செல்வந்தராக்கும் என்றும், அவருக்கு பிடித்தவர்களை செல்வந்தர்களாக்குவது மகிழ்ச்சியான செயல் எனக் கூறினார். தென்கொரிய டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர் வங்கி கணக்கு என ஒரு வங்கி கணக்கை கொடுத்து அதில் பணம் செலுத்தக் கூறினார். நானும் அதுபோலவே செய்தேன். அதற்கு பிறகு அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் வரும் பின்னே... டெஸ்லா வரும் முன்னே...' பா.ஜ.க-வுக்குப் பிரசாரம் செய்ய வரும் எலான் மஸ்க்?!


http://dlvr.it/T60GF2

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...