Skip to main content

Doctor Vikatan: காலை உணவுக்கு எனர்ஜி டிரிங்க், ஸ்மூத்தி எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான சாய்ஸா?

Doctor Vikatan:  கல்லூரி செல்லும் என் மகள் தினமும் காலை உணவு சாப்பிடுவதில்லை. அதற்கு பதில் எனர்ஜி டிரிங்க், ஸ்மூத்தி, ஜூஸ் என ஏதேனும் ஒன்றை குடித்துவிட்டுச் செல்கிறாள். இந்தப் பழக்கம் ஆரோக்கியமானதா... இவற்றைக்  குடிப்பதால் பாதிப்பு வருமா?

பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்  

டயட்டீஷியன் கற்பகம்

மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் என எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கும்,  லைட்டான உணவோடு தங்கள் நாளைத் தொடங்க விரும்புபவர்களுக்கும், எனர்ஜி டிரிங்க் மற்றும் ஸ்மூத்திகள் இன்று  விருப்பமான காலை உணவாக மாறிவிட்டன.

ஸ்மூத்திகள் நிச்சயமாக ஆரோக்கியமான தேர்வுதான், ஆனால் ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பொருள்கள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை கருத்தில் கொள்வது அவசியம். ஸ்மூத்தியில்  பொதுவாக சர்க்கரைச்சத்து  அதிகமாகவும், புரோட்டீன் சத்து குறைவாகவும் இருக்கும்.

எனவே, இதைக் குடித்ததும் உங்கள் ரத்தச் சர்க்கரை உயர்ந்து, அடுத்த ஒன்றிரண்டு மணிநேரத்தில் பசி  உணர்வை ஏற்படுத்தும் அல்லது மதிய உணவு நேரத்தில் அதிக பசியை ஏற்படுத்தும். காலை உணவுக்கு  ஸ்மூத்தி எடுத்துக்கொள்வதென முடிவெடுக்கும் முன், ஒரு தனிநபரின் உயரம், எடை, உடல்நல பாதிப்புகளைக் கருத்தில் கொள்வது அவசியம்.

தாவரப் பால்

காலை உணவுக்கு ஸ்மூத்தி எடுத்துக்கொள்ள விரும்புவோர், அதை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.  பாதாம் பால், தேங்காய்ப் பால், சோயா பால், சாதாரண பால், தயிர் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து ஸ்மூத்தி தயாரிக்கலாம்.  ஸ்மூத்தியில் பல்வேறு வகையான பழங்களைச் சேர்த்து சுவையையும் நார்ச்சத்தையும் அதிகரிக்கலாம்.

ஸ்மூத்தியில் புரோட்டீன் பவுடர், தயிர், நட்ஸ் அல்லது நட்ஸ் பட்டர் சேர்ப்பது அதை இன்னும் சத்தானதாக மாற்றும்.  நட்ஸ், ஆளி விதை, சியா விதை, சப்ஜா விதை ஆகியவற்றைச் சேர்க்கலாம். சர்க்கரையோ, சுவையை அதிகரிக்க தேன், நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியோ சேர்க்க வேண்டாம்.

300 முதல் 400 மில்லி அளவு ஸ்மூத்தி குடிப்பது நல்லது. அதைவிட அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாரத்தின் எல்லா நாள்களிலும் ஒரே மாதிரியான காலை உணவை  சாப்பிடாமல்  மாற்றி மாற்றிச் சாப்பிடுங்கள். அது உங்களுக்கு அனைத்துவிதமான சத்துகளும் கிடைக்க உதவும்.

சினைப்பை நீர்க்கட்டிகள், ஹார்மோன் பாதிப்புகள், நீரிழிவு, முறைதவறும் மாதவிடாய், வயிற்றுப் புண், அமிலம் எதுக்களிக்கும் பிரச்னை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் இருந்தால், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, ஸ்மூத்தி எடுத்துக்கொள்வது பற்றி முடிவெடுங்கள்.

எனர்ஜி டிரிங்க்

உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்கள், சுறுசுறுப்புடன் இயங்குபவர்கள், விளையாட்டில் ஈடுபடுவோர் போன்றோர் ஸ்போர்ட்ஸ் டிரிங்க் அல்லது எனர்ஜி டிரிங்க் எடுத்துக்கொள்ளலாம். அது ஆற்றலைக் கொடுக்கும். களைப்பின்றி வைக்கும். ஆனால் அதை உணவுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி, நல்ல கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புள்ள இட்லி, தோசை, ஆம்லெட் போன்றவற்றையும், கஞ்சி, ஸ்மூத்தி போன்றவற்றையும் காலை உணவுக்கு மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...