Skip to main content

வன்கொடுமையில் கர்ப்பம்... கருவைக் கலைக்க விரும்பினால் மருத்துவக்குழு பரிசோதனை அவசியம்!

பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட பெண் கர்ப்பத்தைக் கலைக்க விரும்பும் பட்சத்தில், அப்பெண்ணின் உடல்நிலையை ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 

பாலியல் வன்கொடுமையில் இருந்து மீண்ட 27 வயது பெண் தனது கர்ப்பத்தைக் கலைக்க உத்தரவு கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா விசாரித்தார்.

பாலியல் வன்கொடுமை

பொதுவாகவே 1971 மருத்துவக் கருக்கலைப்பு சட்டப் பிரிவு (Medical Termination of Pregnancy Act, 1971) 3-ன் படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தைக் கலைப்பதற்குத் தடை உள்ளது. மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண் கடுமையான மன அதிர்ச்சியில் இருந்ததார் எனவும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் விதியில் உள்ள சில நிபந்தனைகளின் கீழ் 20 முதல் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க முடியும் என்றும் தெரிவித்தார். எனவே, பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளிக்கும்படி கேட்டு இருந்தார்.

இது குறித்து நீதிபதி பட்டாச்சார்யா அளித்த தீர்ப்பில், ``நீதிமன்றம் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தது அல்ல. 27 வயதான மனுதாரரின் உடல்நிலையை ஆய்வுசெய்ய மாநில அரசு மருத்துவ வாரியத்தை (Medical Board) அமைக்க வேண்டும். 

மருத்துவக் குழுவில் குறைந்தது இரண்டு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அவர்களின் துறையில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களாக இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்களுக்கான மருத்துவத் துறையையும் , மற்றொருவர் குழந்தைகளுக்கான மருத்துவத் துறையையும் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

court order -Representational Image

மனுதாரரின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கான சாதக பாதகங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பிப்ரவரி 2-ம் தேதி இது தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவக் குழுவை விரைவில் அமைத்து மனுதாரரை இங்குள்ள எம்ஆர் பங்கூர் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 2-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...