Skip to main content

மது அருந்தினால் குளிர் விலகுமா? மருத்துவ விளக்கம்..!

குளிர்காலத்தில் அதிகமாக குளிராமல் இருக்க மது அருந்துவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். மது அருந்துவது குளிரைத் தவிர்த்து கதகதப்பைத் தருவதாகவும் நினைத்துக் கொள்வர். திரைப்படங்கள், டிவி, சோஷியல் மீடியா எனப் பலவற்றில் இதே கருத்துகளைப் பலர் தெரிவிப்பதைப் பார்த்திருப்போம்.

மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்குமா?

மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்குமா என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பாபுவிடம் கேட்டோம்.

”பொதுவாக குளிர்காலத்தில் உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் சற்று சுருங்கும். இவ்வாறு சுருங்குவதன் மூலம் வெளிப்புறத்தின் குளிர் உடலை பாதிக்காத வகையில் அதுவே பாதுகாக்கும்.

மது அருந்தும்போது உடலில் இரண்டு வகை மாற்றங்கள் ஏற்படும். ஒன்று மனது சம்பந்தப்பட்டது. அதாவது மது அருந்துவது சிலருக்கு ரிலாக்ஸான மனநிலையை உருவாக்கும். இதற்கு உடலிலுள்ள வெவ்வேறு சுரப்பிகளே காரணம். இரண்டாவது ரத்தக்குழாய்கள் சுருங்காமல் தடுத்து அவற்றைத் தளர்வாக்கும். உடல் குளிர்ந்து இருக்கும் சமயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்க வேண்டியது அவசியம்.

உடல் குளிர்ந்து இருக்கும் சமயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்க வேண்டியது அவசியம்.

மது அருந்தும்போது சிறிது நேரம் உடல் வெப்பமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்கும். உண்மையில் ரத்தக்குழாய்கள் விரிவடைவதால் உடலில் இருந்து அதிக வெப்பம் வேகமாக வெளியேறத் தொடங்கும். இது உடலின் வெப்பநிலையை மேலும் குறைத்து உடலுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர, சிலர் மதுபோதை அதிகமாகி தன்னிலை மறந்து ஆடைகளை அகற்றிவிடவும், சுயநினைவு இழந்து மயங்கி விழவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். குளிர்காலத்தில் மது அருந்துவது என்பது உடலுக்கு கூடுதல் தீங்கையே விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொது மருத்துவர் பாபு

பியர், ஒயின் போன்ற குறைந்த சதவிகிதத்தில் ஆல்கஹால் சேர்க்கப்படும் மதுவகைகளால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மது வகைகளை இரண்டாகப் பிரிக்கலாம். நொதிக்க வைத்து (Fermented) தயாரிப்பது. பார்லி, பழ வகைகள் போன்றவற்றைப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படுவது. பியர்,ஒயின் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றில் ஆல்கஹாலின் அளவு குறைவாக இருக்கும்.

இரண்டாவதாக, 'டிஸ்டிலேஷன்' (Distillation) முறையைப் பயன்படுத்தி மதுவில் உள்ள ஆல்கஹால் அளவு மேலும் அதிகரிக்கப்படும். அப்படி உருவாகும் மதுவகைகள் தான் ரம், விஸ்கி, வோட்கா போன்றவை. பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை. எனவே, அவற்றால் உடலுக்குத் தீங்கு இல்லை எனச் சொல்லி விட முடியாது.

பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை.

குறைந்த அளவு ஆல்கஹால் இருக்கும் மதுவகைகளை அதிக அளவில் அருந்த வாய்ப்புள்ளது. விஸ்கி, ரம் போன்ற வகைகளை ஒன்றிரண்டு கிளாஸ் கணக்கில் அருந்தினால் பியரை பாட்டில் கணக்கில் குடிக்க வாய்ப்புள்ளது‌. ஆல்கஹால் குறைவாக இருந்தாலும் அருந்தும் அளவு மிக அதிகமாக இருப்பதால் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும்” எனக் கூறினார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...