Skip to main content

Racism: கப்பல் மோதி சரிந்த அமெரிக்க பாலம்... இந்திய பணியாளர்கள் மீது இனவெறி கார்ட்டூன்! - சர்ச்சை

கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி சிங்கப்பூர் கொடியுடன் புறப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு கப்பல், எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து `பிரான்சிஸ் ஸ்காட் கீ இரும்புப் பாலம் (2.6 கி.மீ நீளம்) மீது மோதியது. இந்த விபத்தில், 47 ஆண்டுகால பழமையான இந்தப் பாலம் இடிந்து விழுந்து நீருக்கு மூழ்கியது.சரக்குக் கப்பல் இரும்புப் பாலம் மீது மோதி விபத்து

இருப்பினும், பாலத்தின்மீது கப்பால் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கப்பலிலிருந்த 22 இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழு கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்ததால் பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கப்பலிலிருந்தவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

Wild footage of ship losing power twice, crashing into Baltimore’s Francis Scott Key Bridge, causing it to collapse. footage has been sped up pic.twitter.com/IXeiuGCUkG— Carl Zha (@CarlZha) March 26, 2024

இதனால், சரியான நேரத்தில் சமயோஜிதமாகச் செயல்பட்ட இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழுவை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டினார். அதோடு, மேரிலேண்ட் மாகாண ஆளுநர் வெஸ் மூர், இந்தியர்கள் அடங்கிய இந்தப் பணியாளர் குழுவினரை ஹீரோக்கள் என்றும் பாராட்டினர்.

இந்த நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Foxford Comics எனும் வெப்காமிக் நிறுவனம், கப்பல் பாலத்தின் மீது மோதிய சம்பவத்தை சித்தரித்து வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் வீடியோ பல்வேறு எதிர்ப்பை பெற்றுவருகிறது. காரணம், கப்பலிலிருந்து பணியாளர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த கார்ட்டூன் வீடியோவில், கப்பலினுள் இருக்கும் இந்தியர்கள் ஒரேயொரு வேஷ்டியை கட்டிக்கொண்டு மேலாடை எதுவும் இல்லாமலிருப்பது போன்றும், பின்னணியில் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொள்வது போன்றும் கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Last known recording from inside the Dali moments before impact pic.twitter.com/Z1vkc828TY— Foxford Comics (@FoxfordComics) March 26, 2024

இதனால், இனவெறி (Racism) நோக்கத்தில் இந்த கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சத்துவருகின்றனர். அதில் இணையதளவாசி ஒருவர், `இந்த துயர சம்பவத்துக்காக இந்தியக் குழுவினரைக் கேலி செய்வது வெட்கக்கேடானது' என விமர்சத்திருக்குகிறார். அதேபோல் மற்றொரு இணையதளவாசி, `சரக்குக் கப்பல்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு பணியாளர்களே அதிகம் இருக்கின்றனர் என்பது இவர்களுக்குத் தெரியுமா... இல்லையென்றால், அவர்கள் இதுபோன்ற இனவெறி கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் இன்னொரு இணையதளவாசி, `இனவெறி அடிப்படையிலான இந்தக் கேலிக்கூத்து மிகவும் மோசமான ரசனையில் இருக்கிறது' என விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஇனவெறி: ``இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடு..." - மிரட்டப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!


http://dlvr.it/T4qrFF

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...