Skip to main content

Doctor Vikatan: மஞ்சள் காமாலை (jaundice) அறிகுறிகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாதா?

Doctor Vikatan: வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம், வாந்தி என இருந்த என் 10 வயது மகனுக்கு மஞ்சள் காமாலை (jaundice) வந்ததைக் கண்டுபிடிக்காமல் மாத்திரை மேல் மாத்திரைகளாகக் கொடுத்து நோய் அதிகமாகி சீரியஸ் ஆகிவிட்டது. மஞ்சள் காமாலை பாதிப்பை ஓரிரு நாள்களிலேயே தெரிந்துகொள்ள முடியாதா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

நீங்கள் உங்கள் மகனுக்கு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள வயிற்று உப்புசம், சோர்வு, தூக்கம் போன்ற பிரச்னைகள் தனித்தனியே இருந்தால் அது சாதாரண பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை குறிகுணங்களும் வாந்தியோடு சேர்ந்து இருக்கும்பட்சத்தில், அது கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கலாம் என்றே சந்தேகிக்க வேண்டும். சாமானியருக்கு அதை அப்படிப் பொருத்திப் பார்க்கத் தோன்றாதுதான். 

இத்தகைய அறிகுறிகள் சேர்ந்துவரும்போது தாமதிக்காமல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பதுதான் நல்லது. 10 வயதுச் சிறுவனுக்கு வயிற்று உப்புசம் வருவது தவறான விஷயம். அது எப்போதாவது வரலாமே தவிர, அடிக்கடி ஏற்பட்டால் நிச்சயம் வேறு ஏதோ பாதிப்பு இருப்பதாகவே அர்த்தம்.  கண்களில் நிற மாற்றம், சருமத்தில் நிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதன் மூலம் மஞ்சள் காமாலையாக இருக்குமோ என சந்தேகிக்கலாம்.

கல்லீரல்

எந்த அறிகுறியாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனையும் அவரது பரிந்துரையின் பேரில் சிகிச்சையும் எடுப்பதுதான் சரி. குழந்தைகள் விஷயத்தில் இதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நீங்களாக மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது தவறு. எந்தப் பிரச்னையானாலும் மருந்துக் கடையில் கேட்டு மாத்திரைகள் சாப்பிடும் வழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதுவேகூட கல்லீரலை பாதிக்கக்கூடியது.

இப்போதும் ஒன்றும் பிரச்னையில்லை. உங்கள் மகனை முறையான மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். சரியான சிகிச்சையின் மூலம் கல்லீரல் நோய்களை சரிசெய்ய முடியும். மற்ற நோய்களைப் போல கல்லீரல் நோய்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. நிறைய பேருக்கு புற்றுநோய் பாதித்த பிறகுதான் கல்லீரல் பாதிப்பே தெரியவரும்.

தண்ணீர்

இப்போதைய தலைமுறையில், கல்லீரலில் கொழுப்பு படியும் 'ஃபேட்டி லிவர்' பிரச்னை அதிகம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த விஷயத்திலும் கவனம் தேவை. குழந்தைகளுக்கு சுகாதாரத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியம். சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பது, சுகாதாரமற்ற நீரைக் குடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்லித் தர வேண்டும். தண்ணீர் மூலமும் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம் என்பதால் அதிலும் கவனம் வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...