Skip to main content

Deepfake videos: ``48 மணி நேரத்தில் நீரிழிவை குணப்படுத்தலாம்" வைரலான மருத்துவரின் வீடியோ!

`48 மணி நேரத்திற்குள் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து உள்ளது' என்று மூத்த நீரிழிவு மருத்துவர் வி மோகன் உத்தரவாதம் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பலரின் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என மருத்துவர் குற்றம் சாட்டியிருக்கிறார். 

திருநெல்வேலி இந்திய மருத்துவ சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அம்மருத்துவர் ஹிந்தியில் பேசுகிறார். அந்த மருந்து விளம்பரத்தில், மருத்துவர் மோகனின் உண்மையான காணொளியையும் அவரது குரலில் மாற்றப்பட்ட பதிப்பையும் இணைத்துள்ளனர். வல்லுநர்கள் ஏஐ உடன் இணைத்து இந்த வீடியோ (Deepfake videos) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து மோகன் நவம்பர் 2023-ல் தமிழ்நாடு காவல்துறை சைபர் செக்யூரிட்டி பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீடியோவை நீக்கினர். ஆனால், மீண்டும் அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவத்தொடங்கி இருக்கிறது என்கிறார் மருத்துவர். 

Doctor (Representational Image)

மருத்துவர் மோகன் இது குறித்து கூறுகையில், ``குரல் என்னைப் போலவே ஒலிக்கிறது; ஆனால், உதடு ஒத்திசைவு மோசமாக உள்ளது. இது போலியானது என்று நான் ஒரு செய்தியைப் பதிவிட்டேன். ஆனால், நான் மருத்துவம் பார்க்கும் நோயாளிகள் உட்பட எனக்குத் தெரிந்த பலர் அவர்களுக்கு மருந்தைப் பரிந்துரைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டனர்.

நீரிழிவு நோயிலிருந்து குணமடைவது சாத்தியம். ஆனால், அது மருந்துகள், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் மட்டுமே சாத்தியமாகுமே தவிர, வேறு எந்த மந்திர நிவாரணமும் சாத்தியமில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற போலி வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ சங்கங்கள் கூறுகின்றன. சில சந்தர்ப்பங்களில், வீடியோக்களில் வருவது உண்மையான மருத்துவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர். 

``வெள்ளை நிற கோட் அணிந்தவர்கள் பெரும்பாலும் AI-ஆல் உருவாக்கப்பட்ட பாட்கள் (Bot). `சர்க்கரை மிட்டாய் மற்றும் பெருஞ்சீரகம் கலந்த பாலுடன் கூடிய பாதாம், மூளை நோய்களை குணப்படுத்தும்'… `தாவர செல்களில் இருந்து உருவாக்கப்படும் மாயாஜால மாத்திரைகள் எடை இழப்பைத் தூண்டும்'… போன்ற போலி வீடியோக்கள் வலம் வருகின்றன.

அச்சுறுத்தும் AI (Deepfake videos)

இந்தப் போலி வீடியோக்களை உருவாக்குவது எளிதானது. இப்போது இலவசமாக ஸ்மார்ட்போன் ஆப்களில் கூட அவற்றை எளிதாக உருவாக்குவதற்கான கருவிகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற போலிச் செய்திகள் ஆபத்தை விளைவிக்கும். சம்பவம் குறித்து உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் அரசுக்குக் கடிதம் எழுதுவோம்.

இது குறித்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது என்று நாங்கள் உணர்கிறோம்’’ என்று ஐஎம்ஏ தமிழ்நாட்டின் தலைவர் டாக்டர் கே எம் அப்துல் ஹசன் கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...