Skip to main content

``புற்றுநோயிலிருந்து மீண்டு வர கவனம் செலுத்துகிறேன்" பிரிட்டன் இளவரசி கேட்! | Kate Middleton

Kate Middleton reveals she has cancer:

"தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உள்ளேன்" என்று தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன்!

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கும் கேட் மிடில்டனுக்கும் 2011-ம் ஆண்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதால், அரச பணிகளை தற்போது இளவரசர் வில்லியம்ஸ் கவனித்து வருகிறார். வில்லியம்ஸ் கேட் மிடில்டன் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கேட் மிடில்டனை காணவில்லை என இங்கிலாந்தில் பெரிய பரபரப்பு கிளம்பியது. கேட், ஜனவரி மாதம் முதல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அரண்மனை தரப்பு செய்தி வெளியிட்டது.

cancer disease

அந்தச் செய்திக் குறிப்பில் ``இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. ஈஸ்டர் பண்டிகை வரை அரச கடமைகளைச் செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவை" என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் வதந்திகள் கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Kate Middleton பற்றிய சர்ச்சை தொடர்ந்து நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் வகையில் வீடியோ ஒன்றை கேட் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ``எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நான் புற்றுநோய்க்கான ஆரம்பகட்ட சிகிச்சையில் இருக்கிறேன். எங்கள் குடும்ப நலன் கருதி நாங்கள் இந்த விவரங்களை வெளியே சொல்லாமல் இருந்தோம்.

Kate with Harry

புற்றுநோய் பாதிப்பு எனத் தெரிந்தவுடன் எனக்கும் வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டு வர எனக்கு சில காலம் பிடித்தது. தற்போது நான் நலமாக இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும் உடல் அளவிலும் வலுவாக உணர்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார். தற்போது கேட் மிடில்டனுக்கு 42 வயது ஆகிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...