Skip to main content

``புற்றுநோயிலிருந்து மீண்டு வர கவனம் செலுத்துகிறேன்" பிரிட்டன் இளவரசி கேட்! | Kate Middleton

Kate Middleton reveals she has cancer:

"தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உள்ளேன்" என்று தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன்!

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கும் கேட் மிடில்டனுக்கும் 2011-ம் ஆண்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதால், அரச பணிகளை தற்போது இளவரசர் வில்லியம்ஸ் கவனித்து வருகிறார். வில்லியம்ஸ் கேட் மிடில்டன் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கேட் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் பெரிய பரபரப்பு கிளம்பியது. கேட், ஜனவரி மாதம் முதல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அரண்மனை தரப்பு செய்தி வெளியிட்டது.

cancer disease

அந்தச் செய்திக் குறிப்பில் ``இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. ஈஸ்டர் பண்டிகை வரை அரச கடமைகளைச் செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவை" என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் வதந்திகள் கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Kate Middleton பற்றிய சர்ச்சை தொடர்ந்து நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில் வீடியோ ஒன்றை கேட் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ``எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நான் புற்றுநோய்க்கான ஆரம்பகட்ட சிகிச்சையில் இருக்கிறேன். எங்கள் குடும்ப நலன் கருதி நாங்கள் இந்த விவரங்களை வெளியே சொல்லாமல் இருந்தோம்.

Kate with Harry

புற்றுநோய் பாதிப்பு எனத் தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டு வர எனக்கு சில காலம் பிடித்தது. தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உணர்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார். தற்போது கேட் மிடில்டனுக்கு 42 வயது ஆகிறது.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...