Skip to main content

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் (Dates) சாப்பிடலாமா?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா... உலர் திராட்சை, அத்திப்பழம் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

எந்த உணவையும் சாப்பிட்ட பிறகு  ரத்தச் சர்க்கரை அளவு  எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பது 'கிளைசெமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index ). இந்த கிளைசெமிக் இண்டெக்ஸானது, டிரை ஃப்ரூட்ஸில் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.

உலர் பழங்களில், குறிப்பாக பேரீச்சம் பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் இருப்பதால் இவை ஆரோக்கியமானவைதான். பேரீச்சம் பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவுதான். ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எத்தனை எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக மிக முக்கியம்.

Dry Fruits

பழ ஜூஸ் அல்லது பிரெட் சாப்பிடுவதைவிட, உலர் பழங்கள் சாப்பிடுவது சிறந்தது என பல ஆய்வுகள் சொல்கின்றன். அந்த வகையில் 2 பேரீச்சம்பழம் சாப்பிடலாம். 100 கிராம் ஃப்ரெஷ் பேரீச்சம்பழத்தில் 75 கிராம்  அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஆனாலும், அதைச் சாப்பிடுவதால் கிளெசெமிக் இண்டெக்ஸ் அளவு அதிகம் கூடுவதில்லை.

2 பேரீச்சம் பழம் என்பதும் நீரிழிவு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  மூன்றுமாத ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி இருப்பவர்கள் எடுக்கக்கூடாது. உலர் திராட்சையைப் பொறுத்தவரை  அதில் 60 சதவிகிதம் சர்க்கரைச்சத்து இருக்கிறது. அதனால், அதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.

அதை தயிரில், ஓட்ஸ் கஞ்சியில், சாலட் தயாரிப்பில் என எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம். அதுவும் உங்கள் மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும்.

HbA1c

அத்திப்பழத்தைப் பொறுத்தவரை ஃப்ரெஷ்ஷான பழத்தில் கிளெசெமிக் இண்டெக்ஸ் ரொம்பவே குறைவு. அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் என்பதால் எடுத்துக்கொள்ளலாம். உலர் அத்திப்பழத்தோடு ஒப்பிடுகையில், ஃப்ரெஷ்ஷான பழம் சிறந்தது. உலர் அத்திப்பழத்தை ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...