Skip to main content

Racism: கப்பல் மோதி சரிந்த அமெரிக்க பாலம்... இந்திய பணியாளர்கள் மீது இனவெறி கார்ட்டூன்! - சர்ச்சை

கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி சிங்கப்பூர் கொடியுடன் புறப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு கப்பல், எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து `பிரான்சிஸ் ஸ்காட் கீ இரும்புப் பாலம் (2.6 கி.மீ நீளம்) மீது மோதியது. இந்த விபத்தில், 47 ஆண்டுகால பழமையான இந்தப் பாலம் இடிந்து விழுந்து நீருக்கு மூழ்கியது.சரக்குக் கப்பல் இரும்புப் பாலம் மீது மோதி விபத்து

இருப்பினும், பாலத்தின்மீது கப்பால் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கப்பலிலிருந்த 22 இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழு கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்ததால் பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கப்பலிலிருந்தவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

Wild footage of ship losing power twice, crashing into Baltimore’s Francis Scott Key Bridge, causing it to collapse. footage has been sped up pic.twitter.com/IXeiuGCUkG— Carl Zha (@CarlZha) March 26, 2024

இதனால், சரியான நேரத்தில் சமயோஜிதமாகச் செயல்பட்ட இந்தியர்கள் அடங்கிய பணியாளர் குழுவை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டினார். அதோடு, மேரிலேண்ட் மாகாண ஆளுநர் வெஸ் மூர், இந்தியர்கள் அடங்கிய இந்தப் பணியாளர் குழுவினரை ஹீரோக்கள் என்றும் பாராட்டினர்.

இந்த நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Foxford Comics எனும் வெப்காமிக் நிறுவனம், கப்பல் பாலத்தின் மீது மோதிய சம்பவத்தை சித்தரித்து வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் வீடியோ பல்வேறு எதிர்ப்பை பெற்றுவருகிறது. காரணம், கப்பலிலிருந்து பணியாளர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த கார்ட்டூன் வீடியோவில், கப்பலினுள் இருக்கும் இந்தியர்கள் ஒரேயொரு வேஷ்டியை கட்டிக்கொண்டு மேலாடை எதுவும் இல்லாமலிருப்பது போன்றும், பின்னணியில் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொள்வது போன்றும் கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Last known recording from inside the Dali moments before impact pic.twitter.com/Z1vkc828TY— Foxford Comics (@FoxfordComics) March 26, 2024

இதனால், இனவெறி (Racism) நோக்கத்தில் இந்த கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சத்துவருகின்றனர். அதில் இணையதளவாசி ஒருவர், `இந்த துயர சம்பவத்துக்காக இந்தியக் குழுவினரைக் கேலி செய்வது வெட்கக்கேடானது' என விமர்சத்திருக்குகிறார். அதேபோல் மற்றொரு இணையதளவாசி, `சரக்குக் கப்பல்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு பணியாளர்களே அதிகம் இருக்கின்றனர் என்பது இவர்களுக்குத் தெரியுமா... இல்லையென்றால், அவர்கள் இதுபோன்ற இனவெறி கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் இன்னொரு இணையதளவாசி, `இனவெறி அடிப்படையிலான இந்தக் கேலிக்கூத்து மிகவும் மோசமான ரசனையில் இருக்கிறது' என விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWYஇனவெறி: ``இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடு..." - மிரட்டப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!


http://dlvr.it/T4qrFF

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...